search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது மருத்துவம்"

    • சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை எழுந்ததும் பலர் கட்டாயம் காபி குடிப்பதை விரும்புவார்கள். காபி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது என்று சொல்லுவார்கள். அதே போல், இன்றைய காலத்தில் நம் வாழ்வோடு குளிர்பானங்கள் இரண்டற கலந்துவிட்டன என்றே கூறலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்க முடிவதில்லை.

    ஒருமுறை சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம். ஆனால், இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர்.

    சாப்பிட்டது செரிமாணம் ஆவதற்கு பலரும் குளிர்பானங்களை அருந்துவார்கள். சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில், குளிர்பானங்களை அருந்தாமல் இருப்பது உடலுக்கு பல வழிகளில் நல்லது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.

    குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் (பல் பற்சிப்பியை சேதப்படுத்துகிறது), அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் (குழிவுகளை உண்டாக்குகிறது) மற்றும் அசெசல்பேம் பொட்டாசியம் (புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது) உள்ளது என்று வோக்கார்ட் மருத்துவமனையின் டாக்டர் அனிகேத் முல் கூறினார்.

    • ஆண்கள் இரவில் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் வைட்டமின் பி12 சரிபார்ப்பது நல்லது.
    • வைட்டமின் பி12 குறைபாடு பரிசோதனை எடுத்து கொள்வது அபாயம் அதிகரிக்காமல் தடுக்க உதவும்.

    வைட்டமின் பி12 என்பது சையனோகோபாலமின் என்று அழைக்கப்படுகிறது. இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டிஎன்ஏ - உருவாக்குவதில் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் என பலவற்றிலும் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான ஊட்டச்சத்து இது. வைட்டமின் பி12 உணவில் இருந்து பெறலாம் என்றாலும் போதுமான ஊட்டச்சத்தை பெற முடியாத போது இது இரத்த சோகை , சோர்வு, நரம்பியல் சிக்கல்கள் உண்டு செய்யும். உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது ஆண்களுக்கு தென்படக்கூடிய அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

    ஆண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது கால்களில் கூச்ச உணர்வு இருக்கும். பரேஸ்டீசியா என்று அழைக்கப்படும் இந்த நிலை வைட்டமின் பி12 இல்லாததால் உண்டாகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இவை அதிகமாக இருக்கும். ஆண்கள் இரவில் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் வைட்டமின் பி12 சரிபார்ப்பது நல்லது.

    ஆண்கள் கால்களில் உணர்வின்மை அல்லது அசாதாரண உணர்வு என்பது அசெளகரியமானது. வைட்டமின் பி12 குறையும் போது இரவு நேரத்தில் கால்கள் உணர்ச்சியற்றதாக இருக்கலாம். இந்நிலையில் பி12 அளவை சரிபார்க்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் இதை தொடர்பு படுத்தி பார்ப்ப்பார்கள். ஆனால் வைட்டமின் பி12 குறைபாடும் கால்களில் உணர்வின்மை ஏற்படுத்தும்.


    நடப்பதில் சிரமம் அல்லது மாலை அல்லது இரவு நேரங்களில் இதன் தாக்கம் அதிகம் இருந்தால் அதற்கு காரணம் வைட்டமின் பி12 குறைபாடாகவும் இருக்கலாம். கால் வலி பொதுவாக வைட்டமின் குறைபாடுடன் தொடர்பு படுத்தி பார்க்கமாட்டார்கள். ஆனால் இந்நிலை மோசமான வைட்டமின் பி 12 குறைபாடாக இருக்கலாம்.

    பலவீனமான பாதங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் பாதங்கள், கால்கள் பலவீனமாக இருந்தால் உடலில் வைட்டமின் பி12 போதுமான அளவு இல்லாமல் இருக்கலாம். இந்நிலையில் தசை பலவீனம் உடலை சமநிலைப்படுத்தும் வழியில் முழு உடல் ஒருங்கிணைப்பையும் கீழ் உடலில் கால்களிலும் பாதங்களிலும் செலுத்துவதால் இவை ஒட்டுமொத்த வலிமையை பாதிக்கலாம். இதனால் கால் மற்றும் பாதங்களில் வலி அதிகமாக இருக்கும்.

    வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் அது உடலின் சமநிலையை பராமரிப்பதில் சிரமமாக இருக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எனில் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது நிற்கும் போது அல்லது நடக்கும் போது சமநிலையை வைத்திருப்பது கடினமாக இருக்கும். இதனால் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

    மேற்கண்ட அறிகுறிகள் இரவில் அதிகரிக்கும் போது வைட்டமின் பி12 குறைபாடு பரிசோதனை எடுத்து கொள்வது அபாயம் அதிகரிக்காமல் தடுக்க உதவும்.

    வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

    • அசைவ உணவுகளில் விலங்குகளில் ஈரல் மற்றும் சிறுநீரகம்

    • கடல் உணவுகள் - சால்மன், டுனா மீன்

    • முட்டை, பால், தயிர், சீஸ்


    • வாழைப்பழம்

    • பெர்ரி பழங்கள்

    • தானியங்கள்

    • கீரைகள் போன்றவற்றை சேர்க்கலாம்.

    தினசரி அளவில் ஆண்கள் 9-13 வயது பிள்ளைகளுக்கு 1.8 mcg 14-18 வயது ஆண் பிள்ளைகளுக்கு -2.4 mcg மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 2.4 mcg அளவும் தேவை.

    • நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
    • போதிய உடல் செயல்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன.

    இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும்பாலானவர்களுக்கு கடும் சவாலாகவே உள்ளது. உடல் பருமனை குறைக்க காலை நடைபயிற்சி செய்வதில் பலருக்கும் சிரமம் உள்ளது. ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால் உடல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.

    ஆனால் சமீபத்திய புதிய ஆய்வு அறிக்கையில் 5,000-க்கும் குறைவான அடிகள் நடந்தால் போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

    உலகெங்கிலும் உள்ள 2,26,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, எந்தவொரு காரணத்திற்காகவும் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயத்தைக் குறைக்க 4,000 அடி வரை நடந்தால் போதுமானது என கூறப்படுகிறது.

    இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்ய 2,300-க்கு மேல் நடந்தால் போதுமானது. 4,000-க்கு மேல் நடக்கும் ஒவ்வொரு கூடுதல் 1,000 அடிகளும் 15% வரை இறக்கும் அபாயத்தை குறைக்கின்றன. நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


    மேலும், எங்கு வாழ்ந்தாலும், எல்லா வயதினருக்கும் நடைபயிற்சி நன்மைகளை தருவதை கண்டறிந்ததாக போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 60 வயதிற்கு உட்பட்டவர்களிடையே நடைபயிற்சி மிகப்பெரிய நன்மைகள் காணப்பட்டன.

    இதனிடையே, லோட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மசீஜ் பனாச், சிகிச்சைக்கான மேம்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவை மட்டும் போதுமானது இல்லை என்று கூறினார்.

    "எங்கள் ஆய்வின் முக்கிய கதாநாயகன் உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் தான். நடைபயிற்சி இருதய ஆபத்தை குறைப்பதற்கும் ஆயுளை நீடிப்பதற்கும் குறைந்த பட்சம் அல்லது இன்னும் அதிகமாக பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்த வேண்டும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, போதிய உடல் செயல்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. இது உலகளவில் ஏற்படும் உயிரிழப்புக்கான காரணிகளில் நான்காவதாக உள்ளது.

    • உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
    • கருப்பு திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

    உலர் கருப்பு திராட்சை செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது.

    பலருக்கும் ரெய்சின்ஸ் எனப்படும் பிரவுன் நிறத்தில் இருக்கும் உலர் திராட்சை பற்றி தெரியும். அதுவே, கருப்பு நிறத்தில் கிடைக்கும் உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா? ரத்த சோகை, செரிமான கோளாறு, ரத்தத்தில் நச்சு, கொலஸ்டிரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கருப்பு உலர் திராட்சை தீர்வாக அமைகிறது.

    செரிமானத்தை எளிதாக்குகிறது : பொதுவாகவே, பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். அதிலும், உலர் கருப்பு திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது. தினசரி இதனை உண்பது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.

    அது மட்டுமின்றி, செரிமானத்தையும் எளிதாக்குகிறது.தினசரி இந்த உலர் பழத்தை சாப்பிடுவதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது. மேலும், திராட்சையில் உள்ள அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், பெருங்குடல் அழற்சி, புற்று, தொற்று உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும்.


    எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது ஒரு சில பழங்களில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் ஆகிய கனிமங்கள் இருக்கும். வயதாகும் போது ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புகளில் துளைகள் ஏற்படுவது ஆகியவற்றைத் தடுக்க, தினசரி கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வரலாம்.

