search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் எரிப்பு"

    • மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
    • பைக்கை தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பைக் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து வருகிறது.

    செல்லக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பெற்றோரும் தங்கள் மகன்கள் கேட்கும் பைக்கை வாங்கி கொடுக்கிறார்கள்.

    ஆனால் மகன்களோ அந்த பைக்கில் விபரீத சாகசங்கள் செய்து பிரச்சினையில் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.

    மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த ஷா ஆலம் என்பவர் தனது மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது மகனோ அந்த பைக் மூலம் பந்தய போட்டிகளில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டதோடு, வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார்.

    இதனால் மகனின் பாதுகாப்பு பற்றி கவலையடைந்த அவர், மகனுக்கு அறிவுரை கூறி திருத்த முயன்றார். ஆனால் அவரது மகன் தந்தையின் அறிவுரைகளை கண்டுகொள்ளாததால் மகனுக்கு பாடம் புகட்ட ஷா ஆலம் முடிவு செய்தார்.

    அதன்படி ஷா ஆலம் தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை அவரே தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    அந்த வீடியோ வைரலானதோடு ஷா ஆலமின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பணப்பாண்டி (வயது 43). தி.மு.க. நிர்வாகி யான இவர் விருதுநகர் நகராட்சியில் 35-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு தப்பினார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உறவினர் கைது

    சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது அதே பகுதியில் வசிக்கும் கவுன்சிலர் பணப்பாண்டியின் உறவினர் காளீஸ்குமார் (38) என தெரியவந்தது. தேர்தல் பிரச்சினையில் காளீஸ் குமார் இதில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×