என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமோ அன்பரசன்"

    • உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நா கூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார்.
    • பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார் ஜெயக்குமார்.

    சென்னை:

    காஞ்சீபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், "தி.மு.க. ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் தி.மு.க.வினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நடிகர்களை ரசிக்கலாம், அதோடு வந்துவிட வேண்டும். முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது" என்றார்.

    இந்நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருத்துக்கு பதிலடி கொடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தகுதி இல்லை.

    மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

    உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நா கூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார்.

    நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • தமிழ் நாட்டில் அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன்.
    • மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையை அன்பரசன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன். அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும்.

    அண்ணாவின் பெயரால் புரட்சித் தலைவர் இயக்கம் கண்டபோதும் சரி, அவருக்குப் பின்னால் இந்த இயக்கத்தை அம்மா வழிநடத்திய போதும் சரி, கருணாநிதி எத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாரோ, அதையே இப்போது ஸ்டாலினின் தொண்டரடிப் பொடி யாழ்வார்கள் கையில் எடுத்திருப்பது, அவர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையை அன்பரசன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது.
    • அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    மனிதர் புனிதர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கப்பட்ட இந்த புனித இயக்கத்தை 3-ம் பெரிய இயக்கமாக உருவாக்கி, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் அன்பரசன் நாகூசாமல் பேசியது ஒவ்வொரு தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் உள்ளது.

    அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது. அமைச்சர் அன்பரசன், ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசியதற்கு அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தா.மோ.அன்பரசனை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அம்மா பேரவை வலியுறுத்துகிறது.

    2 கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக திகழும் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து இது போன்று பேசினால் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணையை பெற்று, அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • திடீரென நடத்தப்பட்ட கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    காஞ்சிபுரம்:

    தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) , காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது.

    தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக தெரிகிறது.

    திடீரென நடத்தப்பட்ட இந்த கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து வெளியாகி வரும் தகவலால் தான்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், 'அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தி.மு.க.வில் மீண்டும் இந்த பேச்சு எழ தொடங்கியது.

    இதையடுத்து சென்னை கோட்டூபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவு எடுப்பார்' என்று கூறினார்.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.

    10 நாட்களில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார்.

    சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    23 பேர் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

    இந்நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்த பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே 2 பேர் பலியான நிலையில் மோகனரங்கன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • உணவுப்பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார்.
    • இந்த பகுதிகளில் தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை.

    * குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர். ஆனால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * உணவுப்பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார்.

    * உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு மீன் சாப்பிட்டுள்ளார்கள்.

    * இந்த பகுதிகளில் தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சில மணி நேரத்தில் தெரிந்து விடும் என்று அவர் கூறினார்.

    • மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • பல்லாவரம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி, மோகனரங்கன் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்த நிலையில் பல்லாவரம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    • குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?
    • முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன்.

    இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?

    அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.

    எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    ×