என் மலர்
நீங்கள் தேடியது "பொது மருத்துவம்"
- எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
- நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட் சாப்பிடுவார்கள். பரவாயில்லை. ஆனால் சிலபேர் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையே காலி பண்ணிவிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு.

பிஸ்கெட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அநேகமாக எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும். தினமும் தொடர்ந்து பிஸ்கெட் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும். நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
பிஸ்கெட்டில் அதிக கலோரி இருப்பதால் தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையை கூட்டிவிடும். பிஸ்கெட்டில் 'ட்ரான்ஸ்ஃபேட்' என்று சொல்லக்கூடிய மாறுபட்ட கொழுப்பு இருக்கும். இந்த மாறுபட்ட கொழுப்பு தீய கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகமாக்கியும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்தும்விடும்.

அதிக கலோரி, அதிக மாவுச்சத்து, அதிக கொழுப்பு, அதிக அளவில் சோடியம் உப்பு, அதிக சர்க்கரை ஆகியவை இருப்பதால் அன்றாடம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன், அஜீரணம், மந்தம், மலச்சிக்கல், சில சமயங்களில் இதயக் கோளாறைக் கூட உண்டுபண்ணிவிடும்.
வைட்டமின் சத்து இல்லாத, சத்துப் பொருட்கள் இல்லாத, நார்ச்சத்து இல்லாத சில பிஸ்கெட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் சில அழகழகான, கவர்ச்சியான, ருசியான பிஸ்கெட்டுகளை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?
அனைத்து உலக மக்களும் விரும்பி சாப்பிடும் ஒரே உணவாகிய பிஸ்கெட்டை எப்பொழுதாவது சாப்பிடுங்கள். வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். இரவு நேரங்களில் பசிக்கும் போதும் சரி, ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்ட போதும் சரி பயணங்களின் போதும் சரி சாப்பிட உணவே கிடைக்காத இடத்தில் சிக்கி அவஸ்தைப்படும்போதும் சரி பிஸ்கெட் மாதிரி ஒரு சிறப்பான உணவு வேறெதுவும் இல்லை.
- 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள்.
- காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள்.
திருத்துறைப்பூண்டி:
மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் பில்லியன் ஆர்ட்ஸ் பீட்டிங் பவுண்டேஷன் இணைந்து பொது மருத்துவ முகாம் நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான எழிலரசன் தலைமை வகித்தார். நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன், அப்போலோ மருத்துவமனை குழுமம் சார்பில் மூத்த அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காப்பக திட்ட மேலாளர் விஜயா அனைவரையும் வரவேற்று பேசினார் .மூத்த டாக்டர் வர்கீஸ், உதவி பேராசிரியர் டாக்டர் சருண், தசை இயக்க டாக்டர் கருணாநிதி மற்றும் செவிலியர்கள் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சுகர் நிலை, உடல் இயக்கங்கள், கை நடுக்கம், ரத்த சோகை, தலைவலி, போன்ற பல்வகை வியாதிகளுக்கு உண்டான பரிசோதனைகள் செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்கள் .
காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் டாக்டர்களிடம் நன்றாக சாப்பிடுகின்றோம் சந்தோஷமாக இருக்கிறோம். என்று சொன்னதை கேட்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவர்களை சந்தோஷமாக மகிழ்விக்க பணியாளர்கள் அனைவருக்கும் உதவி பேராசிரியர் டாக்டர் சருண் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார்.
காப்பக பணியாளர்கள் சரவணன், கோகிலா, சக்தி பிரியா, வள்ளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆனந்த் பாபு நன்றி கூறினார்.
- நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.
- வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது நல்லது.
மனிதனுக்கு அடிப்படையான ஆதாரம், உணவு. சித்த மருத்துவ முறைப்படி வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று கூறுகளும், அதேமாதிரி ஏழு உடல் கூறுகளும் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். உணவு தான் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு மலம், சிறுநீர் மற்றும் வியர்வை போன்ற கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இந்த செயல்பாட்டில் எப்பொழுதும் சமநிலை இருந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சமநிலை மாறு பட்டால் உடல்நிலை நோய்களை உருவாக்க ஆரம்பித்து விடும். எனவே நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.
உணவு நன்றாக செரிமானம் அடைய வேண்டும் என்றால் வயிற்றில் பாதி பகுதியை காலியாக விட்டு விட வேண்டும். அதேபோல் வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவு சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லது. இது அஜீரணத்தை குறைக்கிறது.
பழங்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மீன், இறைச்சி போன்றவை நமது உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மணி சம்பா போன்ற அரிசி வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும், ஜீரக சம்பா மற்றும் குந்திரமணி சம்பா வாத நோய்களுக்கும் நல்லது. அரிசி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கூழ்கள் மிகவும் நல்லது.
சோயா, காலிஃபிளவர், பட்டாணி பருப்புகள், கிரீன் டீ போன்றவை மூட்டு அழற்சியை போக்குகிறது. இதயம், செரிமான அமைப்பு, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது நல்லது.
பாலில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு கீல்வாதத்தில் காணப்படும் மூட்டுகளில் வீக்கம் மற்றும் சேதத்தை தடுக்கிறது. இதில் காணப்படும் லினோலெனிக் அமிலம் அழற்சியை தடுக்கிறது. இரவில் பால், மோர் குடிப்பது வெப்ப உணர்வு, ரத்த சோகை, வயிற்று வலி போன்றவற்றை நீக்குகிறது. நெய்யை சேர்த்துக் கொள்வதும் நல்லது.
ரத்த சோகை, பலவீனமாக இருத்தல், மனநல கோளாறுகள் போன்றவற்றுக்கு ஆட்டு இறைச்சி நல்லது. மனநல கோளாறுகள் மற்றும் காசநோய்க்கு முயல் இறைச்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. கோழி முட்டை வாதம் மற்றும் கபம் நோய்களுக்கு நல்லது.
ஏலக்காய் வெப்பத்தை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்கிறது. சீரக விதைகள் பசி ஏற்படுத்தும் தன்மையை அதிகரிக்கிறது. இஞ்சி கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்திற்கு நல்லது. மேலும் கருப்பை புற்றுநோயை தடுக்கிறது. பூண்டு கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருங்காயம் குடற் புழுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது.
வெந்தயம் பித்தத்தை குறைக்கிறது. மிளகு கபம் நோய்களை போக்குகிறது. காது கோளாறுகள், கல்லீரல் நோய்கள், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களை சரி செய்கிறது.
தவிர்க்க வேண்டியவை
டால்டா, வனஸ்பதி போன்ற எண்ணெய் வித்துக்கள் தவிர்க்க வேண்டும். பலாப் பழம் ஆசைக்கு எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு மீறி உண்ண வேண்டாம்.
செம்மறி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியையும் தவிர்க்க வேண்டும். கோழியின் தோல் பகுதி வாத நோய்களை ஏற்படுத்துகிறது மற்றும் மூல நோயை அதிகரிக்க செய்கிறது. எனவே இதனை தவிர்ப்பது நல்லது.
- ஆவிபிடித்தல் உங்களை ரிலாக்ஸாக இருக்கச் செய்யும்.
- மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் மூச்சு திணறல் ஏறப்டுகிறது.

