என் மலர்
நீங்கள் தேடியது "போலி ஆவணங்கள்"
- 43 பிறப்பு சான்றிதழ்களும் ஜல்காவ் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டவை ஆகும்.
- அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மும்பை:
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் மும்பை உள்பட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக பிறப்பு சான்றிதழ் பெறுவதாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குற்றம்சாட்டி இருந்தார்.
இவ்வாறு முறைகேடாக பெற்ற பிறப்பு சான்றிதழ்கள் மூலம் வங்கதேசத்தினர் இந்தியர்கள் என கூறி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஜல்காவில் முறைகேடாக பிறப்பு சான்றிதழ் பெற்ற 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 43 பிறப்பு சான்றிதழ்களும் ஜல்காவ் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டவை ஆகும். அந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலி ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர்.
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் அதையொட்டிய நகரங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக சி.பி.ஐ. கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் ரோகிணி மற்றும் கேசவ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக பெண்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 7 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களது பெயர் சோனிபட்டை சேர்ந்த நீரஜ், டெல்லி பஸ்சிம் விஹாரை சேர்ந்த இந்து பவார், படேல் நகரை சேர்ந்த அஸ்லம், கன்னையா நகரை சேர்ந்த பூஜா காஷ்யப், மாளவியா நகரை சேர்ந்த அஞ்சலி, கவிதா மற்றும் ரிது ஆகும். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த கும்பல், குழந்தை இல்லாத தம்பதிகளை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பிறந்த பச்சிளம் குழந்தைகளை தத்துக்கொடுப்பு என்ற பெயரில் முறையாக வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி பலரும் இந்த கும்பலிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் பெறப்பட்டு உள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர். இந்த குழந்தைகள் பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 10 குழந்தைகளை இந்த கும்பல் விற்றுள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.
மேலும் இந்த சோதனையின்போது 2 பச்சிளம் குழந்தைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதுபோன்ற சட்டவிரோத குழந்தை விற்பனை செய்யும் தொழில் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது.
- செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
செல்போன் அழைப்புகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் மற்றும் இணையதள குற்றங்கள் நடப்பது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட செல்போன் இணைப்புகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை ஆய்வு நடத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், 6 லட்சத்து 80 ஆயிரம் செல்போன் இணைப்புகள் மோசடியாக பெறப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது, போலியான அடையாள ஆவணங்கள், முகவரி ஆவணங்கள், சுயவிவர ஆவணங்களை பயன்படுத்தி, இந்த செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், அந்த செல்போன் இணைப்புகளை 60 நாட்களுக்குள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அப்படி சரிபார்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால், அந்த செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளது.
- சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
- மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லூரி, 3 சுய நிதி மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) மற்றும் என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 116 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இந்த இடங்களில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறவினர்களின் குழந்தைகள் ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறலாம்.
இந்த என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் குறைந்த நீட் மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், ஏஜெண்டுகள் மூலம் போலியான வெளிநாட்டு தூதரகங்களின் கடிதம் அளித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெற்றனர்.
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 73 மாணவர்கள் போலியான தூதரக ஆவணங்கள் சமர்ப்பித்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆந்திரா மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏஜெண்டுகள்கள் தூதரக கடிதங்களை போலியாக தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மெட்டி சுப்பாராவ் (வயது50), தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்ற ஜேம்ஸ் (48), செல்வகுமார் (43), கார் லோஸ் சாஜிவ் (45,) வசந்த் என்ற விநாயகம் (42) ஆகிய 5 ஏெஜண்டுகளை கைது செய்து போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதில் தொடர்புடைய மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த ஏஜெண்டுகள் புதுச்சேரி மட்டுமல்லாது பல மாநில மாணவர்களுக்கும் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் வழங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் இந்த வழக்கு அகில இந்திய அளவிலான மோசடிக்கு அச்சாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.
- அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் தயாரித்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மூலனுாரைச் சேர்ந்தவர் செல்லதுரை (31) ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தில் அவர் பெற்ற கடனுக்காக அவர் ஈடு வைத்த சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.
இதனையடுத்து செல்லதுரை அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் ஒன்றை தயாரித்தார். அதில், இசைவு தீர்ப்பாணையத்தில் அந்த சொத்து விவகாரத்தில் சமரசம் செய்து, கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவை நகலை பிரகாஷ், (45) என்பவர் மூலம் தாராபுரம் சப் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். விசாரணையில் இது போலி எனத் தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலம் கோர்ட்டை மோசடி செய்ததாக, சப் கோர்ட் கிளார்க் சுதா, தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக பிரகாஷ் மற்றும் மரிய சூசை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள செல்லதுரையை போலீசார் தேடுகின்றனர்.