    உடலில் ஊட்டச்சத்து கிரகிப்பை அதிகப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது: கருப்பு திராட்சை என்பது, கருப்பு உலர் திராட்சையைக் குறிக்கிறது. இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரவுன் நிற உலர் திராட்சையை விட, அதிக இரும்பு சத்து இருக்கிறது. அதே நேரத்தில், வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இதனால், உடலில் சத்து கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தேவையான வைட்டமின் சி, உடலை பலப்படுத்துகிறது. இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் கருப்பு திராட்சைகள் உதவுகின்றன.

    இரத்த சோகையை தடுத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது கருப்பு திராட்சையில் நிறைந்துள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் கருப்பு திராட்சையில் இருக்கும் காப்பர், உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. இதனால், ரத்த சோகை தடுக்கப்படுவதோடு, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

    கொலஸ்டிராலை குறைத்து இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம்: கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது, ரத்த அழுத்த அளவை சீராக வைக்கிறது. குறிப்பாக, LDL கொலஸ்டிரால் எனப்படும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இதன் மூலம் இதயத்துக்கு அழுத்தம் ஏற்படுத்தாமல், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. தினமும் சிறிதளவு கருப்பு திராட்சை சாப்பிட்டு வந்தால், இதய நோய் அபயாத்தைக் குறைக்கலாம். மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவும்.

    புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது/கருப்பு திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து கருப்பு திராட்சை பாதுகாக்கலாம். வாயுத் தொந்தரவு ஏற்படாமல் இருக்க, கருப்பு நிற உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்த பின்பே சாப்பிட வேண்டும்.

    • சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.
    • முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்.

     "முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள்.

    முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.

    முருங்கை வேர் + அதன் பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் என்கிறார்கள்.

    முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.


    இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும் என்கிறார்கள்.. இந்த வேரின் சாறுடன் சம அளவு பால் சேர்த்து குடித்து வந்தால், விக்கல், இரைப்பு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகுவலி போன்றவையும் அகலும். முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும். முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்..

    முருங்கைப்பூ : முருங்கைப்பூவை, ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், ஆண் மலடு நீங்கும். முருங்கைப்பூவை உட்கொள்ளும்போது, கண்பார்வை திறன் பெருகுகிறது.. முருங்கைப் பட்டையை தூளாக்கி, சிறிது கல் உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால், வீக்கங்கள் குறையும்.

    இப்படி முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன்தருகிறது என்றாலும், இந்த கீரையை மட்டும் வாரம் 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். காரணம், முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் B காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

    எதிர்ப்பு சக்திகள்: முருங்கைக்கீரை, சர்க்கரையை குறைக்கிறது. இதற்குள் ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன. ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். வேர்க்கடலை: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடும்போது, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடையும்.

    தலைமுடி வளர: தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்... மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். தோல் வியாதிகள் தீரும். உடல் சூட்டை தணிக்கும்.. தணியும் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.


    தோல் வியாதிகள்: முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்.. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

    முருங்கை ஜூஸ்: மேலும், மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. ஆனால், 7 நாட்கள் இதை குடித்தபிறகு, ஒரு இடைவெளி விடவேண்டும்... அதேபோல, மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது என்கிறார்கள். இந்த முருங்கைக்கீரை மட்டும்தான், மற்ற கீரைகளைவிட மிகவும் ஸ்பெஷலாக கருதப்படுகிறது.. இதற்கான காரணங்களை பாருங்கள், நீங்களே அசந்துபோயிடுவீங்க

    பொக்கிஷம்: மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது. அதனால், எந்த அளவுக்கு முருங்கைக்கீரையை நாம் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் நம்மைவிட்டு விலகியே நிற்கும்..!!

    • செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.
    • இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது.

    முதல் முக்கிய காலை பழக்கம், எழுந்தவுடன் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான பானங்களையும் உங்கள் தினசரி காலையில் இணைத்துக் கொள்ளலாம்.

    காலையில் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்களின் ஒரு பட்டியல் இதோ...

    ஜீரா நீர்

    ஜீரா அல்லது சீரக விதைகள் செரிமானத்தை விரைவுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதற்கும், செரிமான செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜீரா நீர் ஒரு பெரிய எனர்ஜி பூஸ்டர். எனவே காலையில் உங்கள் எனர்ஜியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் மந்தத்தை நீக்குகிறது.

