search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ் சந்திரசேகர்"

    • எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார்.
    • எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.

    உலகப் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் EVM வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது என்றும் எனவே EVM முறையை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்றும் கூறியது உலக அளவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைமுறையில் EVM குறித்த எலான் மஸ்கின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்த சமயத்தில் EVM முறையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. ஆனால் EVM இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்றும் யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும் ஆரம்பம் முதலே வாதாடி வரும் ஆளும் பாஜக எலான் மஸ்கின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்திருந்தது. தகவல் முன்னாள் தொழில்நுட்பத்துறை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பதிவில், இந்தியாவில் தயாரிக்கப்படும் EVM கள் பாதுகாப்பானது என்றும் வேண்டுமானால் உங்களுக்கு EVM இயந்திரங்களை எப்படி தயாரிக்கவேண்டும் என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்றும் எலான் மஸ்க் கருத்துக்கு பதிலளித்திருந்தார்.

    உடனே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'Anything can be hacked' எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார். இந்த விவகாரம் இப்படியாக புகைந்துகொண்டிருக்கும் வேளையில் ராஜீவ் சந்திரசேகர் ஒருபடி மேலே சென்று புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, டெஸ்லா கார்களையும் ஹேக் செய்ய முடியும். ஏன் கால்குலேட்டரையும், பிரட் டோஸ்ட் செய்யும் டோஸ்டரையும் கூட ஹேக் செய்ய முடியும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

     

     

     

    மேலும், ஹேக்கிங் என்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது. எலான் மஸ்கின் கருத்து தவறானது. போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட EVM கள் வேண்டுமானால் ஹேக் செய்யப்படலாம். எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இந்திய EVM தயாரிப்பு குறித்து அவருக்கு தெரியாது. அவை யாராலும் ஹேக் செய்யமுடியாத அதிநவீன சாதனங்கள் என்று தெரிவித்துள்ளார்.  

    • வேண்டுமானால் எப்படி மின்னணு இயந்திரங்களை தாயரிப்பது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
    • ராகுல் காந்தி, இந்தியாவில் EVM இயந்திரங்கள் என்பது கறுப்புச் பெட்டியாக BLACK BOX ஆகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் EVM வாக்கு இயந்திரங்கள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவை எளிதில் ஹேக் செய்ப்பட அதிக வாய்ப்புள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியுள்ளது.

    எலான் மஸ்க்கின் கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த முன்னாள் தகவல் தொழிநுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை. வேண்டுமானால் எப்படி மின்னணு இயந்திரங்களை தாயரிப்பது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

    தற்போது இந்த பதிவுக்கு உடனே ரியாக்ட் செய்துள்ள எலான் மஸ்க், Anything can be hacked எதையும் ஹேக் செய்ய முடியும் என்று ரிப்லை செய்துள்ளார். இவ்வாறாக EVM விஷயம் பூதாகரமாக மாறிக்கொண்டிருக்கும் வேலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் EVM இயந்திரங்கள் என்பது கறுப்புச் பெட்டியாக BLACK BOX ஆகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்ததக்கது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்
    • ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டு வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.

    அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

    இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த சொத்து விவரங்களை சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
    • ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இதற்கிடையே, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.

    அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

    இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பா.ஜ.க. மந்திரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் செல்லாது. அவை எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான். பாஜகவிற்காகவும், மோடிக்காகவும் இப்படித்தான் இந்திய ஏஜென்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கேரளாவின் மதச்சார்பற்ற நம்பிக்கையை கெடுக்க மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை கக்குவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

    திருவனந்தபுரம்:

    எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்கள் எதுவும் வெளியிடக்கூ டாது என்று அரசு எச்சரித்திருந்தது.

    களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் கேரள அரசு ஹமாசுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டிய மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், குண்டு வெடிப்புகளை மாநிலத்தின் அரசியலுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டார்.

