என் மலர்
நீங்கள் தேடியது "வேஷ்டி"
- அய்யப்ப பக்தர்கள் தங்கள் குருசாமியிடம் மாலை அணிந்து விரதம்.
- பக்தர்கள் கருப்பு வேஷ்டி அணிந்தும் விரதம்.
பூதலூர்:
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் எங்கும் ஐயப்ப பக்தர்களின் மாலை அணிவதிலும் சரண கோஷமும் நிறைந்து காணப்படும்.
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் 48 நாள் விரதம் இருந்து சபரிமலை யாத்திரை செல்வதைபிரதானமாக கருதுகின்றனர்.
கார்த்திகை முதல் நாள் பல்வேறு கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் குருசாமி இடம் மாலை அணிந்து விரதத்தை துவக்கினார்கள்.
தஞ்சை மாவட்டம் வடக்குபூதலூர் ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள ஆனந்த காவேரியில் குளித்து ஆனந்த விநாயகர் ஆல யத்தில் மாலை அணிந்து கொண்டனர்.
ஐயப்ப குருசாமி தங்கமணி சாமிகள் ஸ்ரீ ஆனந்த விநாயகருக்கு, ஐயப்பனுக்கு ஆராதனைகள் செய்த பின்னர் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்து விரதத்தை தொடக்கி வைத்தார்.
திரளான ஐயப்ப பக்தர்கள் கருப்பு வேஷ்டி அணிந்தும், காவி வேஷ்டி அணிந்தும்தங்களுடைய விரதத்தை தொடங்கினார்கள். ஐயப்பன் குருசாமி தங்கமணி சாமிகளுடன் அப்பாராசுசாமிகள மற்றும் குருசாமிகள், கன்னிசாமிகள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.
- விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நடந்தது
- மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்
நாகர்கோவில் :
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்க கிருஷ்ணன் தலைமையில் அன்னதானமும், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மைக்கேல் ரத்தினம் தலைமையில் அழகப்பபுரம் மெயின் பஸ் நிறுத்தத்தில் வைத்து ஏழை, எளியவர்களுக்கு சேலை மற்றும் வேஷ்டிகளை மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாபு, வின்சென்ட் கிங், ஒன்றிய செயலாளர் பரமராஜா, மாவட்ட அணி நிர்வாகி மகேஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் லாசர், பேரூர் செயலாளர்கள் லிங்கம் மற்றும் பரமாத்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.