    எப்படிச் செய்வது: ஒரு கப் தண்ணீருக்கு 1 டீஸ்பூன் ஜீரா சேர்த்து கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


    ஓம நீர்

    அஜ்வெய்ன்(ஓமம்) அல்லது கரோம் விதைகள் இரைப்பைக் குடல் வலி நீக்கும் பண்புள்ள தைமாலைக் கொண்டுள்ளன. இந்த தைமால் செரிமானத்தை மேம்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணெய், அமிலத்தன்மை நீக்கம் மற்றும் எடை இழப்புகளை ஊக்குவிக்கிறது. கரோம் விதைகளில் இருக்கும் தைமோல் வயிற்றில் இரைப்பைச் சாறுகளை சுரக்க வைக்கிறது, இதனால் செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.

    எப்படி செய்வது: அரை டீஸ்பூன் அஜ்வெய்ன் விதைகளை 1 கப் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்கவும். அது குளிர்ச்சியடைந்தவுடன், வடிகட்டி குடிக்கலாம்.


    இன்பியூஸ்ட் நீர்

    நீங்கள் வெற்று நீரைக் குடிக்க சலித்துப்போகும் போதெல்லாம், ஏன் மூலிகைகள், ஆப்பிள் சைடர் வினிகர், வெள்ளரிக்காய் அல்லது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களை தண்ணீரின் சுவையை அதிகரிக்க அதனுடன் சேர்க்க முயற்சி செய்யக்கூடாது? எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு நோயெதிர்ப்பு அதிகரிக்கும் வைட்டமின் சி- யைக் கொண்டுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. வெள்ளரிக்காய் உங்கள் உடலில் நீரேற்றத்திற்கு உதவுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது, மற்றும் துளசி அல்லது புதினா போன்ற மூலிகைகள் ஆன்டி பயோடிக், ஆன்டி - பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.


    எப்படிச் செய்ய வேண்டும்: ஒரு ஜக்கில் தண்ணீரை ஊற்றி, மேலே உள்ள பொருட்களில் ஒன்றினை அதனுள் சேர்க்கவும். சுவையூட்டுவதற்காக 2 முதல் 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

    காலையில் உங்கள் நேரத்தை காப்பாற்றிக் கொள்ள, மேலுள்ள கலவையை இரவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, காலையில் தண்ணீரில் இருந்து மூலப்பொருளை நீக்கி குடிக்க வேண்டும்.

    தேங்காய் நீர்

    காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பிற்கும் உதவுகிறது. தேங்காய் நீர், பல வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் உட்பட கனிமங்களால் நிறைந்தது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கத் தேவையான முக்கியமான இரண்டு எலக்ட்ரோலைட்களான சோடியம் மற்றும் பொட்டாசியதைக் கொண்டுள்ளது.


    காய்கறி சாறு

    இயற்கை ஜுஸ்களை குடித்தல் உங்கள் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. காய்கறிகளை ஜுஸ் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன. பச்சை இலை காய்கறிகள், அதாவது கீரை மற்றும் காலே போன்றவை உடலின் ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அவை உங்கள் செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.

    எப்படி செய்ய வேண்டும்: நீங்கள் பயன்படுத்துகிற காய்கறிகளை பொடிப் பொடியாக வெட்டி சிறிது நீர் அல்லது தேங்காய் நீரைச் சேர்த்து ப்ளண்டரில் போட்டு அரைக்கவும்.


    அலோவேரா (கற்றாழை) ஜூஸ்

    அலோவேரா சாறு, இரைப்பை அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க் குறிக்கும் உதவுகிறது. இது செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு ஆகியவற்றைச் சமாளிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.

    எப்படி செய்ய வேண்டும்: கற்றாழையை கிழித்து அதிலிருந்து வெள்ளை ஜெல்லை பிரித்தெடுக்கவும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்து ப்ளண்டரில் போடவும்.அதில் 3 கப் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும்.


    இஞ்சித் தேநீர்

    இஞ்சித் தேநீரை காலையில் எடுத்துக்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் ஆகியவற்றைக் குறைக்கும், ஏனெனில் இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. மேலும், இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது. மேலும் காலை உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் அதைக் குடிப்பதால் நல்ல பயனடைவீர்கள்.

    எப்படி செய்ய வேண்டும்: உரித்து நறுக்கிய இஞ்சியை ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். கொதிக்க வைத்து 1 எலுமிச்சையின் சாறைச் சேர்க்கவும். பிறகு அதை வடிகட்டிக் குடிக்கவும்.


