என் மலர்
நீங்கள் தேடியது "செயல்பாடுகள்"
- சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் கருதப்பட்டு வருகிறது.
- கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செ யலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தஞ்சாவூர் அருகே நெடார் ஆலங்குடி கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரம்மபுரீ ஸ்வரர், நித்திய கல்யாணி அம்பாள் சன்னதிகள் உள்ளன.
இக்கோவில் முதன்மை திருக்கோயில் என்ற வகைபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பா ட்டில் உள்ளதுஇக்கோவிலில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.
சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் மக்களிடையே கருதப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதுபோ ன்ற கோவில்களை அதன் பழமை மாறாது காப்பது அரசின் கடமையாகும்.
இக்கோவிலை புதுப்பிப்ப தற்கும், திருப்பணிகள் செய்வதற்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டன.
- உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை தாலுகா, ஜாம்புவானோடை வடகாடு தொடக்கப்பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணன், உதவி ஆசிரியர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் மகாலட்சுமி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
பயிற்சியில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள், காகித மடிப்புகலை, பாடல்கள், நடனம், மேஜிக், கைரேகை, ஓவியங்கள், உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல் போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.
பயிற்சியின் முதன்மை கருத்தாளர்களாக வானவில் மன்ற லாவண்யா மற்றும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் மங்கை, கல்பனா ஆகியோர் செயல்பட்டனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- 328 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நெல்கொள்முதல் பதிவேடு, சாக்குகள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டையும், நெல் மூட்டை எடை எந்திரத்தின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முத்துப்பேட்டை தாலுகா கற்பகநாதர்குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடர் மையத்தில் சாய்தளம், குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர், கள்ளிக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு வருவாய் துறையின் பயிர் சாகுபடி பதிவேட்டில் சரியாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் இதுவரை 328 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8425 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகையாக ரூ. 91 கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 360 சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.