என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்டீபன் பிளெமிங்"
- அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை.
- அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணியின் பினிஷராக செயல்படும் தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9-ம் வரிசையில் இறங்கினார். அப்போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இருந்தாலும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும், அவர் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:-
அவரது பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை தோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது. அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்.
இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார்.
நான் கடந்த ஆண்டே கூறினேன், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார்.
என்று பிளெமிங் கூறினார்.
- நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம்.
- சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை.
ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்.சி.பி. அணி வீழ்த்தியுள்ளது.
இந்நிலையில், போட்டிக்கு பின்பு சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது மற்ற அணிகள் பெரிய ஸ்கோரை அடிக்கும்போது சிஎஸ்கே அணி பேட்டிங்கில் குறைவான ரன்களை அடிக்கும் முறை காலாவதியாகி விட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா? என்று செய்தியாளர் எழுப்பினார்.
இதற்கு கோபத்துடன் பதில் அளித்த பிளெமிங், "நீங்கள் ஃபயர்பவரைப் பற்றி பேசுகிறீர்கள். எங்களிடம் ஃபயர்பவர் முழுமையாக உள்ளது. இந்தக் கேள்வி எனக்குப் புரியவில்லை. தொடரின் முடிவில், யார் வெற்றி பெறுவார்கள் என்று பாருங்கள். நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம். எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
நீங்கள் கேட்டது ஒருவிதத்தில் முட்டாள்தனமான கேள்வி. நாங்கள் பல ஆண்டுகளாக உங்களிடம் கூறிவருகிறோம். சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. சேப்பாக்கத்தை விட வேறு மைதானங்களில் நாங்கள் பலமுறை வென்றுள்ளோம்
கடந்த 2 வருடங்களாக சேப்பாக்கம் மைதானத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இது [பழைய] சேப்பாக்கம் மைதானம் இல்லை. பழைய சேப்பாக்கம் மைதானத்தில் 4 சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கலாம். ஒவ்வொரு மைதானத்தின் தன்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது" என்று தெரிவித்தார்.
- ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
- விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விராட் கோலி, பட்டிதாரை அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
இது குறித்து பிளமிங் கூறியதாவது:-
விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம். ஆர்சிபி அணியில் விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டை விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது.
விராட் கோலியை தவிர இம்முறை அவர்கள் பல பலமான வீரர்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆர்சிபி மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிகளும் தற்போது இப்படிதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கின்றேன். பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.
- வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.
டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.
இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.
மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:
வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- டோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாக பிளேமிங் கூறினார்.
- சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது.
சென்னை அணியின் கேப்டன் டோனியின் முழங்கால் காயம், அவருக்கு தொல்லையையாக இருப்பதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிளேமிங் கூறியதாவது:-
டோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் நேற்றைய போட்டியின்போது காயமடைந்த சிசண்டா மகலா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் பிளெமிங் கூறினார்.

இதனால் சிசண்டா மகலா சென்னை அணியின் அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது.
சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 17-ந் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
- ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
இந்த மாதம் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியுடன் இந்த குழு இணைந்து செயல்படுவர்.
பிளெமிங் அணியில் இணைவது வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும் ஊழியர்களுக்கும் நல்லது என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
- பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.
இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.
பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
- இந்த ஐபிஎல் சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் டோனி
- டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது.
இந்த சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் எம்.எஸ் டோனி. இதுவரை டெல்லி, மும்பை, லக்னோவுக்கு எதிராக 37* (16), 20* (4), 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக விளையாடி இருக்கிறார்
சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசியுள்ளார். அதில், "டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எனவே அவருடைய ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே நாங்கள் அவருடைய உச்சகட்ட திறமையை பார்த்துள்ளோம். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் அவருடைய முழங்காலில் பிரச்சனை இருக்கிறது"
அதிலிருந்து மீண்டு வரும் அவரால் குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இங்கே அனைவரும் எங்களைப் போலவே டோனி அதிக நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் நாங்கள் அவரை தொடர் முழுவதும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 – 3 ஓவர்கள் விளையாடுவதே சரியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது.
அவர் பேட்டிங் செய்ய வரும் போது அற்புதமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்கிறார். அந்த வகையில் டோனி சாதித்துள்ள விஷயங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் செய்துள்ளதை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமில்லை. எங்களுடைய அணியின் இதயத்துடிப்பாகவும் ஒரு அங்கமாகவும் அவர் இருப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள்.
- அதனால் அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம்.
ரோகித் சர்மா தலைமையில் நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதையடுத்து இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) நடைபெறும் தங்களுடைய முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அக்ஸர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் உள்ள மைதானக்களைப் போல் அல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் உள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கும். எனவே இந்திய அணி குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரியான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு இந்தியா வீணடிக்காது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள். அதனால் அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம். ஜடேஜா எப்பொழுதுமே ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு எதிரணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். எனவே அவரை இந்திய அணி சிறப்பாக கையாளும்.
இவ்வாறு பிளெமிங் கூறினார்.