என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் பலாத்காரம்"
- அமெரிக்க பெண்ணுக்கு அவர் களறி பயிற்சி அளித்திருக்கிறார்.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தற்காப்பு கலை பயிற்சி மையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களில் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள கேரள மாநிலத்தினர் மட்டுமின்றி, சுற்றுலா வரக்கூடிய வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் செல்கிறார்கள்.
அதேபோன்று கண்ணூர் டவுன் அருகே செயல்பட்டு வரும் பாரம்பரிய கலைகள் கற்பித்து கொடுக்கும் மையம் ஒன்றுக்கு களரி பயிற்சி பெறுவதற்காக 43 வயது மதிக்கத்தக்க அமெரிக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார். அந்த மையத்தை கண்ணூர் மாவட்டம் தோட்டா பகுதியை சேர்ந்த சுஜித்(வயது53) என்பவர் நடத்தி வந்திருக்கிறார்.
அந்த மையத்தில் களரி பயிற்சி ஆசிரியராகவும் சுஜித் செயல்பட்டுள்ளார். இதனால் அமெரிக்க பெண்ணுக்கு அவர் களறி பயிற்சி அளித்திருக்கிறார். இதனை பயன்படுத்தி அமெரிக்க பெண்ணை சுஜித் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண், கண்ணூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், களரி ஆசிரியர் சுஜித்தை கைது செய்தனர். இவர் இதுபோன்று பயிற்சிக்கு வந்த வேறு பெண்களிடமும் தவறாக நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்பு சுஜித்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த அமெரிக்க பெண்ணை பயிற்சி மையத்தின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- முதியவர் ஜெயிலில் அடைப்பு
- அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்
வேலூர்:
காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது மனநலம் குன்றிய பெண்.
கடந்த 5 ஆண்டுகளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் தனியாக இருந்தார். அவரது எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52).
மனம் நலம் குன்றிய பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, கோவிந்தசாமி அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து உள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து கோவிந்தசாமி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சாத்தூரில் திருமணமான பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் மன்னா ர்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பெர்சியாள் (வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார்.
திருமணமான இவர் கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் பெர்சியாளுக்கும், செட்டுடையார்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதால் பெர்சியாள், கிருஷ்ணகுமாருடன் நெருங்கி பழகினார். இதில் அவர் கர்ப்பமானார். அதன் பின் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெர்சியாளுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அந்த குழந்தை இறந்தது.
இதற்கிடையே பெர்சியா ளை பார்க்க வந்த கிருஷ்ணகுமார் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், மறந்து விடுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து பெர்சியாள், கிருஷ்ணகுமார் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்