ஆவிபிடித்தல்
ஆவிபிடித்தல் இதை நீங்கள் அடிக்கடி செய்யாமல் மூக்கு அடைப்பிருந்தால் அல்லது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யலாம். இது உங்களை ரிலாக்ஸாக இருக்க செய்யும். ஆவி பிடிக்கும்போது சிலியாவிற்கு அந்த வெப்பமான காற்று மூக்கை சுத்தம் செய்து, அடைப்பு இருந்தாலும் அதை எடுக்கவும் உதவி செய்கிறது.
உங்களுக்கு தொற்றுநோய் இருக்கும்போதும் மூக்கடைப்பு இருக்கும்போது செய்தாலே போதுமானது, அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. தொற்று இருக்கும் போது மூக்கடைப்பு இருக்கும் போது மட்டும் செய்ய வேண்டும்.

இருமல்
தொற்றுநோய் இருக்கும்போது ஏன் இருமல் வருகிறது?
நமது தொண்டை நுரையீரல் மற்றும் நுரையீரலில் இருக்கும் அல்வியோலிகளில் ஏற்படும் தொற்றுநோய்களை வெளியேற்ற நமது உடலே முயல்கிறது. இதை தான் இருமல் என்று சொல்கிறோம். ஆனால் இருமலை அடக்கி கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு அடக்கமுடியாமல் இருமுகிற போது அதன் பலன்கள் அதிகமாக இருக்கும்.
இருமலை எப்படி கட்டுப்படுத்துவது?
தோல்களை ரிலாக்சாக வைத்து சேரில் அமர்ந்து, கால்கள் இரண்டும் தரையில் வைத்து கைகளை வயிற்று தசைகளில் இறுக்கமாக வைத்துக்கொள்ளவும். கையில் ஏதாவது சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து வாயை மூடிக்கொண்டு இருமலாம். இது கட்டுப்படுத்தப்பட்ட இருமல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருமுகிற போது காற்று செல்லும் வழியை சுத்தம் செய்ய உதவுகிறது.

போஸ்டுரல் டிரைனேஜ்
போஸ்டுரல் என்றால் நிற்பது அல்லது படுப்பது. உடலில் ஏதாவது தொற்றுநோய், ஆஸ்துமா, சி.பி.ஓ.டி போன்றவைகளால் நுரையீரல் பாதித்தால் மூச்சுக்குழாய்கள் சுருங்கிவிடும்.
இந்த தொற்றுகளை எதிர்க்க நுரையீரல் சளியை உருவாக்குகிறது. இது மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் சுருங்கி மூச்சு திணறல் ஏறப்டுகிறது. அதேபோல நாம் இரும்புகிறபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
படுக்கும் நிலையில் வைத்து போஸ்டுரல் வடிகால் நம்மை எளிமையாக சுவாசிக்க உதவி செய்கிறது. இதை உண்பதற்கு முன்பு செய்வது நல்லது, இல்லையென்றால் உணவிற்கு பின் செரிமானமாகிய 2 மணி நேரத்திற்கு பின் செய்யலாம். கீழே அல்லது மெத்தையில் படுக்கலாம்.
அசெளகரியமாக இருந்தால் தலையணையை சப்போட்டாக வைத்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பி படுக்கலாம். தலையணை வைக்கும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் வயிற்றுப்பகுதியில் படுக்க வேண்டும். அதாவது கவிழ்ந்து படுத்து உங்கள் மார்பு பகுதி கீழேயும் இடுப்பு பகுதி அதே நிலையில் கவிழ்ந்த நிலையில் மேலேயும் இருக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் சளியை வெளியேற்ற உதவுகிறது.
உடற்பயிற்சி
மருத்துவர்கள் அனைவருமே நம்மை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். ஏனென்றால் உடல் உழைப்பு செய்கிறபோது நுரையீரலின் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் நிறைய ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியேற்றி ரத்த ஓட்டம் சீராவதால் உடலில் உள்ள அதிக அளவிலான கார்பன் – டை- ஆக்ஸைடு எளிதாக வெளியேறுகிறது.

க்ரீன் டீ
இதில் நிறைய ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்கள் உள்ளது. ஆன்டி- ஆக்ஸிடண்ட்களில் அதிக அழற்சி எதிர்ப்பு திறன்கள் உள்ளது. ஒரு தொற்று ஏற்படுகிறது என்றால் அதை எதிர்க்க எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது க்ரீன் டீ-யில் உள்ளது. ஒருநாளுக்கு ஒருமுறை அல்லது இருமுறை குடித்தால் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.
உணவுமுறை
மஞ்சள், வால்நட், செர்ரிகள் ப்ளூபெர்ரி, பச்சை காய்கறிகள் இவை அனைத்திலுமே எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்களும் உள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுவாசிக்கும் முறை
இது மிகவும் முக்கியமான டிப்ஸ் ஆகும். இதை ஐந்து-பத்து நிமிடம் வரை தினமும் செய்ய வேண்டும். இது எப்போதுமே 1:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் நேரம் 1, மூச்சு வெளியேற்றும் நேரத்தை 2 ஆக வைக்கவும். உதாரணத்துக்கு மூச்சை உள்ளிழுப்பதற்கு 2 வினாடி எடுக்கிறீர்கள் என்றால் மூச்சை வெளியேற்றுவதை 4 வினாடிகளுக்கு பொறுமையாக விட வேண்டும்.
- செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
- செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.
குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.
செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.
குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.
செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
- கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
- தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.
இன்றைய சூழலில் இளநரையால் ஆண்கள், பெண்கள், ஐந்து வயது குழந்தைகூட பாதிப்புக்குள்ளாகிறது. இளநரைக்கு மரபைவிட பிற காரணிகளே முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை காரணங்களாகும். இதில் மரபு சார்ந்து இளநரை ஏற்பட்டால், அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.
* தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைத்து பராமரித்தால், இளநரையை எளிதில் தடுக்கலாம். தலை வழுக்கையாவதையும் தடுக்கலாம். தலைமுடியும் அடர்த்தியாகும்.
* உணவில் கடுக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
* தினம் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது.

* சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை குறையும்.
* கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
* நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர இளநரை குறையும்.
* கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
* கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது இளநரை ஏற்படாமல் காக்கும்.
* தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.
* மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.
* அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து தலைக்கு தடவி குளிப்பதால் இளநரை நிறம் மாறத்தொடங்கும்.
- இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
- நுங்கு குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.
கோடை காலத்தில் கிடைக்கும் நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும். நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்று பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் பனை நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும்.
கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு மறையும்.
நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவதுடன் அதில் இருக்கும் நீரை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவினால் சிறந்த பலனை கொடுக்கும்.
பெரியோர்கள் இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.
- கால்விரல்களுக்கு இடையில், மென்மையான துண்டு அல்லது சிறிய துணிகளை பயன்படுத்தி பாதங்களை நன்கு உலர வைக்க வேண்டும்.
- நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
நீரிழிவு நோயினால் பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். இது வெப்பம் மற்றும் குளிர், உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும்.
நரம்பு பாதிப்பு காரணமாக, பாதங்களில் ஏற்படும் காயங்கள் மெதுவாக குணமாகும். கால்களை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம்.
நீரிழிவு நோயிலானால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பாதங்களை பரிசோதிக்க வேண்டும். கால்விரல்களுக்கு இடையில் மற்றும் கால்களுக்கு அடியில் சரிபார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் கொப்புளங்கள், நிறத்தில் ஏதேனும் மாற்றம், உடைப்பு அல்லது தோலில் விரிசல், ஏதேனும் அசாதாரண வீக்கம் மற்றும் வலியுள்ள பகுதிகள் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். கால்களை சுத்தமாகவும் உலர்வாகவும் வைக்க வேண்டும். தினமும் மிதமான சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவ வேண்டும்.
கால்விரல்களுக்கு இடையில், மென்மையான துண்டு அல்லது சிறிய துணிகளை பயன்படுத்தி பாதங்களை நன்கு உலர வைக்க வேண்டும். கால்விரல்களுக்கு இடையில் ஈரமான அல்லது வியர்வை ஏற்படும்போது பருத்தி துணிகளை பயன்படுத்தி சுத்தமாக துடைக்க வேண்டும்.
வறண்ட சருமத்தைத் தடுக்க, ஈரப்பதமூட்டும் கிரீம் பயன்படுத்தலாம். ஆனால் கிரீம்களை கால்விரல்களுக்கு இடையில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும். காலணிகளை அணிவதற்கு முன் உள்ளேயும் வெளியேயும் சரிபார்க்கவும். தினமும் சாக்ஸ் மாற்ற வேண்டும்.
- அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர் தமிழர்கள்.
- தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்கள் உணவு கலாசாரமாக இருந்தது. தமிழர்களின் முதன்மை உணவாக இருந்துவரும் அரிசியில் வெவ்வேறு ரகங்களை உருவாக்கி, அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர்.
தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை, என்கிறார்கள் வேளாண் ஆய்வாளர்கள். அந்த அரிசி ரகங்களில் ஒன்றான இலுப்பைப்பூ சம்பா, தனித்துவமான மருத்துவ குணம் கொண்டது. மேலும் இது, அரிதான அரிசி ரகம் ஆகும்.
இலுப்பைப்பூவின் நறுமணம் இந்த அரிசியிலும் வெளிப்படுவதன் காரணமாக இந்த அரிசிக்கு அதன் பெயர் வந்தது. இலுப்பைப்பூ சம்பா சாப்பிட மிகவும் மென்மையானது.
பக்கவாத பாதிப்பை தடுக்க முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனராம். மூட்டு வலி, முடக்குவாத நோய்களை போக்கும். நோயால் பலவீனமானவர்களுக்கு இலுப்பைப்பூ சம்பா அரிசி கஞ்சியை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் பலவீனம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
இந்த அரிசி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். முடக்குவாதத்தை தடுக்கிறது. உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.
மிகக்குறைவான குளுக்கோஸ் அளவை கொண்டதால் நீரிழிவு நோயாளிகள் இலுப்பைப்பூ சம்பா அரிசியை தாராளமாக உட்கொள்ளலாம்.
மேலும், உடலில் எலும்புகள் பலவீனம் அடைவதை தடுத்து வலுப்படுத்தும் குணம் இந்த அரிசிக்கு உண்டு.
இதனால், வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கவும், வளரும் குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் உருவாகவும் இலுப்பைப்பூ சம்பா கஞ்சியை தரலாம்.

