search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi imposition"

    • புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஐ குறுகிய பார்வையுடன் பார்க்கிறது.
    • மோடிஜியின் அரசு உலகளவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்க உறுதி பூண்டுள்ளது.

    தமிழ்நாடு பள்ளிகளில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முமொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி வழங்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. மீண்டும் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் தமிழக அரசுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு, நமது மாணவர்களுக்கு அறிவு, திறன்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

     2022 இல் சென்னைக்கு வந்த செய்த மாண்புமிகு பிரதமர், "தமிழ் மொழி நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது" என்று கூறியிருந்தார்.  

    ஒரு மாநிலம் புதிய கல்விக் கொள்கை (NEP 2020) ஐ குறுகிய பார்வையுடன் பார்ப்பதும், அரசியல் கதைகளைத் தக்கவைக்க அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துவதும் மிகவும் பொருத்தமற்றது.

    இந்தக் கொள்கை ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. NEP 2020 மொழியியல் சுதந்திரத்தின் கொள்கையை நிலைநிறுத்துகிறது . மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மொழியை தொடர்ந்து கற்க உறுதி செய்கிறது.

    இந்தியாவின் கல்வித் துறையின் முதுகெலும்பாக இருந்து வரும் மும்மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கட்டத்திற்குக் கொண்டுவருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, கல்விக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அது ஒருபோதும் எழுத்து மற்றும் உணர்வுடன் செயல்படுத்தப்படவில்லை. இது பள்ளிகளில் இந்திய மொழிகளை முறையாகக் கற்பிப்பதில் சரிவுக்கு வழிவகுத்தது.

    காலப்போக்கில், இது வெளிநாட்டு மொழிகளை அதிகமாக நம்பியிருப்பதற்கு வழிவகுத்தது. தமிழ் உட்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் அதன் சரியான இடத்தைப் பெறுவதை உறுதி செய்ய NEP 2020 முயல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    • மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய்.

    மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், "ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்தி நமக்கு எந்த விதத்தில் நமக்கு பயன் தரும். இந்திய கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. நான் அசாமில் இருந்தபோது 3 மாதத்தில் இந்தி கற்றுக்கொண்டேன்.

    மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய். இதில் ஏமாந்தோம் என்றால் பள்ளிகளில் இந்தி, சம்ஸ்கிருத ஆசிரியர்கள் மட்டும் தான் இருப்பார்கள்.

    பள்ளியில் 50 மாணவர்கள் வெவ்வேறு மொழி தேர்ந்தெடுத்தால் எப்படி அதற்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும். அது நடைமுறை சாத்தியமற்றது. இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம்.

    தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். ஜென்மத்திற்கும் நீங்கள் செருப்பு அணிய மாட்டீர்கள். செருப்புப் போட வாய்ப்பு அமையாது

    • இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
    • வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.

    மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.

    மத்திய அமைச்சரின் பெயர் தர்மேந்திரா, ஆனால் எந்த தர்மமும் இல்லாதவர். ஆனால் இந்திய ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்க முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார். இதை கேட்ட தமிழ்நாட்டு மக்கள் உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிறார்கள்.

    எங்களின் உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். யாசகம் கெடக்கவில்லை. மும்மொழியை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கொடுக்க கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது?

    1965 இல் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக இங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது ரெயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்களில் இருந்த இந்தி அழிக்கப்பட்டது.

    இதனையடுத்தது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது என்று அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார். இப்போது மோடி மன்னர் போல இருக்கிறார். அவர்களின் பாசிஸ்ட்ட ஆட்சியை எதிர்த்து தான் இங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை இருமொழி கொள்கை காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார். உண்மையில் அண்ணாமலை தான் காலாவதி ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள்.

    ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

    • உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள்.
    • தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

    மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், "1986 க்கு பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

    ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான பேச்சிற்கு பிறகு.. நமது மூச்சில் கலந்த மொழிப்போர் தியாகிகளின் உயிர் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளது. அவர்கள் உங்களுடைய உருவின் இங்கு நின்று கொண்டுள்ளது.

    தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி தருவேன் என்று 3 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் கூறுகிறார்.

    அரசியலமைப்பு சட்டத்தில் மும்மொழி கொள்கை எங்கு உள்ளது. தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

    தமிழக பாஜக தலைவர் வெளிநாட்டில் 6 மாத காலம் படித்துவிட்டு இப்போது பொய்யாக பேசி வருகிறார். அவர் தனது கையில் ACER அறிக்கை என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை விட உ.பி.யும் பீகாரும் சிறப்பாக இருக்கிறது என்று பேசுகிறார். அந்த ACER அறிக்கை பாஜகவின் ஒரு அஜெண்டா தான்.

    உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள். அதையேதான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    நம் வரிப்பணத்தில் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் ஒன்றிய அரசு தருகிறது. இது என்ன உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? என்று எக்ட்டதற்கு உங்களுக்கு கோவம் வந்ததே, இப்போது கேட்கிறோம் ரூ.2,151 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஆகவே எங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள்" என்று தெரிவித்தார்.

    • விருப்பப்பட்ட மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுகொள்ளலாம். ஆனால் ஒரு மொழியை திணிக்க கூடாது.
    • தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒருமொழி கொள்கை தான் அதிமுகவின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. விருப்பப்பட்ட மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுகொள்ளலாம். ஆனால் ஒரு மொழியை திணிக்க கூடாது. தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    இதனிடையே அண்ணாவின் குரலில் மிமிக்ரி செய்த ஜெயக்குமார், வடநாட்டு நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்போது சொன்னார்கள். இந்தி மொழியை 3 மாதத்திலேயே நீங்கள் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். நான் சொன்னேன். இந்திய மொழியை 3 மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் கற்றுக்கொள்வதற்கு அதில் என்ன இருக்கிறது" என்று பேசினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த என்று உத்தரவிட்டு இருந்தார்
    • அமைச்சர் கீதாஜீவன் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்

    இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் மாநகர பகுதியான 26, 27வது வார்டுக்குட்பட்ட எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், மார்கெட் ரோடு, எஸ்.எஸ்.பிள்ளை தெரு, வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, யாதவர் தெரு, செயின்ட்ஜான் தெரு, வடக்கு வானியன்விளை, தெற்கு வானியன்விளை, உள்பட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

    இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், திரேஸ்புரம் பகுதி தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மண்டலத் தலைவருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் சரண்யா, மரியகீதா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், வட்டப் பிரதிநிதிகள் ஏகாம்பரம், ஜெயக்குமார், அவைத் தலைவர்கள் திருமணி, மாயாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×