search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 பவுன் செயின் பறிப்பு"

    • கவிதா பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
    • கவிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

     கோவை

    கோவை கோவில்பாளை யம் அருேக உள்ள செரயாம்பாளை யத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கவிதா (வயது 42).

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். மொபட் வெள்ளானைப்பட்டி - செரயம்பாளையம் ரோட்டில் பாரதி அவென்யூ அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது கவிதாவை மற்றொரு மொபட்டில் பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதில் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த கவிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காளப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டில் பின் தொடர்ந்து பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    • சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.
    • வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்.

    கோவை,

    கோவை வேலாண்டிபாளையம் கொண்டசாமி வீதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கல்யாணி (வயது 71). இவரது தனது வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தில் அவரது மகன் குமார் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மதியம் கல்யாணி தனது வீட்டின் கதவை பூட்டாமல் படுத்து இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனையடுத்து அந்த வாலிபர் தான் கொண்டு வந்த செலோ டேப்பை எடுத்து மூதாட்டியின் வாயில் சுத்தினார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் செயினை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள். 

    ×