என் மலர்
நீங்கள் தேடியது "கிணற்றில் பிணம்"
- சந்தேகம் அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். விவசாயி. இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று இவரது மருமகன் விஜயகுமார் என்பவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் மோட்டார் இரைத்துக் கொண்டிருக்கும் போது, குப்பன் கிணற்றில் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார்.
தகவல் அறிந்த ரோஷணைபோலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று கிணற்றில் இறந்து கிடந்த குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரோஷணை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
- சாயம்மாள் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- அருகில் உள்ள மூங்கப்பாடி முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் கருப்பூரை அடுத்த மூங்கப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சாயம்மாள் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்ப வில்லை. இதனால் உறவி னர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது அருகில் உள்ள மூங்கப்பாடி முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கருப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெரியசாமி சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
- கிணற்றில் பெரிய சாமி உடல் மிதப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்கல்பூண்டி பகுதி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 65 ) இவரது மனைவி கன்னி யம்மாள். இவர்களுக்கு குழந்தை இல்லை. சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பெரியசாமி நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது உறவினர்கள் பெரியசாமியை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எங்கு தேடியும் பெரியசாமி கிடைக்கவில்லை.
கீழ்கல்பூண்டி அருகில் உள்ள கிணற்றில் பெரிய சாமி உடல் மிதப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரிய சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிரி பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
- விவசாய கிணற்றில் கிரி பிணமாக மிதந்தான்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் கிரி (வயது13) இவர் பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் வேலை செய்து வருகிறார். தாய் மாலாவும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த கிரி திடீரெனமாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் கிராமம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் நேற்று மாலை பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர், இந்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் இன்று காலை அதேகிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் கிரி பிணமாக மிதந்தான்.இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் அடுத்த அரசங்குப்பம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வீர பாண்டியன் (வயது 37). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
வீர பாண்டியன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து நேற்று கீழ்வீதி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் உடல் மிதப்பதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் இறந்த நபர் வீரபாண்டியன் என்பது தெரியவந்தது.
உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.