search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்த கட்டணம்"

    • கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம்.
    • தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடி.

    தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் நியாயமான கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) மாநில அளவிலான திட்டமான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் கேபி கணேஷ்குமார், கஜக்கூட்டம் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேஎஸ்ஆர்டிசியின் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சிகளை வழங்குகிறது. இலகுரக மோட்டார் வாகனம் (எல்எம்வி) மற்றும் கனரக மோட்டார் வாகனம் (எச்எம்வி) உரிமம் பெற ஆர்வமுள்ளவர்கள் தலா ரூ.9,000க்கும், இருசக்கர வாகனப் பயிற்சி ரூ.3,500க்கும் பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கார் மற்றும் இருசக்கர வாகனப் பயிற்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய காம்போ கட்டணமாக ரூ.11,000க்கு பயிற்சி பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முயற்சி தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

    கனரக மோட்டார் வாகனம் பயிற்சிக்கு பொதுவாக ரூ. 15,000, இலகுரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு ரூ. 12,000 முதல் ரூ. 14,000 வரை, தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் இருசக்கர வாகனப் பயிற்சிக்கு ரூ.6,000 செலவாகும்.

    இதற்கிடையில், டிரைவிங் ஸ்கூல் துறையில் கே.எஸ்.ஆர்.டி.சி.யின் நுழைவு ஓட்டுநர் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஓட்டுநர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் இந்தப் பள்ளிகள் மூலம் தரப்படுத்தப்பட்ட பயிற்சி நடைமுறைகளை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் இருந்து காசிக்கு 18-ந் தேதி ஆன்மீக சுற்றுலா ெரயில் இயக்கப்படுகிறது.
    • பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

     மதுரை

    இந்தியாவின் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களை தரிசிக்க, தென்னக ெரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து காசிக்கு வருகிற 18-ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளது. இது திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, விஜயவாடா வழியாக 19-ந் தேதி உ.பி மாநிலம் சித்திரக்கூடம் செல்லும்.

    நவம்பர் 20-ந் தேதி சர்வ ஏகாதசி அன்று ராம்காட்டில் புனித நீராடி குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோவில்களை தரிசனம் செய்யலாம். 21-ந் தேதி பிரதோஷம் அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ராமஜன்ம பூமி கோவில் தரிசனம். 22-ந் தேதி சிவராத்திரி அன்று காசி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களில் தரிசனம். 23-ந் தேதி சர்வ அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்கள் வழிபாடு முடிந்து விஷ்ணு பாத தரிசனம்.

    24-ந் தேதி ஒடிசாவில் பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியனார் கோவில் தரிசனம். 26-ந் தேதி ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோவில் 21 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம். 27-ம் தேதி சுற்றுலா ரயில் மதுரை வரும்.

    பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை- காசி சுற்றுலா ரயிலில் பயணம் செல்ல www.ularail.com இணைய தளத்தில் பதிவு செய்யலாம்" என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    ×