என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் உள்பட 3 பேர் கைது"

    • கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
    • அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியம ங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கட்டப்பை ஒன்று வைத்திருந்தார்.

    அதனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 3.480 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் கோபி தாலுகா, பெருமுகை, காந்தி நகரை சேர்ந்த முருகன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் முருகன் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3,480 ஆகும். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோல் கொடுமுடி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்றதாக சரளா என்ப வரை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து 23 புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேப்போல் வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் பாக்கெட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முத்துபாண்டி (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து சில சமூக விரோத கும்பல்கள் அதிக அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் அருகே அக்கரைக்காடு பகுதியில் கஞ்சா விவசாயம் மேற்கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில், போலீசார் ராமராஜன், காசி, சரவணன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    அப்போது அக்கரைக்காடு பகுதியில் ராஜா, மகேந்திரன், பெனாசீர் ஆகியோரிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா செடிகள் எங்கெங்கு பயிரிட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா செடி வளர்த்த இடம் வனத்துறைக்கு கட்டுப்பட்டதா அல்லது வருவாய் துறைக்கு கட்டுப்பட்டதா என்றும் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காபில்கான் (வயது 22). இவர் பட்டபடிப்பு முடித்து விட்டு அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தார். அவரது நண்பர் முகமது சமீரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சமீரின் சகோதரி ஷபானா என்பவருடன் காபில்கான் செல்போனில் பேசி வந்துள்ளார்.

    இதனை ஷபானாவின் கணவர் அலாவுதீன் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இந்த நிலையில் வண்டிபேட்டை பகுதியில் காபில்கான் நின்று கொண்டு இருந்தபோது முகமது சமீர் மற்றும் அலாவுதீன் ஆகியோருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் காபில்கானை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டினர். மேலும் உடலில் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் தொடர்புடைய முகமது சமீர், அலாவுதீன், ஷபானா ஆகிய 3 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

    ×