search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவர்"

    • “மருதமலை மாமணியே முருகையா” என்று அனைவரையும் பாட வைக்க பெருமை தேவருக்கு உண்டு.
    • தமிழ்நாடு மக்கள் மருதமலையைத் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்தவர் தேவர் என்று சொல்லலாம்.

    மருதமலை என்று சொன்னதும் மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் எம்.எம்.ஏ. சாண்டோ சின்னப்ப தேவர் தான் பலருக்கும் நினைவுக்கு வருவார்.

    தமிழ்நாடு மக்கள் மருதமலையைத் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்தவர் தேவர் என்று சொல்லலாம்.

    மருதமலை சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட வைத்தது அவரது முருக சேவை என்றே கூற வேண்டும்.

    "மருதமலை மாமணியே முருகையா" என்று அனைவரையும் பாட வைக்க பெருமை தேவருக்கு உண்டு.

    மருதமலையின் அடிவாரத்திலே நம்மை வரவேற்கும் தலைநிமிர்ந்து நிற்கிற முன்மண்டபக் கோபுரம் தோவர் பிலிம்ஸ் உபாயம்.

    அடிவாரம் தொடங்கி மருதமலை முருகன் சன்னதி வரையிலும் மின்சார விளக்கு, மலைப்பாதை இவை எல்லாம் தேவர் மனமுவந்து செய்த தர்ம காரியங்கள்.

    தேவர் மண்டபம் முருக தரிசனம் வேண்டி வருபவர்கள் தங்கி இருக்கவும், விசேஷ தினங்களில் அம்மடத்தில் அமுது பொங்குதல், அன்னம் அளித்தல் ஆகிய காரியங்களுக்கு பயனுள்ளதாக அமைத்துத் தந்துள்ளார்.

    மருதாச மூர்த்தியின் அர்த்த மண்டபத்தில் உள்ள கதவு அமைத்துத் தந்ததும் அவரே. முடிக் கொட்டகை அருகில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு அறைகள் ஆகியவைகளை பக்தர்களின் நலத்தையும் சவுகரியத்தையும் முன்னிட்டு அமைத்துத் தந்துள்ளார்.

    தேவர் முருகனுக்கு செய்த திருப்பணிகளில் முக்கியமானது மலைப்படிகளில் இரவிலும் மக்கள் சென்றுவர ஏதுவாக மின்விளக்குகள் தமது பொருட் செலவிலேயே 1963-ல் முடித்துக் கொடுத்தது மட்டுமின்றி படியேற வலுவற்றவர்களும், வசதி படைத்தவர்கள் கார் முதிதலய வாகனங்களிலும் மேலே சென்று வருதற்கு ரூபாய் 3 லட்சம் செலவில் 1 மைல் தொலைவில் உள்ள மலைப்பாதையை அமைத்துக் கொடுத்தது மிகப்பெரிய பணியாகும்.

    மூலவருக்கு ரூபாய் பத்தாயிரம் செலவில் தங்கக் கவசம் செய்து கொடுத்தும் உள்ளார் இவை எல்லாம் தேவருக்கு முருகன் மீது உள்ள பக்தியையேக் காட்டுகிறது.

    • பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மாலை அணிவித்தார்.
    • தேவர் நினைவாலயம் பொறுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத்தேவர் சிலைக்கு ஓ.பி.ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.

    பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற ஓ.பி.ரவீந்திரநாத்தை பழனி, தங்கவேலு ஆகி யோர் வரவேற்றனர்.

    தேவர் நினைவாலயம் பொ றுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மதுரை ராஜ்மோகன், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மூக்கையா, ஓ.பி.எஸ்., ஆதரவு ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், கோவிலாங்குளம் சரவணன், வாசுதேவன், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மருத்துவர் பரிதி, இளை ஞரணி மாவட்ட செயலாளர் சிண்ணான்டு தேவன், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவர் ஜெயந்தி:தமிழக அரசுக்கு ந என்று ன்றி சேதுராமன் கூறி உள்ளார்.
    • இந்த ஆண்டு கொரோனா இல்லாததால் பல லட்சம் மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருது சகோதரர்கள் வீரவணக்க நாள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் அசம்பாவிதமும் நடைபெறாமல் இந்த ஆண்டு விழாவை மிகவும் சிறப்புடன் நடத்திய ஒத்துழைப்பு அளித்த தமிழக முதல்வருக்கும், தென்மண்டல காவல்துறை தலைவர், சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தென் மாவட்ட மக்கள் கொண்டாடும் மிகப்பெரிய விழா மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா இந்த விழா காலங்களில் வன்முறை சம்பவங்களை தூண்டி விட்டு அரசியல் செய்த காலம் மலையேறி சென்று விட்டது. இந்த ஆண்டு கொரோனா இல்லாததால் பல லட்சம் மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொண்டனர். மேலும் 22 ஆண்டுகளுக்கு பிறகு பசும்பொன்னில் நடந்த கும்பாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தது தமிழக அரசு தான். இதே நாளில் அகில இந்திய மூவேந்தர் கழகத்துடன் பசும்பொன் கிராம மக்கள் இணைந்து நடத்திய தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பசும்பொன் ஜெயந்தி விழாவில் தமிழக அரசு சார்பில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் கலந்து கொண்ட அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசும்பொன்னில் தேவர் சிலைக்கு கே.சி. திருமாறன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து 300 வாகனங்களில் பசும்பொன் தேவர் ஆலயத்திற்கு சென்றனர்.

    அங்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ், மாநில இளைஞரணி தலைவர் சபரி, இளைஞரணி பொதுச் செயலாளர் சோலை அறிவழகன், மாநில பொருளாளர் நாட்டார் முத்தையா.

    மாநில அமைப்பு செயலாளர் தங்கம், மாநில ஐ.டி.விங் தலைவர் விஜயராஜன்,மாநில தொண்டரணி தலைவர் ஸ்ரீராம், மாநில வர்த்தக அணி செயலாளர் ஆழ்வார்புரம் ஆனந்த், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பிரதீப். மாநில செயலாளர் மாரிமறவன், தேனி மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வம், கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி, திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் விஜி.

    மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் ஊமச்சிகுளம் சுரேஷ், மதுரை இளைஞரணி தலைவர் ராஜாமாறன், வடக்கு மாவட்ட தலைவர் கரிகாலன், மக்கள் தொடர்பு அதிகாரி முத்துசரவணன்,மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×