என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆனந்த குளியல்"
- பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
- தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.
பழனி:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பதிவாகி உள்ளது. இது மட்டுமின்றி மேலும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். மக்களுக்கே இந்த நிலை என்றால் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு கோடை காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் மற்றும் இரை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல் பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் கஸ்தூரி என்ற யானை உள்ளது. இந்த யானை தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்குவது மற்றும் தேரை பின்னால் இருந்து தள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். மற்ற நாட்களில் இந்த யானை காரமடை தோட்டத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது.
இதற்காக அங்கு புல், தீவனம் போன்ற உணவு வழங்கப்படுகிறது. கோவில் யானைக்கு என இங்கு பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் ஷவர் பாத் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது. காலையில் ஷவர் பாத்தும், மாலையில் நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியலும் போட்டு வருகிறது. நீச்சல் தொட்டிக்குள் இறங்கி சிறு குழந்தைப்போல 1 மணி நேரத்துக்கும் மேலாக கோவில் யானை கஸ்தூரி ஆனந்தமாக குளித்து வருவதாகவும், இதனால் இரவில் நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெயில் கடுமையாக இருப்பதாலும் அதனை தணிக்கை செய்ய இந்த கடலில் சிறியவர் முதல் பெரியவர் வரை குளித்து வருகிறார்கள்.
- ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
விழுப்புரம்:
மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தீர்த்தவாரி பகுதியில் பல்வேறு ஊர்களில் இருந்தும் உள்ளூரிலிருந்தும் காலை மாலை என 100 -க்கும் மேற்பட்டோர் இந்த கடலில் குளித்து ஆனந்த குளியல் போடுவது வழக்கம். இதனால் கடந்த சில வாரங்களாக அக்னி வெயில் கடுமையாக இருப்பதாலும் அதனை தணிக்கை செய்ய இந்த கடலில் வெயிலில் இருந்து தப்பிக்க சிறியவர் முதல் பெரியவர் வரை குளித்து வருகிறார்கள். இதனால அலைக்கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் உயிர் பலி ஏற்படுகிறது. எனவே மரக்காணம் போலீசார் எச்சரிக்கை பலகை வைத்து எச்சரித்து வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அல்லது ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
- கண்டுகொள்ளாத கடலோர பாதுகாப்பு குழும போலீசார்
- கன்னியாகுமரி காந்தி மண்ட பத்தின் பின்பகுதி முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை ஆழமான ஆபத்து நிறைந்த பகுதி இருப்பதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது
கன்னியாகுமரி:
கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடலில் ஆனந்த குளியல் போடு கிறார்கள். அதைத் தொடர்ந்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இதற்கி டையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வ முடன் பயணம் செய்து பார்வையிட்டு வருகி றார்கள்.
இது தவிர கன்னியா குமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை, பொழுதுபோக்கு பூங்கா, காட்சி கோபுரம், மெழுகு சிலை கண்காட்சி வட்டக்கோட்டைபீச், சொத்த விளைபீச் போன்ற இடங்களுக்கும் சென்று பொழுதைகழிக்கிறார்கள். மாலையில் சன்செட் பாய்ண்ட் கடற்கரைக்கு சென்று சூரியன் மறையும் அற்புத காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.
இதற்கிடையில் கன்னி யாகுமரி காந்தி மண்ட பத்தின் பின்பகுதி முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை ஆழமான ஆபத்து நிறைந்த பகுதி இருப்பதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது என்பதற்காக கடற்கரையை யொட்டி பாறாங்கற்களை குவித்து தடுப்புச் சுவர்கள் அமைத்து உள்ளனர். ஆனால் சுற்றுலா பயணி கள் இந்த தடுப்புச் சுவர்க ளையும் தாண்டி கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுகிறார்கள்.
இந்தப் பகுதி பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான ஆழம் நிறைந்த பகுதி என்பதை அறியாமல் சுற்றுலா பயணி கள் ஆனந்த குளியல் போடு வதை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்டு கொள்வதில்லை.
எனவே உயிர் பலி ஆகுவ தற்கு முன்பு இந்த பகுதியில் ரோந்து செல்லும் கடலோர பாதுகாப்பு குடும்ப போலீ சார் சுற்றுலாப் பயணிகள் ஆபத்துநிறைந்த இந்த ஆழமான பகுதிக்கு சென்று கடலில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சுற்றுலா பயணி களும் சமூக ஆர்வ லர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்