search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கை கருத்தரிப்பு மையம்"

    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
    • அடுத்தகட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தூரில் இன்று ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ளது போல் தஞ்சையிலும் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை-புதுக்கோட்டை சாலை திருக்கா னூர்பட்டியில் விபத்து கால அதிதீவிர சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பல லட்சம் செலவு ஏற்படுவதால் ஏழை மக்களுக்காகவே முதலமைச்சர் உத்தரவுபடி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த மையத்தின் அனுபவங்கள், செயல்பாடுகள் வைத்து அடுத்தகட்டமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கிண்டியில் அரசு இயற்கை மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, இந்த கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு குழந்தை பிறக்க ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    நாட்டிலேயே முதல்முறையாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் - பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையிலான இந்த வளாகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

    அப்போது அவர்கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, இந்த கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் மகப்பேறுகளில் தாய்மார்களின் இறப்பு 70-க்கும் மேல் இருந்தது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து, அதில்வெற்றியும் கண்டுள்ளது. இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு 54, கடந்த ஆண்டு 52, இந்த ஆண்டு 45 எனபடிப்படியாக குறைந்துள்ளது.

    இந்தியாவில் 25-45 வயது பெண்களிடம் கருத்தரிப்பின்மை பாதிப்பு 3.9 சதவீதம் இருப்பதை உலக சுகாதார மையம்உறுதிப்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைதான் இதற்கான காரணங்களாக உள்ளன.

    அரசு சார்பில் எழும்பூர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்துள்ளோம். 8 படுக்கைகள் கொண்ட அதிநவீன பிரசவ அறை திறந்து வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத அளவுக்கு தரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.


    அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டிருப்பது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். சண்டிகர், டெல்லி, மகாராஷ்டிரா அரசுமருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்கெனவே இருந்தாலும், அங்கு ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். ஒரு குழந்தை பிறக்க ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் முழுமையாக இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன பிரசவஅறை ரூ.89.96 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2-வது செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்குவதற்கான பணி நடந்துவருகிறது. அந்த மையமும் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

    • மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
    • கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்’ என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    மதுரை

    மதுரை கே.கே. நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அதில் 'மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம், செராமிக் பற்கள் கட்டுதல், காக்ளியர் இம்பிளான்ட் ஆகிய சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளதா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.

    அதற்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் கொடுத்து உள்ள உள்ள பதிலில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை. இருந்த போதிலும் அங்கு விரைவில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது.

    இது தவிர மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செராமிக் பற்கள் கட்டுதல், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை பிரிவில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் குழந்தை இல்லா தம்பதி யர் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதனால் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதி யாகவும் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு சில குடும்பத்தை விவகாரத்து வரை கொண்டு சென்று விடுகிறது.

    எனவே 'எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்' என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை நன்கு புரிந்து கொண்ட தனியார் மையங்கள், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்கின்றன. எனவே அங்கு பணக்காரர்களுக்கு மட்டுமே குழந்தையை பாக்கியம் கிட்டும் என்ற நிலை உள்ளது.

    தமிழகத்தில் 155 தனியார் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மதுரையில் மட்டும் 11 மையங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இல்லை.

    எனவே மதுரை அரசினர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்படி செய்தால் குழந்தை இல்லாத ஏழை- எளிய தம்பதிகளும் இங்கு வந்து இலவசமாக சிகிச்சை பெற இயலும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×