    அவரது கருத்துக்கு கேரள அரசு மற்றும் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கேரளாவின் மதச்சார்பற்ற நம்பிக்கையை கெடுக்க மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை கக்குவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை பரப்பியதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது 153(கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்), 153ஏ(பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மட்டுமின்றி இதே போன்று 18 பேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை.
    • வாக்குறுதி அளித்துவிட்டு மறைந்து விடுவதுதான், காங்கிரசின் பாணி.

    புதுடெல்லி :

    கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர். அவர் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    கர்நாடக பா.ஜனதாவில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற லிங்காயத் தலைவர்கள் விலகி, காங்கிரசில் சேர்ந்து இருக்கலாம். அதற்காக அந்த சமூகத்தின் ஆதரவை பா.ஜனதா இழந்து விடும் என்று கருதக்கூடாது. பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை.

    மே 13-ந்தேதி, அவர்கள் தேர்தலில் தோல்வி அடைவதுடன், இதுவரை சமூகத்தில் பெற்ற மரியாதையையும் இழந்து விடுவார்கள்.

    கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, லிங்காயத்துகள் இந்துக்களே அல்ல என்று சித்தராமையா போன்றவர்கள் பிரசாரம் செய்தனர். அதன்மூலம் அந்த சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் அது எடுபடவில்லை.

    கர்நாடக தேர்தலில் 74 புதுமுகங்களை நிறுத்த பா.ஜனதா மேலிடம் எடுத்த முடிவு, மிகவும் துணிச்சலான முடிவு. தலைமுறை மாற்றத்தை மாநில பா.ஜனதா தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கர்நாடக எதிர்காலத்துக்கான கட்சி, பா.ஜனதா ஆகும்.

    ஆனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்றவை சுரண்டல் அரசியல் நடத்துகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார்.

    அவர் ஏதேனும் வினோதமான குற்றச்சாட்டுகளையும், சில வாக்குறுதிகளையும் கூறிவிட்டு, எங்கேயோ காணாமல் போய்விடுகிறார். மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற பாடுபட வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இல்லை.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்கிறார். அவரது கட்சி, பல்லாண்டு காலம் இந்தியாவை ஆண்டது என்பதையே அவர் மறந்து விடுகிறார். ஆட்சியில் இருக்கும்போது அதற்காக காங்கிரஸ் என்ன செய்தது?

    பிரதமர் மோடி அரசுதான், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிறைய செய்துள்ளது. வாக்குறுதி அளித்துவிட்டு மறைந்து விடுவதுதான், காங்கிரசின் பாணி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம்.
    • இணைய தளத்தை பயன்படுத்துபவர், சமூக ஊடகக் கணக்குகள் சரிபார்ப்பு கட்டாயமாகும்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அதே வேளையில், பொறுப்பற்ற முறையில் பொதுத்தளத்தில் சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    இதனை உறுதிசெய்வதற்கு தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான நம்பத்தகுந்த சமூக ஊடகக் கணக்குகள் இருக்க வேண்டும் என்பதில் அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதற்கு செயலாக்கம் தரும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கொண்டு வரப்பட்டது.

    அதன்படி, பகிரப்படும் தகவல்கள் அறிந்தோ, அறியாமலோ, தகவல்களை பெறுபவர்களை ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, மாற்றவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோக் கூடாது. பொய்யான, தவறாக வழிநடத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.

    மேற்கூறியவற்றை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசு அல்லது அதன் அமைப்பு ரீதியிலான புகார் அல்லது நீதிமன்ற உத்தரவு அல்லது நோட்டீஸ் பெறப்பட்டதன் பேரில், தானாக முன்வந்து, தகவல்களை பகிரவோ, சேமிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது. அவதூறு, பொது மக்கள் நலன், கண்ணியம், ஒழுக்கம், மீறப்படும் போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2014-ல் இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
    • ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாமர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான்.

    இந்நிலையில், இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    2014-ம் ஆண்டு இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. தற்பொழுது அந்த நிலை மாறி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 97 சதவீத செல்போன்களை இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.

    மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் மதிப்பு 12 பில்லியனை எட்டியுள்ளது என தெரிவித்தார்.

    ×