என் மலர்
நீங்கள் தேடியது "பிறந்தநாள் விழா கொண்டாட்டம்"
- விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள், நோட் புத்தகம் வழங்கப்பட்டது.
- குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஊட்டி,
தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா மஞ்சூர் பஜாரில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பில்லன், கீழ்குந்தா செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள், நோட் புத்தகம், பேனாக்கள், முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், செயல் வீரர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டர்.
- 350 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் உபகரனங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
- 70 பேருக்கு சேலை,வேஷ்டி மற்றும் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைமை சார்பாக நடிகர் மற்றும் அகில இந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தளபதி விஜய் 49-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி
நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மக்கள் மன்றம் தொண்டரணி தலைமை சார்பாக கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது. பாப்பாரப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் பயிலும் 350 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் உபகரனங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பழைய பேட்டை சின்ன்ணன் தெரு பகுதியில் மக்கள் இயக்கம் சார்பாக கிளை மன்றம் திறந்து பொது மக்கள் 70 பேருக்கு சேலை,வேஷ்டி மற்றும் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் கேக் வெட்டி பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தொண்ட ரணி கிழக்கு மாவட்ட தலைவர் முரளி விஜய் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சத்யராஜ் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மணிகண்டன் மாவட்டத் துணைத் தலைவர் ஜெயசூர்யா கிருஷ்ணகிரி முன்னாள் நகரத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி நகரத் தொண்டரணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் இர்பான், பொருளாளர் அருண்,துணை தலைவர் சுகந்த் துணை செயலாளர் கேசவன், மற்றும் நகர நிர்வாகிகள் ஜோசப், பிரதீப், தமிழ், கோபால், சிவா, நவீன், சூர்யா,மணிகண்டன், விமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
பர்கூரில் கொண்டாட்டடம்
இதேபோன்று நடிகர் விஜய் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு பர்கூர் ஒன்றிய தொண்டரணி தலைமை சார்பாக பர்கூர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பர்கூர் சுற்றியுள்ள கிளை மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தொண்டரணி பர்கூர் ஒன்றிய தலைவர் பசுவராஜ் மற்றும் செயலாளர் புஷ்பராஜ் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் முரளிவிஜய் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தொண்டரணி மாவட்ட செயலாளர் சத்யராஜ், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் சூர்யா, கிருஷ்ணகிரி முன்னாள் நகர தலைவர் ரமேஷ், பர்கூர் தொண்டரணி சபரி துரை, சிவப்பிரசாத் அஜய் விஷ்ணு அரவிந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
ஊத்தங்கரை
இதேபோன்று நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி சார்பாக மத்தியில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஊத்தங்கரை மற்றும் மத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த சுமார் 50 பச்சிளம் குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து குப்பநத்தம், எட்டுபட்டி மற்றும் வேலாவள்ளி ஆகிய கிராமங்களில் தளபதி பெயர் பலகை திறக்கப்பட்டது. குப்பநத்தம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து கவுரவிக்க பட்டது. மேலும் எட்டுபட்டியில் உள்ள உயர் நிலைபள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் முரளி விஜய் தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சத்யராஜ், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் ஜெயசூர்யா, இணை செயலாளர் சுகுமார், பர்கூர் ஒன்றிய தொண்டரணி தலைவர் பசுவராஜ், செயலாளர் புஷ்பராஜ், மத்தூர் ஒன்றிய தலைவர் சந்தோஷ் குமார், ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், இணை செயலாளர் குமார், சாரதி, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் ரமேஷ், பொருளாளர் எழில், ஒன்றிய நிர்வாகி சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.