search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.50 ஆயிரம்"

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் மது போதையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்துக்களை அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக பொதுமக்களும் போலீசாரிடம் இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் வேகமாக, மது போதையில் செல்வது குறித்து தெரிவித்து வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் பஸ் நிலையம், அண்ணா மடுவு, ஜிஹெச் கார்னர், தவிட்டுப் பாளையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடத்தில் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    • முகமூடி கொள்ளையன் அட்டகாசம்
    • கொள்ளையன் உருவம் காமிரா பதிவில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏபிமோசஸ் (வயது 44). இவரது மனைவி மெர்சி. ஹோமியோபதி டாக்டரான இவர் கேப் ரோடு பகுதியில் கிளினிக் வைத்துள்ளார்.

    டாக்டர் மெர்சி தினமும் கிளினிக்கில் நோயாளிகளை பார்ப்பது உண்டு. அதன்படி கிளினிக் வந்த அவர், பணிகள் முடிந்ததும் வழக்கம்போல் கிளினிக்கை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று காலையில் மெர்சி கிளினிக்கிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. எனவே யாரோ மர்ம மனிதன், உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இது பற்றி கோட்டார் போலீசில் ஏபிமோசஸ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கிளினிக்கில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் மென்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஏபிமோசஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையன் உருவம் காமிரா பதிவில் சிக்கி இருப்பது தெரியவந்தது. கொள்ளை யன் ஒருவன் முகமூடி அணிந்து செல்வது போன்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நடந்த சில திருட்டு சம்பவங்களிலும் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கைவரிசையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த கொள்ளையிலும் அவர்கள் தான் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சுகாதாரத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தெங்கம் புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று டெம்போவை பிடித்தனர். பின்னர் டெம்போ மாநகராட்சி அலுவல கத்திற்கு கொண்டு வரப்ப ட்டது. தொடர்ந்து டெம்போ உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது.

    • மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் கைவரிசை
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 39). இவர் கன்னியாகுமரியை அடுத்த விவேகானந்தபுரம் அருகே உள்ள மாதவபுரம் பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று நள்ளிரவு 11 மணிக்கு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே உள்ள அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு திடுக்கிட்ட ராமலிங்கம் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்தக் கடையின் மேல் கூரையை பிரித்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசில் ராமலிங்கம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தடைய வியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள பேன்சி கடையை உடைத்து ரூ. 1¾ லட்சம் கொள்ளை போனது. இந்த தொடர் சம்பவத்தினால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×