என் மலர்
நீங்கள் தேடியது "டிராவிஸ் ஹெட்"
- சன்ரைசர்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- இன்றைய போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்னுக்கு மேல் குவித்து வியக்க வைத்த ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது.
இருப்பினும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறும்பட்சத்தில் அந்த அணி தடாலடியாக சரிவை சந்திக்கிறது.
கடந்த 4 ஆட்டங்களில் 3 சறுக்கலை சந்தித்துள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் நிர்ணயித்த 174 ரன் இலக்கை மும்பை அணி 17.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தது அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. எனவே அந்த அணி சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 444 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (339), அபிஷேக் ஷர்மா (326), நிதிஷ்குமார் ரெட்டியும், பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமாரும் வலுசேர்க்கிறார்கள்.
கடந்த சில ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மாவும், ஹென்ரிச் கிளாசெனும் நிலைத்து நின்று ஆடாதது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. மேலும் ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.
லக்னோ அணி
லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.
லக்னோ அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மண்ணை கவ்வியது. 236 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் 137 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (36 ரன்), லோகேஷ் ராகுல் (25 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த மோசமான தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் லக்னோ அணி உள்ளது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதம் உள்பட 431 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 352 ரன்), நிகோலஸ் பூரன் (315 ரன்), குயின்டான் டி காக் நல்ல நிலையில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர்
மயங்க் யாதவ் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதுடன், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணியின் பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பந்து வீச்சில் யாஷ் தாக்குர், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கிறார்கள். குருணல் பாண்ட்யா ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.
வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.
லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிலோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக், மொசின் கான் அல்லது யாஷ் தாக்குர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகி டக் அவுட்டானார்.
நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டி இறுதிப் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா கோப்பை வென்றது. அந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்று ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.
இந்த நரேந்திர மோடி மைதானத்தில் அன்று 137 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட் இன்று டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.
- சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் விளாசினார்.
சவுத்தம்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியால் 19.2 ஓவர்களில் 151 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்னும் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். மேலும் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அவர் சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் (4,4,6,6,6,4) எடுத்து முத்திரை பதித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஹெட் இடம் பிடித்துள்ளார்.
அந்த பட்டியல் பின்வருமாறு:-
ரிக்கி பாண்டிங் 30 ரன்கள் (நியூசிலாந்து) 2005
ஆரோன் பிஞ்ச் / கிளென் மேக்ஸ்வெல் 30 (பாகிஸ்தான்) 2014
டான் கிறிஸ்டியன் 30 (வங்கதேசம்) 2021
மிட்செல் மார்ஷ் 30 (ஸ்காட்லாந்து) 2024
டிராவிஸ் ஹெட் 30 (இங்கிலாந்து) 2024
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கார்டிப் நகரில் நாளை நடக்கிறது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 315 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் வெற்றி பெற்றது.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக ஆடி 315 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 95 ரன்னிலும், வில் ஜாக்ஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 39 ரன்னும், ஜேமி சுமித் 23 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 35 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய சார்பில் மார்னஸ் லாபுசாக்னே, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 10 ரன்னிலும், ஸ்மித், கேமரூன் கிரீன் தலா 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக் ஆடிய டிராவிஸ் ஹெட் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு லபுசாக்னே ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 148 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், ஆஸ்திரேலியா 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 129 பந்தில் 5 சிக்சர், 20 பவுண்டரி உள்பட 154 ரன்னும், லபுசாக்னே 61 பந்தில் 77 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- 20.4 ஓவரின்போது மழை குறுக்கீடு செய்தது. அதன்பின் ஆட்டம் நடைபெறவில்லை.
- டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அப்போது ஆஸ்திரேலியா 49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பிரிஸ்டோலில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து பென் டக்கெட் (107) சதத்தால் 309 ரன்கள் குவித்தது.
