என் மலர்
நீங்கள் தேடியது "பொது மேலாளர்"
- தங்க நகை கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது.
- நகர்ப்புறங்களில் கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7000 வழங்கப்படும்.
மதுரையை சேர்ந்த பிச்சைராஜன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2024 செப்டம்பர் 30-ந்தேதி சுற்ற றிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில் பல வழி காட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பேன் கார்டு எண்ணை பயன்படுத்தி பல நகைக்க டன்களை பெறுவது, நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டு உள்ளன. பொது நலனுக்கு எதிராக இந்த முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதலின்படி முழு தொகையையும் நகை திருப்பும் போது செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன்களை பெற இயலும். அதோடு நகர்புறங்களில் ஒரு கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது.
ஆகவே தங்க நகைக் கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
- ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம்போல் வடிவ மைக்கப்பட்டு அழகு படுத்தப்படுகிறது.
- கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ. 49¼ கோடி செலவில் நவீனமயமாக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் இந்தரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம்போல் வடிவ மைக்கப்பட்டு அழகு படுத்தப்படுகிறது. மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலைய மேம்பட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் 26-ந்தேதி கன்னியாகுமரி ரெயில் நிலையம் முன்பு உள்ள வளாகத்தில் நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து பிரதமர் மோடி இந்த ரெயில் நிலையத்தின் மேம்பாட்டு பணியை காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து ரூ. 49¼ கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு நவீனமயமாக இருக்கும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தனி ரெயில் மூலம் இன்று காலை கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரூ. 49¼ கோடி செலவில் நடைபெற இருக்கும் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் குறித்து காட்சிபடுத்தப்பட்டிருந்த விளக்க படங்களை பார்வை யிட்டார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் விரி வாக்க பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு ரெயில்வே துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் தனி ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
- அலங்காநல்லூர் பகுதியில் ஆவின் பொது மேலாளர் ஆய்வு செய்தார்.
- ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்தி ரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்த னர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி, மாணிக்கம்பட்டி, மரியம்மாள்குளம் உள்ளிட்ட பால் உற்பத்தியா ளர்கள் சங்கங்களில் மதுரை ஆவின் பொது மேலாளர் சிவகாமி ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பசு கடன், பால் மாடு பராமரிப்பு கடன் வங்கிகள் மூலம் பெற்று தருவது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது, மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. பகுதி அலுவலர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து உறுப்பினர்களுக்கு உதவ வேண்டும் என ஆவின் பொது மேலாளர் கூறினார்.
ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்திரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்தனர்.