search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 மணி நேரம்"

    • பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
    • போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வெளியேற்றம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து இடையிடையே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மழை மேகத்துடன் மப்பும் மந்தாரமாக காட்சியளித்தது. பின்னர் மதியம் 12.30 மணியில் இருந்து "திடீர்"என்று இடி-மின்ன லுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை பிற்பகல் 2.30 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. அதன்பிறகு மாலை வரை விட்டு விட்டு சாரல் போன்று மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே பயங்கர இடி முழக்கமும், கண்ணை பறிக்கும் வகையில் "பளிச், பளிச்"என்று மின்னலும் ஏற்பட்டது. இந்த கனமழையினால் தெருக்களில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் புகுந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதைத்தொடர்ந்து கோவில் மேலாளர் ஆனந்த் மேற்கொண்ட அதிரடி நட வடிக்கையின் காரணமாக திருக்கோவில் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் கோவிலுக்குள் தேங்கி நின்ற மழையின் நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத் துக்குள் அந்த மழை வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வந்தனர். தொடர்ந்து பெய்த இந்த கனமழையினால் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் லாட்ஜில் உள்ள அறைகளி லேயே முடங்கி கிடந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது.

    • பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலா பயணிகள் பங்கேற்க ஏற்பாடு
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி. மே.31-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது. காலை 8-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திர தொழிலாளர்கள் குடும்பத்துட ன்பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுப்பதற்கு வசதியாகவும் நாளை காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுபோக்கு வரத்து தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கு கிறது. இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    • பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
    • இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யாவிட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதி களில் பரவலாக மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பவானி, வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்னும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வில்லை. இனி வரும் நாட்களில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-23, வரட்டுபள்ளம்-7.40, அம்மாபேட்டை-6.60, குண்டேரிபள்ளம்-5.20, பவானிசாகர்-4, கொடி வேரி, சென்னிமலை-2, பெருந்துறை-1. 

    ×