search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி ரெயில் நிலையம்"

    • அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை.
    • பயணிகள் உயிர் தப்பினர்.

    திருச்சி:

    ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. அங்குள்ள நடைமேடை பகுதியில் எஞ்சின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

    அப்போது அந்த ரெயிலின் கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. இதைக்கண்டு, சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளும், ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் உயிர் தப்பினர்.

    உடனே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலைய பொறியாளர்கள் விரைந்து வந்து ரெயில் பெட்டிகளை இணைத்தனர்.

    அதன்பிறகு ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பெட்டிகள் இணைப்பு பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை சென்றடைந்தது. ரெயிலில் இருந்து பெட்டிகள் தனியாக கழன்று ஓடிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
    • பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி:

    சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்துவிட்டது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு லைக்குகளை பெறுவதற்காக எல்லை மீறிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ், பனியன் அணிந்து மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடலுக்கு கவர்ச்சிகரமாக ஆடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது. பொதுவாக பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் இது போன்ற வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்கள் திருச்சி தில்லை நகரை சேர்ந்த நடன பள்ளி மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ரெயில்வே போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதை அறிந்த அந்த நடன பெண்கள் தங்கள் பதிவுகளை நீக்கி உள்ளனர்.

    • திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பொலிவு பெற்று வருகிறது
    • பாரம்பரியமும், பழமையும் சற்றும் மாறாமல் புதிதாக ரூ.4.20 கோடி செலவில் முன்பதிவு டிக்கெட் வசதியுடன் நுழைவு வாயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது

    திருச்சி:

    தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சிக்கு பல்வேறு அடையாளங்கள் இருந்தபோதிலும் அதில் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தனிப்பெருமை உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் தென்னக ரெயில்வேயின் தலைமையிடமாக திகழ்ந்த திருச்சி ரெயில் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. வட, தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்கு முக்கிய சந்திப்பு பகுதியாக தற்போது வரை இருந்து வருகிறது.

    சாலை போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அரசு அளித்தபோதிலும், ரெயில் போக்குவரத்திற்கு உள்ள மவுசு சற்றும் குறையவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தினமும் 30 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர். அதேபோல் 80 ஆயிரம் பயணிகள் நாள்தோறும் கடந்து செல்கின்றார்கள்.

    வரலாற்று முக்கியத்துவம் பெற்ற திருச்சி ரெயில் நிலையத்தை பழமை மாறாமல் நவீனப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள பணிகளில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அதிக பயணிகளை கையாளும் வகையில், ெரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் அருகே புதிதாக ரூ.3.15 கோடி செலவில் இரண்டாவது நுழைவு வாயில் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    இதன் மூலம் டிக்கெட் கவுண்டரில் பயண சீட்டை வாங்கிக்கொண்டு அதன் பின்பகுதிக்கு வந்தால் இப்புதிய நுழைவு வாயிலை அடைய முடியும். இங்கு ஒரே நேரத்தில் 80 பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேக்டர்) மூலம் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களுக்கும் எளிதாக செல்ல முடியும். இது வயது முதிர்ந்தோர்கள் சிரமமின்றி அனைத்து நடைமேடைகளுக்கும் செல்ல ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல தற்போதைய கல்லுக்குழி செல்லும் நுழைவுவாயிலுக்கு மாற்றாக புதிதாக ஏற்படுத்தபட்டுள்ள 8-வது நடைமேடை வழியாக ெரயில் நிலையத்துக்குள் நுழையும் வகையில் பாரம்பரியமும், பழமையும் சற்றும் மாறாமல் புதிதாக ரூ.4.20 கோடி செலவில் முன்பதிவு டிக்கெட் வசதியுடன் நுழைவு வாயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இது தவிர ெரயில் நிலைய வளாகத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் இருசக்கர வாகனங்கள், 400 கார்கள் வரை நிறுத்துவதற்கான இட வசதியும் மேம்படுத்தபட்டுள்ளன.

    இது குறித்து திருச்சி கோட்ட வணிகப்பிரிவு முதுநிலை மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், ெரயில் நிலையத்தில் 2-வது நுழைவு வாயில் முதல் 8-வது நடைமேடை வரையில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களிலும் லிப்ட் வசதியுடன் இணைக்கப்பட்ட எஸ்கலேட்டர் வசதி ரூ.10.60 கோடி செலவில் 6 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர விமான நிலையத்தில் உள்ளது போலவே அனைத்து வசதிகளும் அடங்கிய நவீன பார்சல் பிரிவு, லிப்ட் வசதிகள், அதிநவீன கழிவறைகள், 3 பெரிய ஓட்டல்கள், 14 சிறிய சிற்றுண்டியகங்கள், வாடகை இ-பைக் வசதிக்கான மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்,

    நவீன கட்டுப்பாடு அறைகள், அதிநவீன அவசர சிகிச்சை மையம், 5 இடங்களில் ஏடிஎம் மிஷின்கள், செல்பி பாயின்ட, சுற்றுலாத்தகவல் மையம், ஒரே நேரத்தில் 800 பயணிகள் அமரும் வகையில் நவீன இருக்கை வசதிகள், குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதன வசதிகள் இல்லாத பயணிகள் காத்திருப்பு அறை வசதிகள் என அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

    2-வது நுழைவு வாயில், கல்லுக்குழி நுழைவு வாயில், எஸ்கலேட்டர் என அனைத்து பணிகளும் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன. வரும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் இந்த அனைத்து நவீன வசதிகளும், பயணிகளுக்கு கிடைக்கும் என்றார்.

    இந்த நவீன வசதிகள் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான கட்டணம், நிறைவான பயணத்தை விரும்பும் சாமானியர்களிடம் இந்த வசதிகள் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    ×