search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.30 லட்சம்"

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சண்முகவடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஹெலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல்
    • நாகர்கோவிலில் போக்கு வரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் போக்கு வரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    குறிப்பாக ஆட்டோக்களில் அதிக மாணவிகளை ஏற்றி செல்லும் டிரைவர்களுக்கும், இருசக்கர வாகனங்களில் லைசன்ஸ் இல்லாமல் செல்ப வர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாமல் 18 வயதுக்கு குறைவாக வாகனம் ஓட்டுபவர்களின் வாக னங்களை பறிமுதல் செய்யும் போலீசார் அவர் பெற்றோ ருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்ல சாமி மற்றும் போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 18 வயதுக்கு குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்கள் 10 பேர் இந்த சோதனையில் சிக்கினர். அவர்களது மோட்டார் சைக்கிளை போலீ சார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து வாக னங்கள் பறிமுதல் செய்தது குறித்து அவரது பெற்றோர்க ளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். வாகனங்களை ஓட்டி வந்தோரின் பெற் றோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 10 பேருக்கு அபராதம் விதிப்பட்ட நிலையில் 4 பேர் மட்டுமே அபராத தொகையை கட்டிவிட்டு மோட்டார் சைக்கிளை திரும்ப பெற்று சென்றனர். 6 பேரின் மோட டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஒரே மோட்டார் சைக்கி ளில் 3 பேர் வந்தவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். நேற்று 6 பேர் சிக்கினார்கள். இதேபோல் நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.2 லட்சம் அபராதம் வசூல் ஆகியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் நாகர்கோவில் மாநகரில் ரூ.30 லட்சத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதி முறைகளை பொதுமக்கள் மீறக்கூடாது. சிறுவர்களுக்கு பெற்றோர் வாகனங்களை ஓட்ட கொடுக்கக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் அவரது மோட்டார் சைக் கிள்கள் பறிமுதல் செய்யப்ப டும். எனவே இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிவது உயிர் கவசம். எனவே அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு சீட் பெற்று தருவதாக கூறினார்.
    • கணவன்-மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு

    கோவை, பிப்.28-

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அழகர் ராஜா(வயது30). இவர் ராணுவத்தில் வேலைக்கு சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அழகர் ராஜாவுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அறிமுகமானார். அவர் உள்பட 5 பேர் தங்களுக்கு அரசு துறையில் அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அவர்களிடம் பேசி உங்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வாங்கி தர முடியும். அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய அழகர் ராஜா அவர்களுக்கு பணம் கொடுக்க முன் வந்தார். மேலும் தனது பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களுக்கும் வேலை பெற்று தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து முதல் தவணையாக 4 பேரிடமும் கடந்த ஆண்டு ரூ. 19.50 லட்சத்தை மனோஜ் குமார் உட்பட 5 பேர் வாங்கியதாக தெரிகிறது. மேலும் பல கட்டங்களாக ரூ.30.85 லட்சம் பெற்றுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் ராணுவத்தில் வேலை வாங்கி கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 30.85 லட்சம் மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த மது மோகன், அவரது மனைவி சுஜாதா, மனோஜ் பிரபாகர், ரவி, மற்றும் ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை வெள்ளலூர் திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது54). இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையை சேர்ந்த இளங்குமரன் (40) என்பவர் அறிமுகமானார். அவர் தான் கனடா உட்பட பல நாடுகளில் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுத்துள்ளதாகவும், உங்களது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு சீட் பெற்று தருவதாக கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய நாகராஜ் தனது மகனுக்கு கனடாவில் படிக்க சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், ரூ. 16 லட்சத்து 43 ஆயிரத்து 933 பணத்தை இளங்குமரனின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    ஆனால் அவர் சொன்னபடி சீட் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் இது குறித்து நாகராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் இளங்குமரன் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமறைவான பெண் மேலாளரை தேடும் பணி தீவிரம்
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வேப்பமூட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது.

    இந்த நிறுவனத்தில் குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார்கள்.

    நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய பொதுமக்கள் தங்களது நகைகளை மீட்க வரும்போது நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக அந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த வங்கியில் பணிபுரிந்த மேலா ளர் கடந்த சில நாட்களாக பணிக்கு வரவில்லை. நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் வங்கியில் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேல் அதிகாரிகள் கோட்டாறு போலீசில் புகார் செய்தனர்.இன்று காலை கோட்டார் போலீசார் நிதி நிறுவனத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த மேலாளர் கடந்த ஒரு வாரமாக வங்கிக்கு வராமல் தலைமறைவானதால் அவர் நகைகளை எடுத்துச் சென்று இருக்கலாம் என தெரிகிறது.அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    வாடிக்கையாளர்களி டமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டும் தங்களது கணக்கில் பணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் செட்டிகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகள் அமைக்க திட்ட மிடப்பட்டது.

    இதற்கான பணியை அமைச்சர்மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாவட்டத்தில் பேரூராட்சி கள், ஊராட்சிகள், மாநக ராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, கிள்ளியூர் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஐரேனிபுரம் கூட்டுறவு வங்கி முதல் பேராலி வரையில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், கிள்ளியூர் பேரூராட்சி தலைவர்சீலா சத்தியராஜ், துணைத்தலை வர் சத்தியராஜ், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×