என் மலர்
நீங்கள் தேடியது "அம்பேத்கார்"
- இன்று நினைவு தினம்
- நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில்:
அம்பேத்கார் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தினகரன் மாலை அணிவித்தார்.
தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் பூதலிங்கம், ஆதி திராவிட அணி அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், செல்வன், பிராங்கிளின், மாநகர செயலாளர் ஆனந்த், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மாலை அணிவித்தார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன்சுந்தர்நாத், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாதவன் மற்றும் சந்திரன், சந்துரு,சகாயராஜ், வெங்கடேஸ்,ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் மனோகரன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், அலெக்ஸ்,எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் மணிகண்டன், ராஜபாண்டியன், டைசன், செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- வக்கீல்.கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.
- நாஞ்சிக்–கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பாரதரத்னா டாக்டர் அம்பேத்காரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் லெட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணித்தலைவர் கலைச்செல்வன், சண்முகநாதன், நாஞ்சிக்கோட்டை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறியாளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நாடாளுமன்றத்தில் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமித்ஷா, நாளை மாலை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நாளை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த டிசம்பர் 17 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை மிகமிக இழிவாகப் பேசியதோடு, காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறியிருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக தேர்வு பெற்று, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவராக பொறுப்பேற்று, 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து, இந்தியாவில் உள்ள சாதி, மத, வேறுபாடுகளை கடந்து, இன்றைக்கும் பட்டியலின, சிறுபான்மையின, பின்தங்கிய மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பு கவசமாக, இன்றும் உலகமே போற்றுகின்ற வகையில் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்.
அம்பேத்கர் அவர்களுக்கு பெருமை சேர்ப்பது அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் தானே தவிர, அரசியல் ஆதாயத்தோடு பிரதமர் மோடி அமைக்கிற எந்த நினைவுச் சின்னங்களும் அல்ல.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை (31.01.2025) வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துகிற வகையில் நாளை சென்னைக்கு வரும் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, 'அமித்ஷாவே திரும்பிப் போ" என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிவித்துள்ளார்.