search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடும் ரெயிலில்"

    • பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள்.
    • கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்த மர்மநபர்.

    கன்னியாகுமரி:

    கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்து மர்மநபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபரின் வரைபடத்தை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மர்மநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் கன்னியாகுமரி, குளச்சல் என்று எழுதப்பட்டிருந்ததால் அந்த நபர் இங்கு வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். உளவு பிரிவு போலீசாரும், தனி பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் சோதனை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

    வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணி களின் உடைமை களை போலீசார் சோதனை மேற்கொண்ட னர். பாட்டில் களையும் அவர்கள் சோதனை செய்தனர்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம், குழித் துறை உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை நடந்தது.

    • ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர்.
    • ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    கேரள மாநிலம் கொல்லம் கடக்கல் பகுதியை சேர்ந்தவர் தீபக் (46). பல் டாக்டர். சம்பவத்தன்று கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டார்.

    அதே ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர். ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த 3 வாலிபர்களும் தீபக்கை தாக்கினர். இது குறித்து தீபக் பெங்களூரு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

    இந்த புகார் ஈரோடுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×