என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசனை திரவியங்கள்"

    • 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
    • 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயரம் உள்ள மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வ தவர்த்தினி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி விழா நடைபெற்றது. இதை யொட்டி மாலை 4.30 மணிக்கு மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் பர்வதவர்த்தினி அம்மனு க்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சா மிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடி யார்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண் பொங்கல், எள்ளு, உளுந்து, பஞ்சா மிர்தம், சாம்பார்சாதம் உள்ளிட்ட 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு.
    • வாசனை எண்ணெய்கள் இயற்கையான வாசனையை வழங்குகின்றன.

    இன்றைய காலகட்டத்தில் வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. தண்ணீர். எண்ணெய் மற்றும் ஆல்கஹால் என அதில் கலக்கப்படும் மூலப்பொருட்களின் அடிப்படையில் வாசனை திரவியங்களை வகைப்படுத்தலாம்.

    இந்த கலவைகளின் செறிவைப் பொறுத்து நறுமணம் உடலில் நீடிக்கும் நேரத்தைக் கணக்கிடலாம். ஒவ்வொரு வாசனை திரவிய வகைகளும், அதில் சேர்க்கப்படுகின்ற 'எசன்ஷியல் ஆயில்' என்று சொல்லப்படும் எண்ணெய்யின் செறிவைப் பொறுத்து மாறுபடும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே...

    பெர்ஃபியூம்:

    இந்த நறுமணக் கலவையில் 20 முதல் 30 சதவீதம் வரை, அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு கலந்திருக்கும். இது அதிக செறிவு கொண்டது. எண்ணெய்களின் அதிக செறிவு காரணமாக மற்ற எல்லா வகைகளை காட்டிலும் இது விலை உயர்ந்தது. இதன் நறுமணம் 24 மணி நேரம் வரை நீடிக்கும். பெர்பியூமில் குறைந்த அளவு ஆல்கஹால் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

    ஈவ் டி பொபியூம்:

    15 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனை சாறு கலந்திருக்கும் நறுமணக் கலவை இதுவாகும். இந்த கலவையில் சற்றே அதிக ஆல்கஹால் மற்றும் நீர் கலந்திருக்கும். இது 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும். ஆல்கஹால் கலப்பு சற்று அதிகமாக இருந்தாலும், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற நறுமணக்கலவை இதுவாகும்.

    ஈவ் டி டாய்லெட்:

    இந்த வாசனை திரவிய வகையானது 5 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது நறுமணச்சாறு கொண்டது. இதன் வாசம் 2 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும். இது உடலையும், கூந்தலையும் நறுமணப்படுத்த பயன்படுகிறது.

    ஈவ் டி கொலோன்:

    ஆண்களுக்கான வாசனை திரவியமாக கருதப்படும் இதில், 2 முதல் 4 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு நிறைந்திருக்கும். இது 2 மணி நேரம் வரை நீடிக்கும். விலையும் மலிவானது.

    ஈவ் பிரைஸ்:

    இந்த வகை வாசனை திரவியமானது. 1 முதல் 3 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனைச் சாறு கொண்டது. தண்ணீர்தான் இதன் முக்கிய மூலப்பொருள். இது ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். இதில் குறைந்த அளவு ஆல்கஹால் கலக்கப்படும்.

    வாசனை எண்ணெய்கள்:

    உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்க உதவுபவையே வாசனை எண்ணெய்கள், ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்களை விட இவை அதிக சக்தி வாய்ந்த, இயற்கையான வாசனையை வழங்குகின்றன.

    • பக்தர்களுக்கு 7 வகையானபிரசாதம் வழங்கப்பட்டது
    • 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இங்கு உள்ள மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார்.

    பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல், கொண்டை கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார்சாதம் போன்ற 7 வகையான அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • வாசனை திரவியத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.
    • பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன.

    தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.

    வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனை திரவியத்தை தினமும் பயன்படுத்து வருகிறார்கள். வெளிநாட்டு வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.

    உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல, வாசனை திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது.


    ஆய்வாளர்களின் கருத்துபடி வாசனை திரவியங்களில் பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனம் நெயில் பாலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பேக்கேஜிங் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை கூட பாதிக்கிறது. உடலில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் பாதிக்கின்றன.


    வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது மனநிலையை மேம்படுத்தும் அதே வேளையில், அது ஆபத்தையும் உருவாக்கும்.

    கூடுதலாக, உடலின் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இனப்பெருக்கத்தை பாதிக்கிறது. ஹார்மோன், பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் ஏற்படலாம்.


    நம்முடை சிறிய மாற்றங்கள் மூலம் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். ரசாயனங்கள் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. இந்த மாற்றம் ஒரே நாளில் சாத்தியமில்லை. பழகுவதற்கு நீண்டகாலம் ஆகும். அதேபோல் துணிகளை துவைக்கும் போது வாசனை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது. 

    • ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    ×