    தக்காளி ஜூஸ்

    உங்கள் காலையை சிறப்பாகத் தொடங்க மற்றொரு சிறந்த வழி தக்காளிச் சாறு. தக்காளி, 95 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டிருக்கும். அது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கும். மேலும் இது உங்கள் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, அதிக அளவிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தொற்றுக்களை அழித்து நோயெதிர்ப்பு அமைப்பைப் பலப்படுத்துகிறது ஒரு பெரிய நச்சுநீக்கி பானமாக செயல்படுகிறது.


    எப்படி செய்வது: பிளெண்டரில் 1 துண்டு தக்காளி மற்றும் 3 கப் தண்ணீரை சேர்க்கவும். ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறைச் சேர்த்து மென்மையான கலவை வரும் வரை அரைக்கவும்.

    மேற்கண்ட இந்த பானங்களை காலையில் அருந்தி வர உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

    • அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர் தமிழர்கள்.
    • தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை.

    உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்கள் உணவு கலாசாரமாக இருந்தது. தமிழர்களின் முதன்மை உணவாக இருந்துவரும் அரிசியில் வெவ்வேறு ரகங்களை உருவாக்கி, அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர்.

    தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை, என்கிறார்கள் வேளாண் ஆய்வாளர்கள். அந்த அரிசி ரகங்களில் ஒன்றான இலுப்பைப்பூ சம்பா, தனித்துவமான மருத்துவ குணம் கொண்டது. மேலும் இது, அரிதான அரிசி ரகம் ஆகும்.

    இலுப்பைப்பூவின் நறுமணம் இந்த அரிசியிலும் வெளிப்படுவதன் காரணமாக இந்த அரிசிக்கு அதன் பெயர் வந்தது. இலுப்பைப்பூ சம்பா சாப்பிட மிகவும் மென்மையானது.

    பக்கவாத பாதிப்பை தடுக்க முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனராம். மூட்டு வலி, முடக்குவாத நோய்களை போக்கும். நோயால் பலவீனமானவர்களுக்கு இலுப்பைப்பூ சம்பா அரிசி கஞ்சியை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் பலவீனம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

    இந்த அரிசி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். முடக்குவாதத்தை தடுக்கிறது. உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

    மிகக்குறைவான குளுக்கோஸ் அளவை கொண்டதால் நீரிழிவு நோயாளிகள் இலுப்பைப்பூ சம்பா அரிசியை தாராளமாக உட்கொள்ளலாம்.

    மேலும், உடலில் எலும்புகள் பலவீனம் அடைவதை தடுத்து வலுப்படுத்தும் குணம் இந்த அரிசிக்கு உண்டு.

    இதனால், வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கவும், வளரும் குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் உருவாகவும் இலுப்பைப்பூ சம்பா கஞ்சியை தரலாம்.

    இலுப்பை பூ சம்பா அரிசியின் நன்மைகள்:

    இலுப்பை பூ சம்பா அரிசி வீக்கம், மூட்டு பிரச்சனைகள், செயலிழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கஞ்சி, சிகிச்சை பெறும் அனைவருக்கும், வயதானவர்கள் அல்லது குழந்தைகளுக்கு ஆற்றலை கொடுக்கிறது.

    இந்த அரிசி ஒரு இயற்கை தோட்டத்தில் பயிரிடப்பட்டு அரைக்கப்படுகிறது. இதன் விளைவாக, விவசாயத்தில் செயற்கை அல்லது களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    காலப்போக்கில் அடிக்கடி உட்கொண்டால், உடலில் உள்ள கலவை அல்லது களைக்கொல்லி எச்சத்தின் தாக்கங்களை மாற்றுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

    கரிம உணவு பொதுவாக மிகவும் சுவையாக இருக்கும், உங்கள் பசியை அதிகரிக்கிறது மற்றும் போதுமான ஊட்டச்சத்தை பாதுகாக்க அல்லது மேம்படுத்த உதவுகிறது.

    இந்த அரிசியில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பக்கவாதத்தைத் தடுக்கிறது மற்றும் கீல்வாதம், மூட்டு சேதம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    • கால்விரல்களுக்கு இடையில், மென்மையான துண்டு அல்லது சிறிய துணிகளை பயன்படுத்தி பாதங்களை நன்கு உலர வைக்க வேண்டும்.
    • நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

    நீரிழிவு நோயினால் பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். இது வெப்பம் மற்றும் குளிர், உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும்.

