search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை விலை உயர்வு"

    • முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.
    • கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை ஆகிய பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமாக முட்டை உற்பத்தி நடைபெறுகிறது.

    இந்த முட்டைகள் தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கும், தமிழகத்தின் பிற மாவட்டடங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணைகளில் ரெக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதனை பண்ணயைாளர்கள் கடை பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி 460 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்றுகாலை 540 காசுகளாக இருந்தது . இதற்கிடையே நேற்று நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.

    இதையடுத்து 540 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை 5 காசுகள் உயர்த்தி 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு , சென்னை 600 காசுகள் , ஐதராபாத் 520, விஜயவாடா 520, பர்வாலா 463, மும்பை 575, மைசூரு 545, பெங்களூரு 585, கொல்கத்தா 540, டெல்லி 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து கோழிப்பண்ணை யாளர்கள் கூறியதாவது-

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் குளிர்ந்த சீேதாஷ்ன நிலை நிலவி வருகிறது.

    இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் கர்நாடகா , மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நாமக்கல்லில் நேற்று முட்டை கோழி பண்ணை யாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது . இதில் ஒரு கிலோ 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கோழி விலையை 5 ரூபாய் உயர்த்தி 97 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.

    • தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாட்டிற்கு ஏற்றுமதிக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்ட ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.106 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.77 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

    • நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன.
    • முட்டை கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த 1970-ம் ஆண்டில் நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன. பல நேரங்களில் முட்டை விலை உயர்வும், சரிவும் தொடர்ந்து வந்தன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 24-ந் தேதி கோழிப்பண்ணை வரலாற்றில் முதன் முறையாக ஓர் முட்டை விலை ரூ.5.75 ஆனது.

    நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், ரூ. 5.75 ஆக இருந்த முட்டை விலை, மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்கு அதிக அளவில் முட்டை தேவை ஏற்பட்டுள்ளதாலும், தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதாலும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதாக முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. இதனால் முட்டை கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 580 காசுகளாக இருந்தாலும் சேலத்தில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் 50 ரூபாயை கொடுத்து 10 முட்டை வாங்கியவர்கள் 7 முட்டைகளை மட்டுமே வாங்கி செல்கிறார்கள். மேலும் முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள உணவு பொருட்களில் முட்டை முக்கிய இடம் வகிக்கிறது. முட்டை விலை தற்போது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் ஆம்லெட் முட்டை தோசை, முட்டை புரோட்டா, முட்டை பிரியாணி உள்பட பல உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஆம்லெட் 15 ருபாய்க்கு விற்று வந்த நிலையில் சில கடைகளில் ஆம்லெட் விலை தற்போது 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல முட்டையால் தயாரிக்கப்படும் மற்ற உணவு பொருட்களின் விலையும் உயரும் நிலை உள்ளதால் முட்டை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) சென்னை 640, பர்வாலா 609, பெங்களூர் 620, டெல்லி 652, ஐதராபாத் 599, மும்பை 659, மைசூர் 625, விஜயவாடா 610, ஹொஸ்பேட் 590, கொல்கத்தா 675.

    இதற்கிடையே பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது . இதில் கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது . அதன்படி 98 ரூபாயாக இருந்த கறிக்கோழி 101 ஆக உயர்ந்தது. நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி பண்ணயைாளர்கள் கூட்டத்தில் முட்டை கோழி விலையை கிலோவுக் கு 8 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 88 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 80 ரூபாயாக குறைந்தது.

    • நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்தது.
    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். இதையடுத்து முட்டை விலை 520 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.96-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 வாரத் துக்கு மேலாக 490 காசுகளாக இருந்து வந்தது.
    • இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 வாரத் துக்கு மேலாக 490 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று என்இசி சார்பில், மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் முட் டையின் பண்ணை கொள் முதல் விலை 510 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது. புரட்டாசி மாதம் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டையின் விற்பனை குறைவாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பண்ணையாளர்கள் முட்டை உற்பத்தியை குறைத்துக் கொண்டனர். தற்போது, புரட்டாசி முடியும் தருவாயில் முட்டையின் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    10 பைசா உயர்வு

    கடந்த 15-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.70-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ.4.75 என இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை-540, பர்வாலா-520, பெங்களூர்-530, டெல்லி-525, ஹைதராபாத்-501, மும்பை-545, மைசூர்-530, விஜயவாடா-516, ஹொஸ்பேட்-490, கொல்கத்தா-615.

    கோழிவிலை

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.104 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.92 ஆக தென்னிந்திய கோழி ப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இதேபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 114 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 11-ந் ரூ.4.55 ஆக இருந்த முட்டை விலை 12-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.60 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    • நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்ப னைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 6-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.30-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ரூ. 4.35 ஆனது. பின்னர் 9-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.40 ஆனது. மீண்டும் 10-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.50 ஆனது. 11-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.55 ஆனது.இந்த நிலையில், மாலையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்த ப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயி க்கப்பட்டது.

    கோழிவிலை

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ. 6.50 வரை விற்கப்படுகிறது.
    • கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.143, முட்டை கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதனால் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக உயர்ந்தது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ. 6.50 வரை விற்கப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 8 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்றவை முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.143, முட்டை கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    • முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது, அதன்படி 530 காசுகளாக இருந்த முட்டை விலை 535 காசுகளாக உயர்ந்தது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பண்ணை கொள்முதல் விலை ரூ.143-யாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோல முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.95-யாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது.

    நாமக்கல்:

    சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அப்போது முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    தற்போது முட்டை விலை உயர தொடங்கியுள்ளது, இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.55 ஆக இருந்த ஒரு முட்டையின் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

    சென்னை-480, பர்வாலா-408, பெங்களூர்-475, டெல்லி-425, ஐதராபாத்-435, மும்பை-495, மைசூர்-480, விஜயவாடா-438, ஹொஸ்பேட்-435, கொல்கத்தா-507.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 91 ஆக பிசிசி அறிவித்துள்ளது. அதுபோல் முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 65 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    ×