என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஒய்.சந்திரசூட்"

    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.
    • சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்கிறார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகளும் முடித்து வைக்கப்பட்டன.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன்மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார்.

    கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10 வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

    • பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும்.
    • வழக்கறிஞர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.

    நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .

    இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும்.

    எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.

    • பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை
    • பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் சமீபத்தில் சைவமாக மாறியுள்ளதகவும் மாறியதற்கான அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த வளாகத்தில் நரம்பியல் பிரச்சனை கொண்டவர்கள் தொடங்கிய கேன்டீனை திறந்து வைத்து சந்திரசூட் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், எனக்குப் பிரியங்கா, மாஹி என்ற இரண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகள் இருக்கின்றனர். நான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் எனக்கு இனஷ்பிரேஷனாக உள்ளனர்.

     

    சமீபத்தில் நான் சைவமாக மாறினேன். எனது மகள் என்னிடம் வந்து, நாம் எதற்கும் கொடுமை செய்யாத வாழ்க்கையை வாழவேண்டும் என்று கூறியதே அதற்குக் காரணமாகும் என்று தெரிவித்தார், மேலும், தானும் தனது மனைவியும் பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை என்றும் சந்திரசூட் தெரிவித்தார்.

    சந்திரசூட் - ராஷ்மி தம்பதிக்கு அபினவ், சிந்தன் என்ற மகன்கள் உள்ள நிலையில் பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • தலைமை நீதிபதி மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.
    • மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய். சந்திரசூட். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார். அத்துடன் பூஜை செய்து வழிபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்தநிலையில் சமூக ஆர்வலரான பிரசாந்த் பூஷன், பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்குச் சென்றது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக பிரசாந்த் பூஷன் கூறியதாவது:-

    தலைமை நீதிபதி சந்திரசூட் மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. தலைமை நீதிபதி பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுவும் மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த சந்திப்பு குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு மிக மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது. அதனால்தான் நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். எனது பார்வையில் இந்த சந்திப்பு நீதிபதிகளுக்கான விதிமுறையை மீறியதாகவும்.

    இவ்வாறு பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

    • மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அது 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும்.
    • நீதித்துறைக்கு வந்த பிறகு அரசியல் சாசனம்தான் மதம்.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    மதம் சார்ந்த நிகழ்ச்சியில் பிரதமரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து கொண்டதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.

    இந்நிலையில், நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி தெரிவித்துள்ளார்.

    தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஹிமா கோலி அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மத நிகழ்வுகளில் நீதிபதிகள் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இறை நம்பிக்கையும், ஆன்மிகமும் மதத்தில் இருந்து வேறுபட்டவை. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அது 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும். நீதித்துறைக்கு வந்த பிறகு அரசியல் சாசனம்தான் மதம்.

    மதச்சார்பற்ற இறையாண்மை கூடிய ஜனநாயகத்தைதான் அது முன்னிறுத்துகிறது. அதைதான் நாம் பொதுவெளியில் பிரதிபலிக்க வேண்டும். நீதிபதியின் தனிப்பட்ட மத நம்பிக்கை, அவர் நீதி வழங்குதலில் குறுக்கிடலாம் என்ற அச்சம் மக்களிடம் வந்துவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.

    • பாபர் மசூதி- ராமர் கோவில் தீர்ப்புக்கு முன்னர் தான் கடவுளிடம் வேண்டியதாக கூறினார்.
    • இந்த சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்றனர்.

    தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தனிப்பட்ட விஷயங்கள் மூலம் தான் வகிக்கும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது நீதித்துறையின் நடுநிலைமை மீதான நம்பகத் தன்மையை முற்றிலுமாக மக்கள் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    மேலும் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தான் 2018 இல் வழங்கிய தீர்ப்பு குறித்து சமீபத்தில் பேசிய அவர், அந்த தீர்ப்புக்கு முன்னர் தான் கடவுளிடம் வேண்டியதாகவும் அதன்படி கடவுளிடம் வேண்டினால் அவர் வழிகாட்டுவார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வீட்டின் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து சந்திரசூட் தற்போது பேசியுள்ளார்.

     

    டெல்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசூட், இதுபோன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களுடன் நிகழும் சந்திப்பின்போது தொடர்புடைய வழக்குகள் மற்றும் நீதித்துறை சார்ந்த விஷயங்கள் பேசப்படாது.

