என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Educational Qualification"

    • வி.ஏ.ஓ. பதிவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகங்கை

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் சந்தான கிருஷ்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    விவசாயத்துறை பணியான அக்ரி ஸ்டாக் பணியை செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்களை கட்டாயப்படுத்த கூடாது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட செயல்படாத சிம்கார்டுகளை திரும்ப பெற்று அதற்கு பதிலாக அனைவருக்கும் இணையதள சேவை செலவின தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பதவியை மீண்டும் டெக்னிக்கல் பதவியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருவாய் கணக்குகள் தனியாக உள்ளதற்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சான்றுகள் வழங்குதல் தொடர்பான களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு மூலம் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், மாநில செயலாளர்கள் செல்வன், பாண்டியன், விஜயராஜ், மாநில அமைப்பு செயலாளர் அசோக்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தென்றல் தமிழோசை நன்றி கூறினார்.

    • சி.ஜி.எல் பணியிடங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பாடக் குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு கள் நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மத்திய அரசு தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டப்படி ப்பு தரத்திற்கான (சி.ஜி.எல்) பணியிடங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தேர்விற்கான வயது வரம்பு 18 வயது முதல் 32 வரை ஆகும். பணியிடத்திற்கு ஏற்றவாறு வயதுவரம்பு மாறும்.

    இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த தேர்வுக்கான விழிப்புணர் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை ) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பாடக் குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு கள் நடக்கிறது.

    இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்- அப் எண்ணிற்கு அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×