    நரம்பு பாதிப்பு காரணமாக, பாதங்களில் ஏற்படும் காயங்கள் மெதுவாக குணமாகும். கால்களை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம்.

    நீரிழிவு நோயிலானால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பாதங்களை பரிசோதிக்க வேண்டும். கால்விரல்களுக்கு இடையில் மற்றும் கால்களுக்கு அடியில் சரிபார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் கொப்புளங்கள், நிறத்தில் ஏதேனும் மாற்றம், உடைப்பு அல்லது தோலில் விரிசல், ஏதேனும் அசாதாரண வீக்கம் மற்றும் வலியுள்ள பகுதிகள் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். கால்களை சுத்தமாகவும் உலர்வாகவும் வைக்க வேண்டும். தினமும் மிதமான சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவ வேண்டும்.

    கால்விரல்களுக்கு இடையில், மென்மையான துண்டு அல்லது சிறிய துணிகளை பயன்படுத்தி பாதங்களை நன்கு உலர வைக்க வேண்டும். கால்விரல்களுக்கு இடையில் ஈரமான அல்லது வியர்வை ஏற்படும்போது பருத்தி துணிகளை பயன்படுத்தி சுத்தமாக துடைக்க வேண்டும்.

    வறண்ட சருமத்தைத் தடுக்க, ஈரப்பதமூட்டும் கிரீம் பயன்படுத்தலாம். ஆனால் கிரீம்களை கால்விரல்களுக்கு இடையில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

    வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும். காலணிகளை அணிவதற்கு முன் உள்ளேயும் வெளியேயும் சரிபார்க்கவும். தினமும் சாக்ஸ் மாற்ற வேண்டும்.

    • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
    • நுங்கு குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

    கோடை காலத்தில் கிடைக்கும் நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும். நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.

    பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்று பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் பனை நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும்.

    கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.

    நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு மறையும்.

    நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவதுடன் அதில் இருக்கும் நீரை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவினால் சிறந்த பலனை கொடுக்கும்.

    பெரியோர்கள் இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

    • கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
    • தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.

    இன்றைய சூழலில் இளநரையால் ஆண்கள், பெண்கள், ஐந்து வயது குழந்தைகூட பாதிப்புக்குள்ளாகிறது. இளநரைக்கு மரபைவிட பிற காரணிகளே முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை காரணங்களாகும். இதில் மரபு சார்ந்து இளநரை ஏற்பட்டால், அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.

    * தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைத்து பராமரித்தால், இளநரையை எளிதில் தடுக்கலாம். தலை வழுக்கையாவதையும் தடுக்கலாம். தலைமுடியும் அடர்த்தியாகும்.

    * உணவில் கடுக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    * தினம் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது. 

    * சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை குறையும்.

    * கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.

    * நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர இளநரை குறையும்.

    * கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.

    * கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது இளநரை ஏற்படாமல் காக்கும்.

    * தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.

    * மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.

    * அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து தலைக்கு தடவி குளிப்பதால் இளநரை நிறம் மாறத்தொடங்கும்.

    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
    • செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.

    குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 

    குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.

    குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.

    செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

    மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    • ஆவிபிடித்தல் உங்களை ரிலாக்ஸாக இருக்கச் செய்யும்.
    • மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் மூச்சு திணறல் ஏறப்டுகிறது.

    ஆவிபிடித்தல்

    ஆவிபிடித்தல் இதை நீங்கள் அடிக்கடி செய்யாமல் மூக்கு அடைப்பிருந்தால் அல்லது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யலாம். இது உங்களை ரிலாக்ஸாக இருக்க செய்யும். ஆவி பிடிக்கும்போது சிலியாவிற்கு அந்த வெப்பமான காற்று மூக்கை சுத்தம் செய்து, அடைப்பு இருந்தாலும் அதை எடுக்கவும் உதவி செய்கிறது.

    உங்களுக்கு தொற்றுநோய் இருக்கும்போதும் மூக்கடைப்பு இருக்கும்போது செய்தாலே போதுமானது, அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. தொற்று இருக்கும் போது மூக்கடைப்பு இருக்கும் போது மட்டும் செய்ய வேண்டும்.

     இருமல்

    தொற்றுநோய் இருக்கும்போது ஏன் இருமல் வருகிறது?

