search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறி விழுந்த வாலிபர்"

    • நகர்பகுதி யில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மேல்மலை கிராமமான பூண்டியில் தங்கியிருந்தனர்.
    • நீர்தேக்கத்தில் அவர்கள் சுற்றிபார்த்து கொண்டிருந்த போது தவறிவிழுந்த தனுஷ் நீரில் மூழ்கினார்.

    கொடைக்கானல்:

    சென்னை வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(25). இவர் சென்னை யில் தனியார் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நகர்பகுதி யில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மேல்மலை கிராமமான பூண்டியில் தங்கியிருந்தனர்.

    அங்கிருந்து கூக்கால் நீர்த்தேக்கம் செல்ல முடிவு செய்தனர். நீர்தேக்கத்தில் அவர்கள் சுற்றிபார்த்து கொண்டிருந்த போது தவறிவிழுந்த தனுஷ் நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் கொடுத்த தக வலின்பேரில் கொடைக்கா னல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீர்தேக்கத்தில் பெரும்பகுதி சேறும் சகதியுமாக உள்ளதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும் படகு மூலம் தீயணைப்பு த்துறையினர் நேற்று 2-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இன்று 3-ம் நாளாக தனுஷ் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுடன் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களும் களம் இறங்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் சகதி நிறைந்த தண்ணீரிலும் நீச்சல் அடித்து செல்லும் தன்மை கொண்டவர்கள்.

    தனுசின் தந்தை சென்னை மற்றும் சேலத்தில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் தனுஷ் என்ற மகன் மட்டும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் தனுசுக்கு பெண்பார்த்து வந்துள்ள னர். இந்நிலையில் நண்பர்க ளுடன் சுற்றுலா வந்த தனுஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் அத்தாணி ரோடு பகுதியில் பொரிக் கடை எதிரே கெட்டி விநாயகர் கோவில் பிரிவு உள்ளது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ேராட்டின் குறுக்கே கழிவுநீர் வடிகால் கட்டும் பணி நடந்தது.

    அந்த பணி தற்போது நிறைவு பெற்று அந்த 2 பகுதிகளிலும் திட்டுகள் அமைக்கப்பட்டது.

    ஆனால் கழிவுநீர் செல்லக்கூடிய சாலை வரை அந்த தடுப்புச் சுவரை கட்ட வேண்டும் இல்லை யென்றால் பேரிகேட் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பக்க வாட்டில் நிலை தடுமாறி அந்த பெரிய கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார். இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் வர வில்லை.

    இதனால் அவரை மேலே தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லாமல் சிறிது நேரத்துக்கு பிறகு அவரே மேலே ஏறி சாலையில் சென்றவர்களை அழைத்தார். இதையடுத்து பொதுமக்கள் கழிவு நீர் வடிகாலில் இருந்த இருசக்கர வாகனத்தை மேலே தூக்கினர்.

    இதையடுத்து அங்கு இருந்து வீடு திரும்பி னார் என்பது குறிப்பி டத்தக்கது.

    எனவே இதனை கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க நெடுஞ் சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×