என் மலர்
நீங்கள் தேடியது "கண்காணிப்பு குழு கூட்டம்"
- சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 மற்றும் 2018, விதி-16-ன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் வருகிற 29-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் 4-ஏ-இல் உள்ள பிரிவுக் கூறு 15 ஏ(11)-இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது
- மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்த ப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
அலுவலர்கள் துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொட ர்பாக ஆண்டறிக்கையின்படி விரிவாக எடுத்துரைத்தனர்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மத்திய அரசின் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மாநில அரசுடன் இணைந்து அத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்த ப்பட்டு வருகிறது என்ப தனை கண்காணித்து அத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு இக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பொதுமக்களிடையே சென்றடையும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறீர்கள்.
அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதே னும் குறைபாடுகள் இரு ப்பின் அரசு அலுவலர்கள் எனது கவனத்திற்கு உடனடி யாக கொண்டு வரும் போது அதற்கான உரிய நட வடிக்கைள் மேற்கொள்ள ப்படும். அதனைப்போன்று, ஊராட்சி மன்றத்தலை வர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதன்மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.
- மாவட்ட கண்கா ணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
- செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்ட நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வேர் பாதுகாப்புத்துறையின் சார்பில் மூன்றாம் காலாண்டு மாவட்ட கண்கா ணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்குழு கூட்டத்தில் தேசிய உணவுப் பாதுகா ப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு சட்டம் 2017-ன்படி பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்தும், தரமான பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தா லோசிக்கப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ராகி வழங்குவது குறித்து தெரிவிக்கும் போது ராகி கொள்முதல் செய்யும் பணிகள் மூன்று கொள்முதல் நிலையங்கள் (பென்னாகரம், தருமபுரி மற்றும் அரூர்) மூலம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நியாய விலைக்கடைகள் மூலம் விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி குடும்ப அட்டைதரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரத்த சோகையை கட்டுபடுத்தும் என்பதால், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் தருமபுரி மாவட்டத்திலும் செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்ட நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
இக்குழுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளார் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம்.யசோதா, தருமபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் கே.எம்.அண்ணாமலை மற்றும் தருமபுரி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் சேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.