    நமது தொண்டை நுரையீரல் மற்றும் நுரையீரலில் இருக்கும் அல்வியோலிகளில் ஏற்படும் தொற்றுநோய்களை வெளியேற்ற நமது உடலே முயல்கிறது. இதை தான் இருமல் என்று சொல்கிறோம். ஆனால் இருமலை அடக்கி கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு அடக்கமுடியாமல் இருமுகிற போது அதன் பலன்கள் அதிகமாக இருக்கும்.

    இருமலை எப்படி கட்டுப்படுத்துவது?

    தோல்களை ரிலாக்சாக வைத்து சேரில் அமர்ந்து, கால்கள் இரண்டும் தரையில் வைத்து கைகளை வயிற்று தசைகளில் இறுக்கமாக வைத்துக்கொள்ளவும். கையில் ஏதாவது சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து வாயை மூடிக்கொண்டு இருமலாம். இது கட்டுப்படுத்தப்பட்ட இருமல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருமுகிற போது காற்று செல்லும் வழியை சுத்தம் செய்ய உதவுகிறது.

     போஸ்டுரல் டிரைனேஜ்

    போஸ்டுரல் என்றால் நிற்பது அல்லது படுப்பது. உடலில் ஏதாவது தொற்றுநோய், ஆஸ்துமா, சி.பி.ஓ.டி போன்றவைகளால் நுரையீரல் பாதித்தால் மூச்சுக்குழாய்கள் சுருங்கிவிடும்.

    இந்த தொற்றுகளை எதிர்க்க நுரையீரல் சளியை உருவாக்குகிறது. இது மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் சுருங்கி மூச்சு திணறல் ஏறப்டுகிறது. அதேபோல நாம் இரும்புகிறபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

    படுக்கும் நிலையில் வைத்து போஸ்டுரல் வடிகால் நம்மை எளிமையாக சுவாசிக்க உதவி செய்கிறது. இதை உண்பதற்கு முன்பு செய்வது நல்லது, இல்லையென்றால் உணவிற்கு பின் செரிமானமாகிய 2 மணி நேரத்திற்கு பின் செய்யலாம். கீழே அல்லது மெத்தையில் படுக்கலாம்.

    அசெளகரியமாக இருந்தால் தலையணையை சப்போட்டாக வைத்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பி படுக்கலாம். தலையணை வைக்கும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் வயிற்றுப்பகுதியில் படுக்க வேண்டும். அதாவது கவிழ்ந்து படுத்து உங்கள் மார்பு பகுதி கீழேயும் இடுப்பு பகுதி அதே நிலையில் கவிழ்ந்த நிலையில் மேலேயும் இருக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் சளியை வெளியேற்ற உதவுகிறது.

    உடற்பயிற்சி

    மருத்துவர்கள் அனைவருமே நம்மை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். ஏனென்றால் உடல் உழைப்பு செய்கிறபோது நுரையீரலின் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் நிறைய ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியேற்றி ரத்த ஓட்டம் சீராவதால் உடலில் உள்ள அதிக அளவிலான கார்பன் – டை- ஆக்ஸைடு எளிதாக வெளியேறுகிறது.

     க்ரீன் டீ

    இதில் நிறைய ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்கள் உள்ளது. ஆன்டி- ஆக்ஸிடண்ட்களில் அதிக அழற்சி எதிர்ப்பு திறன்கள் உள்ளது. ஒரு தொற்று ஏற்படுகிறது என்றால் அதை எதிர்க்க எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது க்ரீன் டீ-யில் உள்ளது. ஒருநாளுக்கு ஒருமுறை அல்லது இருமுறை குடித்தால் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.

    உணவுமுறை

    மஞ்சள், வால்நட், செர்ரிகள் ப்ளூபெர்ரி, பச்சை காய்கறிகள் இவை அனைத்திலுமே எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்களும் உள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

     சுவாசிக்கும் முறை

    இது மிகவும் முக்கியமான டிப்ஸ் ஆகும். இதை ஐந்து-பத்து நிமிடம் வரை தினமும் செய்ய வேண்டும். இது எப்போதுமே 1:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் நேரம் 1, மூச்சு வெளியேற்றும் நேரத்தை 2 ஆக வைக்கவும். உதாரணத்துக்கு மூச்சை உள்ளிழுப்பதற்கு 2 வினாடி எடுக்கிறீர்கள் என்றால் மூச்சை வெளியேற்றுவதை 4 வினாடிகளுக்கு பொறுமையாக விட வேண்டும்.

    ×