இலுப்பை பூ சம்பா அரிசியின் நன்மைகள்:
இலுப்பை பூ சம்பா அரிசி வீக்கம், மூட்டு பிரச்சனைகள், செயலிழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கஞ்சி, சிகிச்சை பெறும் அனைவருக்கும், வயதானவர்கள் அல்லது குழந்தைகளுக்கு ஆற்றலை கொடுக்கிறது.
இந்த அரிசி ஒரு இயற்கை தோட்டத்தில் பயிரிடப்பட்டு அரைக்கப்படுகிறது. இதன் விளைவாக, விவசாயத்தில் செயற்கை அல்லது களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
காலப்போக்கில் அடிக்கடி உட்கொண்டால், உடலில் உள்ள கலவை அல்லது களைக்கொல்லி எச்சத்தின் தாக்கங்களை மாற்றுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.
கரிம உணவு பொதுவாக மிகவும் சுவையாக இருக்கும், உங்கள் பசியை அதிகரிக்கிறது மற்றும் போதுமான ஊட்டச்சத்தை பாதுகாக்க அல்லது மேம்படுத்த உதவுகிறது.
இந்த அரிசியில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பக்கவாதத்தைத் தடுக்கிறது மற்றும் கீல்வாதம், மூட்டு சேதம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.
- இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது.
முதல் முக்கிய காலை பழக்கம், எழுந்தவுடன் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான பானங்களையும் உங்கள் தினசரி காலையில் இணைத்துக் கொள்ளலாம்.
காலையில் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்களின் ஒரு பட்டியல் இதோ...
ஜீரா நீர்
ஜீரா அல்லது சீரக விதைகள் செரிமானத்தை விரைவுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதற்கும், செரிமான செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜீரா நீர் ஒரு பெரிய எனர்ஜி பூஸ்டர். எனவே காலையில் உங்கள் எனர்ஜியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் மந்தத்தை நீக்குகிறது.
எப்படிச் செய்வது: ஒரு கப் தண்ணீருக்கு 1 டீஸ்பூன் ஜீரா சேர்த்து கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஓம நீர்
அஜ்வெய்ன்(ஓமம்) அல்லது கரோம் விதைகள் இரைப்பைக் குடல் வலி நீக்கும் பண்புள்ள தைமாலைக் கொண்டுள்ளன. இந்த தைமால் செரிமானத்தை மேம்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணெய், அமிலத்தன்மை நீக்கம் மற்றும் எடை இழப்புகளை ஊக்குவிக்கிறது. கரோம் விதைகளில் இருக்கும் தைமோல் வயிற்றில் இரைப்பைச் சாறுகளை சுரக்க வைக்கிறது, இதனால் செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
எப்படி செய்வது: அரை டீஸ்பூன் அஜ்வெய்ன் விதைகளை 1 கப் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்கவும். அது குளிர்ச்சியடைந்தவுடன், வடிகட்டி குடிக்கலாம்.

இன்பியூஸ்ட் நீர்
நீங்கள் வெற்று நீரைக் குடிக்க சலித்துப்போகும் போதெல்லாம், ஏன் மூலிகைகள், ஆப்பிள் சைடர் வினிகர், வெள்ளரிக்காய் அல்லது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களை தண்ணீரின் சுவையை அதிகரிக்க அதனுடன் சேர்க்க முயற்சி செய்யக்கூடாது? எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு நோயெதிர்ப்பு அதிகரிக்கும் வைட்டமின் சி- யைக் கொண்டுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. வெள்ளரிக்காய் உங்கள் உடலில் நீரேற்றத்திற்கு உதவுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது, மற்றும் துளசி அல்லது புதினா போன்ற மூலிகைகள் ஆன்டி பயோடிக், ஆன்டி - பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

