search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய மின்சக்தி"

    • சூரிய ஒளி மின் சக்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர்

    மின் கட்டண உயர்வு விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில்துறையினரை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதற்கு தீர்வாக சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் பயன்படுத்தினர். தற்போது சோலார் மின்சாரம் பயன்படுத்துவதற்கான நெட்வொர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளித் தொழில் துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இது குறித்து நாடா இல்லா தறி நெசவாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    சூரிய ஒளி மின் சக்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 27 பைசாவாக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒரு ரூபாய் 48 பைசாவாக உயர்த்தப்பட்டது. நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம்.

    இந்நிலையில் கடந்த ஜூலை 1 முதல் ஒரு ரூபாய் 53 பைசாவாக மீண்டும் நெட்வொர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வேதனையை அளிக்கிறது.சூரிய ஒளி மின் உற்பத்தியை கணக்கீடு செய்ய மீட்டர் பொருத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட நெட்வொர்க் கட்டணத்தை குறைத்து சூரிய ஒளி மின் சக்தி உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு கோவிந்தராஜ் கூறினார்.

    • கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
    • சீனா அதிகமான தொகையை சேமித்துள்ளது.

    புதுடெல்லி :

    எரிசக்தி அமைப்பான 'எம்பர்' ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகமாக உள்ள முதல் 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் ஆகியவையே அந்த நாடுகள். இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய 7 ஆசிய நாடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக, கடந்த ஜனவரி மாதம் ஜூன் மாதம்வரை எரிபொருள் செலவில் மொத்தம் 34 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகை, மேற்கண்ட நாடுகளில் செலவான மொத்த எரிபொருள் செலவில் 9 சதவீதம் ஆகும்.

    இவற்றில், சீனா அதிகமான தொகையை சேமித்துள்ளது. 2 ஆயிரத்து 100 கோடி டாலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது. அந்நாட்டின் மின்சார தேவையில் 5 சதவீதம், சூரிய மின்சக்தியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    அடுத்தபடியாக, ஜப்பான் 560 கோடி டாலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது.

    3-வது இடத்தில் இந்தியா உள்ளது. மேற்கண்ட 6 மாத காலத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் இந்தியா, எரிபொருள் செலவில் 4.2 பில்லியன் டாலரை (சுமார் ரூ.34 ஆயிரம் கோடி) சேமித்துள்ளது. அதாவது, 1 கோடியே 94 லட்சம் டன் நிலக்கரியின் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதை பயன்படுத்தி இருந்தால் நெருக்கடி அதிகரித்து இருக்கும்.

    வியட்நாம், 170 கோடி டாலர் எரிபொருள் செலவையும், தென்கொரியா 150 கோடி டாலர் செலவையும், தாய்லாந்து 21 கோடி டாலர் செலவையும், பிலிப்பைன்ஸ் 7 கோடியே 80 லட்சம் டாலர் செலவையும் சேமித்துள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×