search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டை"

    • இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழிலுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது.
    • இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழி லுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. மாட்டுவண்டிகள் தற்கால குழந்தைகள் காண்பதற்கே அரிதாகி விட்டது.

    கடந்த 20 ஆண்டுகளில் அறிவியல் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகளால் மற்ற துறைகளைப் போலவே, வேளாண்மைத் துறையிலும் நவீன கருவிகள், எந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனால், ஏர் உழுதல், தண்ணீர் இரைத்தல், நாட்டு நடவு செய்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல், விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லல், கதிரடித்து துாற்றி தானியங்களை பிரித்தெ டுப்பதல், வைக்கோல் சுற்றுதல் உள்ளிட்ட அனைத்து வேளாண்மை சார்ந்த பணிகளுக்கும், காளைகளையும், கட்டை மாட்டு வண்டிகளையும் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து தற்போது வழக்கொழிந்து போனது.

    குறிப்பாக, கட்டை வண்டிகளுக்கும் மாற்றாக, டிராக்டர், டெம்போ போன்ற வாகனங்களும், கதிர் அறுவடைக்கு எந்திரங்க ளுமே பயன்படுத்தப்படுகிறது.

    சமீப காலமாக, தமிழகத்தில் குக்கிரா மங்களிலும் கூட காளைகளை பூட்டி ஏர் உழவதும், கட்டை மாட்டு வண்டியில் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதும் பயன்பாட்டில் இல்லை. தற்கால குழந்தைகள் காண்பதற்கே கட்டை மாட்டு வண்டிகள் அரிதாகி விட்டது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதி கிரா மங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிரு கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவ்வப்போது தார்சாலையில் செல்லும் மாடு பூட்டிய கட்டை வண்டிகளை தற்கால குழந்தைகள் வியப்போடு பார்த்து செல்கின்றனர்.

    இதுகுறித்து பாரம்பரிய ஆர்வலர் கலைச்செல்வி கூறியதாவது:-

    தமிழக கிராமப்புற விவசாயிகளின் பாரம்பரிய சின்னமாக கட்டை மாட்டு வண்டிகள் திகழ்ந்து வந்தன. காலத்திற்கேற்ப நவீன கருவிகள், எந்திரங்கள், வாகனங்களின் வருகை மிகவும் அவசியம் என்ற போதிலும், நமது பாரம்பரிய சின்னமான கட்டை மாட்டு வண்டிகளின் பயன்பாடு மற்றும் வாகனங்களின் பரிணாம வளர்ச்சியில் இதன் பங்கு குறித்து, தற்கால குழந்தைகள் அறிந்து கொள்வதற்காகவது, கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து மறைந்து போகாமல் காக்க வேண்டியது அவசியமாகும்.

    களைச்செடிகள், கதிர் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல், அரிசி எடுக்கப்பட்ட நெல் தவிடு, எண்ணை எடுக்கப்பட்ட பிண்ணாக்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டு உழைக்கும் காளைகளையும், எவ்வித எரிபொருள் செலவுமின்றி போக்குவரத்துக்கு பயன்படும் கட்டை வண்டிகளையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஆர்வமுள்ள விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊக்குவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அய்யப்பன் குடிபோதையில் வந்து மனைவிடம் தகராறு செய்துள்ளார்.
    • விறகு கட்டையால் ஜோசப் தலையில் ஓங்கி அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம், திருவையாறை அடுத்த வளப்பகுடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 50).தொழிலாளி.

    இவரது மகள் ரீட்டாமேரியும் (27), பட்டுக்கோட்டை தாலுகா, கருப்பு கிராமத்தை சேர்ந்த சங்கரன் மகன் அய்யப்பனும் (35) காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் கடந்த 3 ஆண்டாக வளப்பகுடியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு அய்யப்பன் குடிபோதையில் வந்து மனைவிடம் தகராறு செய்துள்ளார்.

    இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு ரீட்டாமேரி வந்துள்ளார்.

    உடனே அய்யப்பன் மனைவியை தேடி ஜோசப் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது.இதில் ஆத்திரம்அடைந்த அய்யப்பன், விறகு கட்டை யால் ஜோசப் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த ஜோசப் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன்மருது, சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோசப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில், அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

    ×