search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்க்கடி"

    • படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு.
    • உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை.

    கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து கொன்றுள்ளது.

    குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை நாய் கடித்து குதறியுள்ளது.

    இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும்.
    • மூன்றே நாளில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 இடங்களிலும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    சென்னை மாநகரில் வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் தற்போது அதனை தெரு நாய்களை போல வெளியில் சுற்றவிட்டு வருகிறார்கள்.

    இது பல்வேறு இடங்க ளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.

     இதை தொடர்ந்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறை களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    இதனை முழுமையாக கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

    சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை யால் சிறுமியை நாய்கள் கடித்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாகவும் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர். வளர்ப்பு நாய்களை முறையாக பரா மரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
    • குமரி மாவட்டத்தில் தொடரும் சம்பவம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள், 55 பேரூராட்சி கள் 4 நகராட்சிகள், ஒரு மாந கராட்சி உள்ளது. இங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு தற்போது அச்சுறுத்தலாக உள்ளது தெருநாய்கள். இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாகர்கோவில் மாநகரை பொறுத்த மட்டில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் தெரு வீதிகளிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேசன்கள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நாய்களின் தொல்லை குறைந்த பாடில்லை. கிராமப்புறங்க ளிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இந்த நாய்கள் தெருக்க ளில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நாய் கடிக்கு அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர மும் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாய் கடிக்கு செலுத்தப்படும் தடுப்பூசி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டிய நிலையில் உள்ளனர். மாவட்ட எல்லை பகுதியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை வந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி 7 நாட்கள் கழித்த பிறகு 2-வது தடுப்பூசி, 21 நாட்கள் கழித்த பிறகு 3-வது தடுப்பூசி என 7 தடுப்பூசிகள் நாய்க்கடிக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

    ஆனால் இங்கு போதுமான தடுப்பூசி இல்லாத தால் பொதுமக்கள் தற்பொழுது பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாய்க்கடி தடுப்பூசியை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்த நடவடிக்கை எடுப்பதுடன் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×