என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருவர் பலி"

    • மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.
    • எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலி

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம்-மன்னார்குடி அருகே செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 36). இவரது மனைவி வனிதா.

    இவர் பிரசவத்திற்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.

    இந்நிலையில் மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் உடைகளை எடுத்து கொண்டு சித்தமல்லி கடை தெருவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளிலில் நின்றிருந்த ஜெயபிரகாஷ் (40) என்பவர் மீது முருகானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதுகுறித்து பெருக வாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை மிதித்து யானை பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு.
    • கோவிலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை மிதித்து யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஆகியோரை மிதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவிலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    பிறகு, கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

    இதற்கிடையே, கோவில் யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும், யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×