search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப்-இன்ஸ்பெக்டர்கள்"

    • நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார்.
    • நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

    மேலும் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதா, பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கும் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.

    பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணி யாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார், திருச்செங்கோடு மது விலக்கு பிரிவிற்கும், நாமக்கல் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, வெப்படை போலீஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நாமகிரிப்பேட்டைக்கும், மங்களபுரத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி திம்ம நாயக்கன்பட்டிக்கும், ஜேடர்பாளையத்தில் பணி யாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியம் பரமத்திவே லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.
    • இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நிய மிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சேலம் மாநகர் காவல் துறையில், 12 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று பணியில் சேர்ந்தனர்.

    மீதி 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் பணியில் இணைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3 ஆண்டுகளுக்கு மேலான 201 போலீசார் கடந்த இரு வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர்  :

    திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலான 201 போலீசார் கடந்த இரு வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது 14 சப்-இன்ஸ்பெக்டர்களை மாநகருக்குள் இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படிவடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரஜினிகாந்த் கட்டுப்பாட்டு அறைக்கும், வடக்கு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தெற்கு எஸ்.ஐ., இளஞ்செழியன் வடக்குக்கும், தெற்கு ராமசாமி வடக்கு குற்றப்பிரிவுக்கும், கொங்கு நகர் அனைத்து மகளிர் எஸ்.ஐ., கனகவள்ளி தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், கே.வி.ஆர்., நகர் சப்- இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் கொங்கு நகர் மகளிருக்கும், கலாவதி கே.வி.ஆர்., நகர் மகளிருக்கும், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மத்திய போலீஸ் நிலையத்திற்கும், கட்டுப்பாட்டு அறை சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் மத்திய குற்றப்பிரிவுக்கும், திருமுருகன்பூண்டி ராஜூ வடக்குக்கும், நல்லூர் கிருஷ்ணமூர்த்தி வீரபாண்டிக்கும், மத்திய குற்றப்பிரிவு அப்பாகுட்டி திருமுருகன்பூண்டிக்கும், வீரபாண்டி சாம் ஆல்பர்ட் மத்திய குற்றபிரிவுக்கும் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு பாண்டிதுரை ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×