என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்று மாசு அதிகரிப்பு"

    • திருச்சியில் தீபாவளி பட்டாசால் ஒலி மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
    • மாநகரில் பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளையும், வாண வெடிகளையும் அதிகம் வெடித்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவின்படி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளிக்கு முன் மற்றும் பின்பு 7 நாட்களுக்கு என் 14 நாட்களுக்கு காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணித்து வருகிறது.

    அதன்படி, ஒலி மாசுபாடு அளவு தீபாவளிக்கு முன்பாக 18-ந்தேதியும், தீபாவளி பண்டிகையன்று தில்லைநகர் பகுதியில் எடுக்கப்பட்டது. 18-ந்தேதி தில்லைநகரில் ஒலி மாசு குறைந்தபட்சம் 57.5 டெசிபலும், அதிகபட்சமாக 69 டெசிபலும் கண்டறியப்பட்டது. தீபாவளியன்று தில்லைநகரில், குறைந்தபட்சம் 65.1 டெசிபலும், அதிகபட்சமாக 87.4 டெசிபலும் அளவிடப்பட்டது.

    இந்த அளவிடப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளியன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை (பகல்-65 டெசிபல், இரவு-55 டெசிபல்) விட அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

    தீபாவளியன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு குறித்து காலை 6 மணி முதல் மறுநாளான 25-ந்தேதி காலை 6 மணி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் காற்றுத்தர குறியீடு, 46-ல் இருந்து (மாசுபடாதது) 130 வரை (மிதமான மாசுபட்டது) என்று கண்டறியப்பட்டது. குறைந்த அளவாக உறையூரில் 111-ம், தென்னூரில் 130-ம் கண்டறியப்பட்டது.

    மாநகரில் பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளையும், வாண வெடிகளையும் அதிகம் வெடித்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. அன்று காற்றில் ஏற்பட்ட அதிகமான ஈரத்தன்மையும், காற்றின் மிகக்குறைந்த வேகமும் பட்டாசு வெடித்ததனால் ஏற்படும் புகை வான்வெளியில் பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படவில்லை.

    இதுவே திருச்சி மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு இந்தாண்டு தீபாவளியன்று சற்று அதிகமானதற்கு காரணமாகும்.

    வரும் காலங்களில் ெபாதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீபாவளி பண்டிகையின் போது பின்பற்றி காற்றின் தரம் மற்றும் ஒலி மாசு அளவுமிகாமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இத்தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருச்சி இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
    • காற்றின் மாசு தரம் இருந்தால் மோசமானதாக கருதப்படுகிறது.

    டெல்லி:

    டெல்லியில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் இன்று மோசமான நிலைக்கு காற்று மாசு சென்றது. காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தரம் 317 ஆக இருந்தது.

    ஆனால் காலை 6 மணி நிலவரபடி டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக்குறியீடு 434 ஆக இருந்தது. இது உலக சுகாதார மையம் பரிந்துரைத்த ஆபத்து வரம்பை விட 59 மடங்கு அதிகமாக உள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றின் அதிக மாசால் நுரையீரல் மற்றும் மூளை பாதிப்பு உண்டாக்கும் அபாயம் ஏற்படும். கடுமையான அளவில் உடல் நலத்தை பாதிக்கும். 200 மற்றும் 300-க்கு இடையில் காற்றின் மாசு தரம் இருந்தால் மோசமானதாக கருதப்படுகிறது.

    300-400க்கு இடையில் மிகவும் மோசமானதாகவும், 400-450-க்கு இடையில் கடுமையானது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இன்று ஆனந்தவிஹார் பகுதியில் காற்று மாசு 627 ஆகவும், அலிபூர் பகுதியில் 388, பஞ்சாபிபாக் 319, நரேலா 372, ஆர்.கே.புரம் 268, பவானா 368, ஐ.டி.ஐ. ஷஹ்த்ராவில் 408 ஆகவும் இருந்தது.

    சுமார் 200 நகரும் புகை எதிர்ப்பு கருவிகள் மூலம் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    ×