    நீதித்துறை மீது அரசியல் தலைவர்கள் வைத்துள்ள மரியாதை அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. நீதித்துறைக்கான நிதியை நீதிபதிகள் ஒதுக்குவதில்லை. அரசுகள் தான் ஓதுகின்றன. நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகளுக்கு அரசு நிதி தேவை. இதற்கு தலைமை நீதிபதிகள் மாநில முதலமைச்சர்களை சந்திக்க வேண்டி உள்ளது.

    நானும் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக இருந்துள்ளேன். அப்போது நான் முதல்வர் வீட்டுக்கு செல்வதும் முதல்வர் எனது வீட்டுக்கு வருவதும் சகஜமாக நடக்கும். இந்த சந்திப்புகளை நேரில் சந்திக்காமல் கடிதம் மூலம் நடத்த முடியாது. இந்த சந்திப்புகளின்போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதல்வர் எந்த கேள்வியும் கேட்கமாட்டார் எனவே நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று பேசியுள்ளார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10 ஆம் தேதி முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
    • தன்பாலின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று இந்தியத் தண்டனை சட்டம் - பிரிவு 377 ரத்து செய்யப்பட்டது.

    இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வரும் நவம்பர் 11 ஆம் தேதி 65 வயதை எட்ட உள்ளார். அவரின் பதவிக்காலம் நாளை மறுநாள் [ நவம்பர் 10] முடிவடைய உள்ளது. இன்று [ நவம்பர் 8] சந்திரசூட்டின் கடைசி பணிநாள் ஆகும். தொடர்ந்து வரும் நவம்பர் 11 ஆம் தேதி திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வரும் டி.ஒய்.சந்திரசூட் இதற்கு முந்தைய நீதிபதிகளை விட பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டவர் ஆவார். சந்திரசூட்டின் தந்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இந்திய நீதித்துறை வரலாற்றில் தந்தை - மகன் தலைமை நீதிபதிகளாக இருந்தது இதுவே முதல் முறை ஆகும். தலைமை நீதிபதியாக இருந்தபோதும் அதற்கு முந்தைய காலகட்டத்திலும் பல்வேறு முக்கிய தீர்ப்புகளில் சந்திரசூட் அங்கம் வகித்துள்ளார்.

     

    ஆகஸ்ட் 2018 - தன்பாலின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று இந்தியத் தண்டனை சட்டத்தின் 377வது பிரிவு சந்திரசூட் அடங்கிய அமர்வில் ரத்து செய்யப்பட்டது. ஆணோ பெண்ணோ தங்களுக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுப்பதில் அரசோ பெற்றோரோ தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறியது.

    செப்டம்பர் 2018 - திருமணத்தை மீறிய உறவு குற்றம் கிடையாது என்று தீர்ப்பு சந்திரசூட் அடங்கி அமர்வில் வழங்கிய தீர்ப்பு குடிமக்களின் தனியுரிமை சார்ந்த முக்கிய தீர்ப்பாக பார்க்கப்பட்டது.

    செப்டம்பர் 2018 - 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்ற தடை ரத்து செய்யப்பட்டது

    நவம்பர் 2019 - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி உள்ளிட்ட தீர்ப்புகளில் சந்திரசூட் அங்கம் வகித்தார்.

    மேலும் 2022 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின்னர், கடந்த பிப்ரவரியில் நடந்த வழக்கில் , கடும் சர்ச்சைக்கு மத்தியில் பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தார். முன்னதாக கடந்த 2023 மே மாதம் நடந்த வழக்கில், டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் என்ற தீர்ப்பை வழங்கினார். இதுதவிர்த்து, பொது நலனுக்காகவே இருந்தாலும் அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று இந்த மாதம் நடந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

     

    இதுபோன்ற தீர்ப்புகளுக்கு மத்தியில் சமீப காலமாக சந்திரசூட்டின் நடவடிக்கைகள் அரசியல் சார்ந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின்போது சந்திரசூட் வீட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது தலைமை நீதிபதி பதவியின்மீதான நம்பகத்தன்மையைக் குலைப்பதாக விமர்சிக்கப்பட்டது.

     

    மேலும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து அவர் காட்டிய வழியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வழங்கியதாக சந்திரசூட் பேசியது நீதித்துறையின் நடுநிலைமையை சீர்குலைப்பதாக அமைந்தது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

    • தற்போதைய தலைமை நீதிபதி நவம்பர் 8ந் தேதி ஓய்வு பெறுகிறார்.
    • புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான ஒப்புதலை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். நவம்பர் 9ந் தேதி முதல் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி ஒய் சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10ந் தேதி வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

    ×