எப்படிச் செய்ய வேண்டும்: ஒரு ஜக்கில் தண்ணீரை ஊற்றி, மேலே உள்ள பொருட்களில் ஒன்றினை அதனுள் சேர்க்கவும். சுவையூட்டுவதற்காக 2 முதல் 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
காலையில் உங்கள் நேரத்தை காப்பாற்றிக் கொள்ள, மேலுள்ள கலவையை இரவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, காலையில் தண்ணீரில் இருந்து மூலப்பொருளை நீக்கி குடிக்க வேண்டும்.
தேங்காய் நீர்
காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பிற்கும் உதவுகிறது. தேங்காய் நீர், பல வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் உட்பட கனிமங்களால் நிறைந்தது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கத் தேவையான முக்கியமான இரண்டு எலக்ட்ரோலைட்களான சோடியம் மற்றும் பொட்டாசியதைக் கொண்டுள்ளது.

காய்கறி சாறு
இயற்கை ஜுஸ்களை குடித்தல் உங்கள் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. காய்கறிகளை ஜுஸ் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன. பச்சை இலை காய்கறிகள், அதாவது கீரை மற்றும் காலே போன்றவை உடலின் ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அவை உங்கள் செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.
எப்படி செய்ய வேண்டும்: நீங்கள் பயன்படுத்துகிற காய்கறிகளை பொடிப் பொடியாக வெட்டி சிறிது நீர் அல்லது தேங்காய் நீரைச் சேர்த்து ப்ளண்டரில் போட்டு அரைக்கவும்.

அலோவேரா (கற்றாழை) ஜூஸ்
அலோவேரா சாறு, இரைப்பை அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க் குறிக்கும் உதவுகிறது. இது செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு ஆகியவற்றைச் சமாளிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.
எப்படி செய்ய வேண்டும்: கற்றாழையை கிழித்து அதிலிருந்து வெள்ளை ஜெல்லை பிரித்தெடுக்கவும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்து ப்ளண்டரில் போடவும்.அதில் 3 கப் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும்.

இஞ்சித் தேநீர்
இஞ்சித் தேநீரை காலையில் எடுத்துக்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் ஆகியவற்றைக் குறைக்கும், ஏனெனில் இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. மேலும், இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது. மேலும் காலை உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் அதைக் குடிப்பதால் நல்ல பயனடைவீர்கள்.
எப்படி செய்ய வேண்டும்: உரித்து நறுக்கிய இஞ்சியை ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். கொதிக்க வைத்து 1 எலுமிச்சையின் சாறைச் சேர்க்கவும். பிறகு அதை வடிகட்டிக் குடிக்கவும்.

தக்காளி ஜூஸ்
உங்கள் காலையை சிறப்பாகத் தொடங்க மற்றொரு சிறந்த வழி தக்காளிச் சாறு. தக்காளி, 95 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டிருக்கும். அது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கும். மேலும் இது உங்கள் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, அதிக அளவிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தொற்றுக்களை அழித்து நோயெதிர்ப்பு அமைப்பைப் பலப்படுத்துகிறது ஒரு பெரிய நச்சுநீக்கி பானமாக செயல்படுகிறது.

எப்படி செய்வது: பிளெண்டரில் 1 துண்டு தக்காளி மற்றும் 3 கப் தண்ணீரை சேர்க்கவும். ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறைச் சேர்த்து மென்மையான கலவை வரும் வரை அரைக்கவும்.
மேற்கண்ட இந்த பானங்களை காலையில் அருந்தி வர உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.
- சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.
- முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்.
"முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள்.
முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.
முருங்கை வேர் + அதன் பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் என்கிறார்கள்.
முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.

இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும் என்கிறார்கள்.. இந்த வேரின் சாறுடன் சம அளவு பால் சேர்த்து குடித்து வந்தால், விக்கல், இரைப்பு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகுவலி போன்றவையும் அகலும். முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும். முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்..
முருங்கைப்பூ : முருங்கைப்பூவை, ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், ஆண் மலடு நீங்கும். முருங்கைப்பூவை உட்கொள்ளும்போது, கண்பார்வை திறன் பெருகுகிறது.. முருங்கைப் பட்டையை தூளாக்கி, சிறிது கல் உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால், வீக்கங்கள் குறையும்.
இப்படி முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன்தருகிறது என்றாலும், இந்த கீரையை மட்டும் வாரம் 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். காரணம், முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் B காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.
எதிர்ப்பு சக்திகள்: முருங்கைக்கீரை, சர்க்கரையை குறைக்கிறது. இதற்குள் ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன. ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். வேர்க்கடலை: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடும்போது, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடையும்.
தலைமுடி வளர: தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்... மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். தோல் வியாதிகள் தீரும். உடல் சூட்டை தணிக்கும்.. தணியும் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

தோல் வியாதிகள்: முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்.. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.
முருங்கை ஜூஸ்: மேலும், மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. ஆனால், 7 நாட்கள் இதை குடித்தபிறகு, ஒரு இடைவெளி விடவேண்டும்... அதேபோல, மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது என்கிறார்கள். இந்த முருங்கைக்கீரை மட்டும்தான், மற்ற கீரைகளைவிட மிகவும் ஸ்பெஷலாக கருதப்படுகிறது.. இதற்கான காரணங்களை பாருங்கள், நீங்களே அசந்துபோயிடுவீங்க
பொக்கிஷம்: மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது. அதனால், எந்த அளவுக்கு முருங்கைக்கீரையை நாம் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் நம்மைவிட்டு விலகியே நிற்கும்..!!
- உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
- கருப்பு திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
உலர் கருப்பு திராட்சை செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது.
பலருக்கும் ரெய்சின்ஸ் எனப்படும் பிரவுன் நிறத்தில் இருக்கும் உலர் திராட்சை பற்றி தெரியும். அதுவே, கருப்பு நிறத்தில் கிடைக்கும் உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா? ரத்த சோகை, செரிமான கோளாறு, ரத்தத்தில் நச்சு, கொலஸ்டிரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கருப்பு உலர் திராட்சை தீர்வாக அமைகிறது.
செரிமானத்தை எளிதாக்குகிறது : பொதுவாகவே, பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். அதிலும், உலர் கருப்பு திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது. தினசரி இதனை உண்பது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
அது மட்டுமின்றி, செரிமானத்தையும் எளிதாக்குகிறது.தினசரி இந்த உலர் பழத்தை சாப்பிடுவதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது. மேலும், திராட்சையில் உள்ள அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், பெருங்குடல் அழற்சி, புற்று, தொற்று உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும்.

எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது ஒரு சில பழங்களில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் ஆகிய கனிமங்கள் இருக்கும். வயதாகும் போது ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புகளில் துளைகள் ஏற்படுவது ஆகியவற்றைத் தடுக்க, தினசரி கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வரலாம்.
உடலில் ஊட்டச்சத்து கிரகிப்பை அதிகப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது: கருப்பு திராட்சை என்பது, கருப்பு உலர் திராட்சையைக் குறிக்கிறது. இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரவுன் நிற உலர் திராட்சையை விட, அதிக இரும்பு சத்து இருக்கிறது. அதே நேரத்தில், வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இதனால், உடலில் சத்து கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தேவையான வைட்டமின் சி, உடலை பலப்படுத்துகிறது. இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் கருப்பு திராட்சைகள் உதவுகின்றன.
இரத்த சோகையை தடுத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது கருப்பு திராட்சையில் நிறைந்துள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் கருப்பு திராட்சையில் இருக்கும் காப்பர், உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. இதனால், ரத்த சோகை தடுக்கப்படுவதோடு, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
கொலஸ்டிராலை குறைத்து இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம்: கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது, ரத்த அழுத்த அளவை சீராக வைக்கிறது. குறிப்பாக, LDL கொலஸ்டிரால் எனப்படும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இதன் மூலம் இதயத்துக்கு அழுத்தம் ஏற்படுத்தாமல், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. தினமும் சிறிதளவு கருப்பு திராட்சை சாப்பிட்டு வந்தால், இதய நோய் அபயாத்தைக் குறைக்கலாம். மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவும்.
புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது/கருப்பு திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து கருப்பு திராட்சை பாதுகாக்கலாம். வாயுத் தொந்தரவு ஏற்படாமல் இருக்க, கருப்பு நிற உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்த பின்பே சாப்பிட வேண்டும்.