என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தர்பூசணி"
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளார்.
- தற்போது மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போரூர்:
கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் உடல் சூட்டை தணிக்கும் பழ ஜுஸ், மோர், தர்பூசணி, கிர்ணிபழம், இளநீர் உள்ளிட்டவற்றை அதிகம் வாங்கி பருகுகிறார்கள். இதனால் தற்போது சாலையோரங்களில் ஏராமான குளிர்பான கடைகள் முளைத்து உள்ளன.
அதிகமானோர் வெயிலுக்கு இதமாக தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். இதனால் கடைகளில் தர்பூசணி வியாபாரம் களை கட்டி வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வரும். தினமும் 120டன்னுக்கு மேல் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளார். தற்போது மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது தினமும் 120 டன்னுக்கு மேல் தர்பூசணிகள் விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள போதிலும் தர்பூசணி பழங்களின் விற்பனை இன்னும் எதிர்பார்த அளவு இல்லை. மொத்த விற்பனை கடைகளில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.7முதல் ரூ.10வரை மட்டுமே விற்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தர்பூசணி பழங்களின் விலை 3 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
- வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது.
போரூர்:
சென்னையில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆங்காங்கே கடைகளில் விற்கப்படும் இளநீர், சர்பத், தர்பூசணி, ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.
இதில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படும் எலுமிச்சை பழம் உடலுக்கு நல்லது என்பதால் பொதுவாகவே கோடை காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் கூடுர் மற்றும் நெல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 50 முதல் 60 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையிலும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் 3 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழம் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது. கோடை வெயிலையொட்டி ஏராளமான குளிர்பான கடைகள் சாலை யோரங்களில் முளைத்து உள்ளன.
- தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துவரும் வேளையில், விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
- தர்பூசணி அளவில் சற்று பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு பழமும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது.
சென்னை:
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, சென்னையில் பல்வேறு இடங்களில் தர்பூசணிக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களாக நண்பகல் வேளைகளில் வெயில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்கள் தாகத்தைத் தணிக்க குறைந்த விலை பழமான தர்பூசணியை நாடத்தொடங்கி யுள்ளனர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் தர்பூசணி கடை வைத்திருக்கும் வியாபாரி கூறுகையில், "தர்பூசணி பழங்களின் விற்பனை மார்ச் - ஏப்ரல் மாதங்களில் விறுவிறுப்படையும். ஆனால், உடல் வெப்பத்தைக் குறைத்து, சீரான வெப்ப நிலையில் வைக்கிறது. மேலும், வைட்டமின் ஏ, சி இருப்பதால் உடல் சோர்வைப் போக்கக்கூடியதாக விளங்குகிறது.
தமிழகத்தில் சீர்காழி, சிதம்பரம், திண்டிவனம், திருவண்ணாமலை, வேலூர், ஆந்திர மாநிலம் சத்திய வேடு, நாகலாபுரம், மதனப்பள்ளி, சித்தூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வருகின்றன' என்றார்.
தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துவரும் வேளையில், விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு டன் தர்பூசணி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.15- க்கும், சில்லரை விற்பனையில் கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த முறை தர்பூசணி அளவில் சற்று பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு பழமும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது. எடைக்கு தகுந்தாற்போன்று, ஒரு பழத்தின் விலை ரூ.120 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.
- பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
- இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.
இன்று 20 லாரிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-
இந்த ஆண்டு விவசாயிகள் வழக்கத்தை விட தர்பூசணியை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர். பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி பழங்களை அறுவடை செய்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தர்பூசணி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தர்பூசணி உற்பத்தி 2 மடங்காக அதிகரித்து உள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் தர்பூசணி விலை கணிசமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாகர்கோவில் மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.
தற்போது ஒரு கிலோ பலாப்பழம் ரகத்தை பொறுத்து ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.
தற்போது 400 முதல் 500 எண்ணிக்கையில் மட்டுமே பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. அடுத்த மாதம் முதல் இதன் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
- கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.
- ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.
உடுமலை :
உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்று ப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.
கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சி யாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.
அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்ப ட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்