என் மலர்
நீங்கள் தேடியது "சிவாஜி சிலை"
- மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
- அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது,
மகாராஷ்டிரா மாநிலம் ஆலியாநகர் மாவட்டம் ரஹுரி பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் புகுந்து கும்பல் ஒன்று, பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், கும்பல் வலுக்கட்டாயமாக தர்காவிற்குள் நுழைந்து, பச்சைக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக காவி கொடியை ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிலர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிடுவதை கேட்க முடிகிறது. மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
"அவர்கள் தர்காவைத் தாக்கி அதன் மீது காவி கொடியை ஏற்றும்போது, போலீசார் அங்கேயே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடுக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை" என சம்பவத்தின்போது அங்கிருந்த ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் (மார்ச் 26) அன்று நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத்த அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
- சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
- சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
"சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயரோ அரசரோ இல்லை. நமக்கு அவர் தெய்வம். இன்று, நான் அவரது காலடியில் தலை வணங்குகிறேன், என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் மதிப்புகள் வேறுபட்டவை. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை."
"சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ஆனால் அவரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை. நான் இங்கு இறங்கியதும், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன், இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."
"கடந்த பத்து ஆண்டுகளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா திறன் மூலம் கிடைக்கும் பலன்களை இந்த மாநிலமும், முழு நாடும் பெறுவதை உறுதிசெய்வதற்காகவே வத்வான் துறைமுகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது," என பிரதமர் மோடி தெரிவித்தார்.
- மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி சிலை இடிந்து விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டின. கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
- 'இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது'
- 'தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்'
மகாராஷ்டிரா மாநிலம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை எட்டே மாதத்தில் கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, இந்த அசம்பாவிதத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி எதிர்க்கட்சிகள் இன்று தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே, மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, ராமர் கோவில், புதிய பாராளுமன்ற கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவது, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது என இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது. சிலை உடைந்ததற்காக மோடி கேட்ட மன்னிப்பைக் கவனித்தீர்களா? அந்த மன்னிப்பில் ஆணவம் தெரிகிறது. மோடி மன்னிப்பு கேட்டது எதற்காக?, தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.அதை மகாராஷ்டிர மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாநிலத்தில் பல இடங்களில் மன்னர் சிவாஜியின் சிலை உள்ளது , ஆனால் மால்வனில் உள்ளது கீழே விழுந்துள்ளது, இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழலை மக்கள் உணர்கின்றனர். இது சிவாஜி மகாராஜ் -கு இழைக்கப்பட்ட அவமானம், சிவாஜி மன்னர் மட்டும் கிடையாது, அவர் எங்களுக்கு கடவுள், சிவாஜியை அவமதித்தவர்களை மகாவிகாஷ் கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்கும் என்று தெரிவித்தார்.
- எல்லா ஒப்பந்தங்களும் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது?
- விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை என்றார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்கும் ஒப்பந்தம் தகுதி இல்லாத ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு கொடுக்கப்பட்டதா அல்லது இந்த முறைகேட்டில் நடந்த ஊழலுக்கு என்ன வருத்தம் என பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.
சிவாஜி சிலை சேதமடைந்த விவகாரத்தில் சிவாஜியிடம் மட்டும் மன்னிப்பு கேட்டதை ஏற்கமுடியாது. மகாராஷ்டிரா மாநில மக்கள் ஒவ்வொருவரிடமும் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்.
எல்லா ஒப்பந்தங்களும் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது? ஏன் இரண்டு பேருக்காக மட்டும் ஆட்சி நடத்துகிறார் என மோடி பதில் சொல்ல வேண்டும்.
போராட்டங்கள் நடத்தியதால் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை.
பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றுக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..
வடகிழக்கு மாநிலத்தை பா.ஜ.க.வே தீயிட்டுக் கொளுத்தியதால் உள்நாட்டுப் போர் போன்ற சூழலை எதிர்கொள்ளும் மணிப்பூருக்கு மோடி செல்லவில்லை.
சிறு, குறு தொழில்கள் 2 பேரின் நலனுக்காக முடிக்கப்பட்டன. அதானி, அம்பானி குழுக்களால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் சித்தாந்தத்தின் அடித்தளமும் டி.என்.ஏ.வும் உள்ளது. இன்றைய அரசியல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை.
நாங்கள் சமூக முன்னேற்றத்தை விரும்புகிறோம். அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் வளர்ச்சியை பா.ஜ.க. விரும்புகிறது என தெரிவித்தார்.
- பொதுமக்கள் வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் மண்டபத்தின் உள்பகுதியிலேயே சாலையை பார்க்கும் வகையில் சிவாஜியின் கம்பீரமான சிலை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
- சிலை திறப்பு விழா சிவாஜி பிறந்த நாளான நாளை (அக்டோபர் 1-ந்தேதி) நடைபெறுகிறது.
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு மெரினா கடற்கரையில் ஆள் உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் சாலையின் நடுவே சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெரினா கடற்கரை பகுதியில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டது.
அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் கட்டியது. இந்த மணிமண்டபத்தில் வெண்கல சிலையை நிறுவினார்கள். மணிமண்டபத்தில் சிவாஜியின் அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மணிமண்டபத்தின் நடுவே சிலையை அமைத்திருந்தனர். வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத வகையில் சிலை இருந்தது.
இந்த நிலையில் சிவாஜி சிலையை மணிமண்டபத்தில் இடம் மாற்றி வைத்துள்ளனர். பொதுமக்கள் வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் மண்டபத்தின் உள்பகுதியிலேயே சாலையை பார்க்கும் வகையில் சிவாஜியின் கம்பீரமான சிலை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா சிவாஜி பிறந்த நாளான நாளை (அக்டோபர் 1-ந்தேதி) நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.