என் மலர்
நீங்கள் தேடியது "விரிவுரையாளர்கள்"
- பரமக்குடி அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசாணையை ரத்து செய்து, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி யில் 66-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டி.ஆர்.பி மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் 2,391 உதவி பேராசிரியர்கள் நியமிக்க குறிப்பானை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, கவுரவ விரிவுரையாளர்களை பழி வாங்கும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
புதிய அரசாணையை ரத்து செய்து பழைய அரசாணையின்படி உதவி பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- இதற்கான நடைமுறைகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அருணகிரி மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது. தற்போது ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் வழங்குவது போல் அரசு கல்லூரி விரிவுரை யாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க எடுத்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்வதற்கான நடைமுறைகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு கோர்ட்டு ஒப்புதலும், அனுமதியும் வழங்கியுள்ளது. ஆட்சி மாறியதும் அதிகாரிகள் இந்த தேர்வை நிறுத்த முயற்சிக்கின்றனர்.
இதில் முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வை நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். 12 மாதங்கள் பணி செய்தாலும் 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது டாக்டர் தெய்வராஜ், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.