என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வினியோகம் ரத்து"

    • பொதுமக்கள் குடிநீர் வரும்பொழுது சேமித்து வைப்பதுடன் மிகவும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
    • அனைத்து வார்டுகளுக்கும் அவசர தேவைகளுக்காக லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் திருப்பூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேட்டுப்பாளையம் நகரில், திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய், பதிக்கும் பணிகள் நடக்கின்றன. புதிய குடிநீர் திட்ட பம்பிங் மெயின் குழாய் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக வருகிற 29, 30, 31- ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. மேலும் அனைத்து வார்டுகளுக்கும் அவசர தேவைகளுக்காக லாரி மூலம் அந்தந்த பகுதி நகர மன்ற உறுப்பினர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆகவே பொதுமக்கள் குடிநீர் வரும்பொழுது சேமித்து வைப்பதுடன் மிகவும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டுமென நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் மற்றும் நகராட்சி ஆணையாளர் வினோத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • திருச்சியில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது.
    • பொது தரைமட்ட கிணறு நீர் உந்து நிலையத்தில் இருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம் பிச்சைநகர் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

    திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரைமட்ட கிணறு நீர் உந்து நிலையத்தில் இருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம் பிச்சைநகர் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை மராமத்து செய்யும் பணி நாளை (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையொட்டி தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய 10 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு நாளை மறுநாள் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது.

    14-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று வழக்கம்போல் குடிநீர் வினியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×