என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. பிரமுகர்"

    • அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா விசாரணை.
    • துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் புனியம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், பா.ஜ.க.வில் உள்ளூர் நிர்வாகியாக இருக்கிறார்.

    அவருடைய நண்பர் சந்தோஷ். கட்டிட ஒப்பந்த தாரரான அவர் பல புதிய கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். அவ்வாறு மாதமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டு கட்டிடத்திற்கு ராதா கிருஷ்ணனை நேற்று இரவு அழைத்துச் சென்றார்.

    அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சந்தோஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராதாகிருஷ்ணனை சுட்டார். இதில் அவரது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இந்தநிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சத்தம் வந்த கட்டிடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். சந்தோஷ் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார்.

    உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். ராதாகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்தோசை கைது செய்தனர்.

    அப்போது அவர் குடி போதையில் இருந்துள்ளார். இதனால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ராதா கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின் றனர்.

    சந்தோஷ் எதற்காக ராதாகிருஷ்ணனை துப்பாக் கியால் சுட்டு கொன்றார்? என்பது உடனடியாக தெரிய வில்லை. அவர் பா.ஜ.க.வில் இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் முதற்கட்ட விசா ரணையில் அவரது கொலைக்கு அரசியல் காரணம் இல்லை என்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொலைக்காக காரணம் குறித்து சந்தோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சந்தோஷ் வைத்திருந்த துப்பாக்கி காட்டு பன்றிகளை சுடுவதற்கு பயன்படுத்தக்கூடியது ஆகும். அவர் காட்டுப்பன்றிகளை சுடும் குழுவில் இருப்பதால், துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார். அதனை பயன்படுத்தி நண்பரான ராதாகிருஷ்ணனை சந்தோஷ் கொலை செய்து விட்டார்.

    பா.ஜ.க. பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை தாக்கியதாக மனோஜ் மீது புகார் கூறப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயம்குளம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது45). பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான இவர் கப்பில் கிழக்கு பகுதி பூத் தலைவராக இருந்து வந்தார். இவரது வீட்டின் அருகே தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை தாக்கியதாக மனோஜ் மீது புகார் கூறப்பட்டது.

    அதன்பேரில் காயம்குளம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கடந்த 22-ந்தேதி கைது செய்தனர். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மனோஜ் மறுநாள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கொலைமுயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இருந்தபோதிலும் அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    அதன்பிறகு வீட்டில் இருந்துவந்த மனோஜ் மீது சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இணையதளத்தில் பலர் சைபர் தாக்குதல் நடத்தினர். மேலும் அவர் மீது ஜாமீனில் வெளிவராத முடியாக பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில் தன்னுடைய வீட்டில் இருந்த மனோஜ் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். தனக்கு எதிரான சைபர் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் மனோஜ் வேதனையில் இருந்துவந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே தன் மீதான சைபர் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட மனவேதனையிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி பா.ஜ.க. பிரமுகர் பலியானார்.
    • மதுரை நோக்கி காரில் சென்றபோது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.



    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் கதிரேசப்பாண்டியன். இவர் பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். நேற்று கதிரேசபாண்டியனும், அவரது மனைவியும் மதுரை நோக்கி காரில் சென்றனர். காரை கதிரேசபாண்டியன் ஓட்டி சென்றார். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்றபோது தேனியில் இருந்து ராஜ பாளையம் நோக்கி வந்த லாரி மீது, கார் நேருக்கு நேர் மோதியது.

    இதில் கதிரேசப் பாண்டியன், அவரது மனைவி ராமலட்சுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் கதிரேசபாண்டியன் இறந்துவிட்டார். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை நகராட்சியில் பா.ஜ.க. பிரமுகர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    • நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    தி.மு.க. கவுன்சிலர் மணி முருகன்:- ெரயில்வே பீடர் ரோட்டில் புதிது புதிதாக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகாலை முதலே மதுபானங்கள் விற்பனை நடப்பதாகவும், மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு அந்த சாலையிலேயே போட்டு விட்டு சென்று விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    எஸ்.பி.கே. பள்ளி செல்லும் பாதையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து கறிக்கடை நடத்தி வருகிறார். அவர் குப்பைகளை ரோட்டில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார். இதுபற்றி கேட்டால், நான் பி.ஜே.பி.க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்.

    இதற்கு பா.ஜனதா கவுன்சிலர் முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜனதா கட்சியினரை அவன், இவன் என்று ஒருமையில் கூற வேண்டாம். உங்கள் குறைகளை கூறுங்கள். ஒருமையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், 2 கவுன்சிலர்களையும் அமைதியாக இருக்கும்படி கூறினார்.

    பின்பு கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகரசபை தலைவர் உறுதி அளித்தார்.

    ×