search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

    • நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. முட்டை விலை நிர்ணயம் மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி முட்டை விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் 540 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டை விலை 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதே போல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.113 ஆக நீடிக்கிறது. அதேபோல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.90 ஆக விலை நீடிக்கிறது.

    Next Story
    ×