என் மலர்
நீங்கள் தேடியது "இமாச்சல் சட்டசபை தேர்தல்"
- இமாச்சல் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.
- ஆளும் கட்சியான பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தியது.
கன்னியாகுமரி:
இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தியது.
இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இன்று இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற மாபெரும் வெற்றி நமது கட்சிக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறப்போகும் மிகப்பெரிய வெற்றிக்கு இந்த வெற்றி முதல் படி. இந்த வெற்றிக்காக உழைத்த இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த வெற்றியின் உழைப்புக்கு உத்வேகம் அளித்த அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருமதி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- இமாச்சல் சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் பிரச்சார குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
- சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
புதுடெல்லி:
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் கட்சி இன்று ஒப்புதல் அளித்தது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 43 பேர் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.