search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூ-டியூபர்"

    • யூ-டியூபர் மீதான வழக்கு மதுரை கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
    • பீகார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இது வடமாநில தொழிலாளர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சட்டம்- ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

    இதுகுறித்து பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த யூ-டியூபர் மணிஷ் காஷ்யப் மீது மதுரை பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்தனர். அதன் பிறகு அவர் கடந்த 30-ந் தேதி மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    நீதிபதி டீலாபானு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது மனீஷ் காஷ்ய ப்பை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்து 3-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    யூ-டியூபர் மனீஷ்காஷ்யப் பின் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்துவதாக இருந்தது. இன்று விடுமுறை என்பதால் தாமரை தொட்டி பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில் மனீஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப் பட்டார்.

    அப்போது அவரை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனீஷ் காஷ்யப் விசா ரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு சில கேள்வி களுக்கு மட்டும் பதில் அளித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அவரை பீகார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டி யுள்ளது. மனீஷை மேலும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    கோர்ட்டு விடுமுறை என்பதால் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலையில் வருகிற புதன்கிழமைக்கு (5-ந் தேதி) வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

    • ஆதித்யா மற்றும் அதர்வா ஆகிய 2 பேர் அவரை காப்பாற்றினர்.
    • அவர்களுடன் செல்பி எடுத்து டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

    மும்பை :

    தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் ஹயோஜியோt இரவு 11.30 மணி அளவில் கார் பகுதியில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் (லைவ்) நேரலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர். அப்பெண் அவர்களிடம் இருந்து நைசாக நழுவ தொடங்கினார். இருப்பினும் வாலிபர்கள் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்ததாக பாந்திரா பகுதியை சேர்ந்த மொபீன் சந்த் முகமது, முகமது நக்யூப் அன்சாரி ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண், தனது கையை பிடித்து தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து இந்திய இளைஞர்கள் ஆதித்யா மற்றும் அதர்வா ஆகிய 2 பேர் தன்னை காப்பாற்றியதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். தன்னை காப்பற்றிய அவர்களை கவுரவிக்க ஓட்டலுக்கு வரவழைத்து மதிய விருந்து கொடுத்தார். மேலும் அவர்களுடன் செல்பி எடுத்து டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

    ×