search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிகா பத்ரா"

    • முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.
    • 2-வது மேட்சில் மணிகா பத்ரா 1-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது.

    முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி ஜெர்மனியின் ஜியாவோனா ஷான்- யுயன் வான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.

    2-வது மேட்சில் மணிகா பத்ரா- ஜெர்மனியின் அன்னெத் கவ்மான் மோதினார்கள். இதில் மணிகா பத்ரா 1-3 எனத் தோல்வியடைந்தார்.

    3-வது மேட்சில் அர்ச்சனா கிரிஷ் கமத்- ஜியாவோனா ஜோடி விளையாடியது. இதில் அர்ச்சனா 3-1 என வெற்றி பெற்றார்.

    4-வது போட்டியில் ஸ்ரீஜா அகுலா- அன்னெட் கவ்மான் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்ரீஜா 0-3 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்து வெளியேறியது.

    தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்ர் தடை ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி ஏமாற்றம் அடைந்தார்.

    • இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 3-1 என வென்றது.
    • ஒற்றையர் பிரிவின் 2 சுற்றிலும் மணிகா பத்ரா வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் காமத், ருமேனிய ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 11-9, 12-10, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

    2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-0 என வென்றார். இதன்மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

    3வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 2-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

    4வது சுற்றில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 1-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகித்தன.

    இறுதியில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றார். இதையடுத்து இந்தியா ருமேனியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    • சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    புதுடெல்லி:

    சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் மான்யூவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 4-11, 9-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரீஜா அகுலா, உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான சீனாவின் ஷென் மெங்குடன் மோதினார்.

    இதில் உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகிய இருவருமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளனர்.

    • கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தபாங் டெல்லி அணி ஜி.சத்யனை தங்கள் வசம் வைத்துள்ளது.
    • 4-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் (யூ.டி.டி.) போட்டி புனேயில் ஜூலை 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.

    மும்பை:

    பெங்களூரு ஸ்மாஷர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், புனேரி பால்டன், யு மும்பா ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் 4-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் (யூ.டி.டி.) போட்டி புனேயில் ஜூலை 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது.

    இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைப்பது, பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் வீரர்களை மாற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி நடப்பு சாம்பியன் சென்னை லயன்ஸ் 10 முறை தேசிய சாம்பியனான சரத் கமலை தங்கள் அணியில் தக்க வைத்து இருக்கிறது.

    இதேபோல் கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தபாங் டெல்லி அணி ஜி.சத்யனை தங்கள் வசம் வைத்துள்ளது. நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ராவை பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணி தக்கவைத்து இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான மனவ் தக்கர் யு மும்பா அணியில் தொடருகிறார்.

    • உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.
    • முதல் இரண்டு சுற்றில் மணிகா பத்ரா வெற்றி பெற்றிருந்தார்.

    டர்பன்:

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, 13-வது இடத்தில் உள்ள அட்ரினா டியாஸ்சை (புயர்டோரிகோ) சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 11-6, 10-12, 9-11, 11-6, 11-13, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் அட்ரினாடியாஸ்சிடம் போராடி வீழ்ந்து நடையை கட்டினார்.

    முதல் இரண்டு சுற்றில் மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக மணிகா பத்ரா பதக்கம் வென்றார்.
    • வெண்கலம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இத்தொடரில் முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மணிகா தோல்வியடைந்தார்.

    இதையடுத்து நேற்று நடந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார். இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும், 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெண்கலம் வென்று ஆசிய கோப்பையில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றை எழுதியதற்காக மணிகா பத்ராவை வாழ்த்துகிறேன். அவரது வெற்றி இந்தியா முழுவதும் உள்ள பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் டேபிள் டென்னிஸை இன்னும் பிரபலமாக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
    • வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்.

    பாங்காங்:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீரங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில்  2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மனிகா தோல்வியடைந்தார்.

    இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார்.  இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில்
    வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்று இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.

    போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய அவர், இது மிகப்பெரிய வெற்றியாகும், சிறந்த வீரர்களை தோற்கடித்தேன். நான் அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடி, சிறப்பாகப் போராடி ஒரு அற்புதமான முடிவை எட்டினேன். எனது எதிர்காலப் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் இந்திய வீராங்கனை 44-வது இடத்தில் உள்ளார்.
    • காலிறுதி ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனையை இந்திய வீராங்கனை வீழ்த்தினார்.

    பாங்காங்:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார்.

    மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-11, 11-6, 11-5, 11-7, 8-11, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.

    மேலும் இந்தியாவின் சேத்தன் பாபூருக்குப் பிறகு சாம்பியன்ஷிப் போட்டி கடைசி நான்கு சுற்றுக்குள் வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மணிகா பெற்றுள்ளார். கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையே நடைபெறும் காலிறுதி சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை, அரையிறுதியில் இந்திய வீராங்கனை மணிகா எதிர்கொள்கிறார்.

    ×