என் மலர்
நீங்கள் தேடியது "10 சதவீத இட ஒதுக்கீடு"
- ‘சமூக நீதி’ என்பது அனைவருக்கும் ‘சம நீதி’யை வழங்குவது தான். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.
- தி.மு.க.வின் சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானதாகவே எப்போதும் உள்ளது.
கோவை:
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே வேளையில் சில மாநில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
10 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பா.ஜ.க.வின் சமநீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (இடபிள்யு எஸ்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 103-வது திருத்தம் செல்லும் என்று, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது பொது பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தமிழக மண்ணில் இருந்து, சமூக நீதிக்கான குரலை, நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரை இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத, பொதுப்பட்டியலில் உள்ள ஏழைகள், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாமலும், அரசு வேலைவாய்ப்புகளை பெற முடியாமலும் இருந்தனர்.
இந்த சமூக அநீதியை சரி செய்யவே, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.
'சமூக நீதி' என்பது அனைவருக்கும் 'சம நீதி'யை வழங்குவது தான். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. ஆனால், தி.மு.க.வின் சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானதாகவே எப்போதும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக வெறுப்புணர்வை விதைத்து, அதன் மூலம் அரசியல் நடத்தி வரும் கட்சிதான் தி.மு.க.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மட்டும் பயன்பெறவில்லை. அப்படியொரு பிரசாரத்தை தி.மு.க. செய்து வருகிறது. தமிழகத்தில் பிராமணர்கள் மட்டுமல்லாது, வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட 60-க்கும் அதிகமான சமூகத்தினர், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்குள் வருகின்றனர். தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இந்த சமூகத்தினரையும் பலி கொடுக்க தி.மு.க. தயாராகிவிட்டது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டை, உயர் ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று அதனை எதிர்க்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் திரும்ப திரும்ப கூறி வருகின்றன. சட்டத்தில் எங்கும் உயர் ஜாதி ஏழைகள் என்று குறிப்பிடப்படவில்லை.
இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத சமூகங்களை, உயர் ஜாதி என்று சட்டம் அழைக்கவில்லை. பொதுப்பட்டியலுக்குள் வைத்துள்ளது. உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று எதுவும் கிடையாது. சட்டத்தில் இல்லாத ஒன்றை திரும்பத் திரும்ப கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.
அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. அதனால் தான் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்த சிக்கல்கள் பலவற்றுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தீர்வு கண்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 'எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்' என்பதுதான் பா.ஜ.க. அரசின் கொள்கை.
10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மீது இரு அவைகளிலும் விவாதத்திற்கு வந்தபோது, அதனை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரித்தன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. அப்படியெனில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொல்ல வருகிறாரா என்பது தெரியவில்லை.
10 சதவீத இட ஒதுக்கீடு பற்றி தவறாக பிரசாரம் செய்யாமல், காலங்காலமாக, இட ஒதுக்கீடு கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வந்த ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிய சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ’எல்லோருக்கும் எல்லாம்’ என்ற ’சம நீதி’ கொள்கையை தான் பின்பற்றி வருகிறது.
- பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க. எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது.
கோவை:
பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டால், பிராமணர் சமுதாயம் மட்டுமே பயன்பெறுகிறது என்ற நச்சு பிரசாரத்தை, ஹிட்லர் யூதர்களிடம் காட்டியது போன்ற வெறுப்புணர்வை தனது பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர் என இடஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத அனைத்து ஜாதியினரும், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் பலன் பெற முடியும்.
தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.), எஸ்.சி. (அருந்ததியர்), பி.சி. (முஸ்லிம்) என 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்த வரம்புக்குள் வராத சமூகம், பிராமணர் சமூகம் மட்டும்தான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறாரா? வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு என 60-க்கும் அதிகமான ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இதனை ஆர்.எஸ். பாரதி மறுக்கிறாரா? அல்லது இந்த சமூகங்களுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு தேவையில்லை. இந்த சமூகங்களில் ஏழைகளே இல்லை, அவர்களெல்லாம் பணக்காரர்கள் என்று கூற வருகிறாரா? என்பதை அவர் விளக்க வேண்டும்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற 'சம நீதி' கொள்கையை தான் பின்பற்றி வருகிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க. எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதனை செயல்படுத்தியும் வருகிறது.
தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வருகிற சமூகங்கள் எவை என்பது அனைவருக்கும் தெரியும். 69 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூகங்கள் எவ்வளவு என்பது பற்றியும், அவர்களில், உயர் கல்வி பெற்றோர் எத்தனை சதவீதம்? அரசு வேலைவாய்ப்பு பெற்றோர் எத்தனை சதவீதம்? என்பது பற்றிய புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் இட ஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், அவர்களில் உயர் கல்வி பெற்றோர் எத்தனை சதவீதம், அரசு வேலைவாய்ப்பு பெற்றோர் எத்தனை சதவீதம் என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, பிராமண வெறுப்புணர்வை விடாமல் வளர்த்து வரும் தி.மு.க., அதற்காக இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத 60-க்கும் அதிகமான மற்ற சமூகங்களையும் சேர்த்து பலியிட்டு விட வேண்டாம்.
1949-ல் தொடங்கப்பட்ட தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு இதுவரை ஒரு பெண்மணியோ, அல்லது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரோ வர முடியவில்லை. இனியும் வருவதற்கான அறிகுறியும் இல்லை. இதுதான் சமூக நீதியா என்பதையும் தி.மு.க.வினர் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.
- முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனையை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போ அவர் கூறியதாவது:-
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசு, மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். வன்னியர்களின் வாக்குகளை வாங்கிய தி.மு.க. இட ஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் பெறுவதை தி.மு.க. விரும்பவில்லை. இதற்கு தி.மு.க. சொல்லும் காரணம் சரியானது அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளி விவரங்களின் மூலம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தி.மு.க. கூறியதை பா.ம.க., வன்னியர் சங்கம் ஏற்காது. இதற்காக நான் மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளேன். தற்போது வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இப்படி ஒரு பொய்யான தகவலை அவர் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படாமல் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ( வன்னியர்) வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனையை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சி.பி. ஐ. விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். இது குறித்து பா.ம.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் தி.மு.க. தான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972-ம் ஆண்டு அறிமுகம் செய்தது தி.மு.க.தான் காரணம். எனவே முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும். நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறைவு. குவிண்டால் ஒன்றுக்கு ரூ 800 உயர்த்தி தரவேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது இரு மாநில உறவுவை கெடுக்கிறது. 22 அணைகள் கட்டியபின்பு இனி அணை கட்டினால் பாலாறு பாலைவனமாகும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சட்டப்பேரவை 100 நாட்கள் நடத்தவேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை அடுத்தகூட்டத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- 23 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 4 வருடம் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.
- அதன்பின் 25 சதவீதம் பேர் 15 ஆண்டு பணிகள் நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சண்டிகர்:
அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 4 ஆண்டு பணிபுரிந்தபின் வெளியேறிவிடுவார்கள். அதன்பின் 15 ஆண்டுக்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
இதற்கிடையே, அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதால் அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர் கிடைக்காது எனக் கூறினர். ஆனால், மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.
ஒருவேளை பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அக்னிவீர்களுக்கு மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக் காவலர், ஜெயில் வார்டன் மற்றும் எஸ்பிஓ போன்ற பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் என அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபரில் அரியானா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே, அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னிவீர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையின் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
#WATCH | Haryana CM Nayab Singh Saini says "Agnipath scheme was implemented by PM Modi on 14th June 2022. Under this scheme, Agniveer is deployed in the Indian Army for 4 years. Our government will provide 10% horizontal reservation to Agniveers in Haryana in direct recruitment… pic.twitter.com/1WNxKLK65H
— ANI (@ANI) July 17, 2024