என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இருதயம்"
- இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
- மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருத்துறைப்பூண்டி:
டெல்டா ரோட்டரி சங்கம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணி பல்நோக்கு மருத்துவமனை இணைந்து திருத்துறைப்பூண்டி பகுதியில் இருதய நோய் கண்டறியும் முகாம் நடத்தியது.
இதில் 450 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனல ட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்ப ட்டனர்.
இந்த முகாமிற்கு டெல்டா ரோட்டரி சங்கத்தின் மருத்துவ சேர்மன் மணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். டெல்டா ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவர் கணேசன் மற்றும் முன்னாள் தலைவர்கள் தலைவர் தேர்வு மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- இருதயத்தை பாதுகாக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் என எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
- மாரடைப்பை தடுக்க 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.
ராமநாதபுரம்
உலக இருதய தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் தொடங்கிய ஊர்வலத்தை எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் தொடங்கி வைத்தார்.
பேராசிரியர்கள் ராமதாஸ், லீனா, சரவணன் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். இருதயத்தின்அவசியம், அதனை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளுடன் வழிவிடுமுருகன் கோவில், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக வந்தனர்.டாக்டர் ஹனுமந்தராவ் பேசியதாவது:-
இருதய நோய் பாதிப்பால் ஆண்டு தோறும் அதிகளவில் இறக்கின்றனர். இருதயத்தை பாதுகாக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும். மாரடைப்பை தடுக்க 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். இயற்கை உணவு வகைகளை சாப்பிட வேண்டும். தினமும் உடற்ப யிற்சி, யோகா, மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்