பின்னர் 310 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 58 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் 26 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன ஸ்டீவ் ஸ்மித் 48 பந்தில் 36 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 20 பந்தில் 28 ரன்களும் எடுத்திருந்தபோது மழை பெய்தது. அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்கள் வீசப்பட்டால் மட்டுமே டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்படும். இங்கிலாந்து 4 பந்துகள் அதிகமாக வீசியதால் விதி பயன்படுத்தப்பட்டு இங்கிலாந்து தோல்வயிடைந்தது.
டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- பும்ரா பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
- நாங்கள் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறோம் என பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 8 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு ஆயத்தமாகும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் 30 வயதான டிராவிஸ் ஹெட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பெர்த் டெஸ்டில் 89 ரன்கள் விளாசிய அவர் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளில் தொடரின் முதல் டெஸ்டில் தோற்று, அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி தொடரை வென்ற அணிகள் நிறைய உள்ளன. கடந்த ஆண்டில் நாங்கள் சில சவாலான டெஸ்ட் போட்டி மற்றும் தொடர்களை எதிர்கொண்டு விளையாடி இருக்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு வாரம் சரியில்லாமல் போய் விட்டது. அது பரவாயில்லை. மேலும் 4 வாய்ப்புகள் உள்ளன. முந்தைய ஆண்டுகளில் செய்தது போல் கடினமான சூழலில் இருந்து மிக வேகமாக மீண்டெழுந்து வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கிரிக்கெட் வரலாற்றில் அனேகமாக தலைச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார். அவர் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம். அவருக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, நாங்கள் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறோம் என பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும். மிகுந்த சவால் அளிக்கக்கூடிய அவரை இன்னும் சில முறை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
முதலாவது டெஸ்டில் தடுமாறிய எங்களது பேட்ஸ்மேன்கள் என்னிடம் வந்து பேட்டிங் ஆலோசனை கேட்பார்களா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் அதற்காக என்னை அணுகமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாணியில் ஆடக்கூடியவர்கள். இனி 2-வது டெஸ்டுக்கு தயாராவது குறித்து அடுத்த 3-4 நாட்கள் நாங்கள் விவாதிப்போம். உண்மையிலேயே பும்ரா மற்ற பந்து வீச்சாளர்களை காட்டிலும் தனித்துவமானவர். அவரை திறம்பட சமாளிப்பதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களுடைய வழியை கண்டறிய வேண்டும்.
2020-ம் ஆண்டு இதே அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் இந்தியாவை 36 ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றோம். அதில் எல்லாமே சீக்கிரம் முடிந்து விட்டது. அந்த வெற்றியை ரொம்ப உற்சாகமாக கொண்டாடினோம். அது போன்று மீண்டும் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்குமா? என்பது தெரியாது.
இவ்வாறு ஹெட் கூறினார்.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 140 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அபாரமாக விளையாடி 111 பந்துகளில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் 140 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களிலுமே டிராவிஸ் ஹெட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பட்டியல்:-
1. டிராவிஸ் ஹெட் - 111 பந்துகள்
2. டிராவிஸ் ஹெட் - 112 பந்துகள்
3. டிராவிஸ் ஹெட் - 125 பந்துகள்
4. ஜோ ரூட் - 139 பந்துகள்
5. ஆசாத் ஷபீக் - 140 பந்துகள்
- சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார்.
- அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார்.
அடிலெய்டு:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் சதம் (140 ரன்கள்) மற்றும் லபுஸ்சேனின் அரைசதத்தின் (64 ரன்கள்) உதவியுடன் 337 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 157 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். மேலும் டிராவிஸ் ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து டிராவிஸ் ஹெட் கூறியதாவது, நான் நன்றாக பந்து வீசினாய் என்றுதான் கூறினேன். ஆனால் சிராஜ் என்னை தவறாக புரிந்துகொண்டார்.
- டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாக கத்தினார்.
- சிராஜ் என்னை தவறாக புரிந்து கொண்டார் என்று டிராவிஸ் ஹெட் தெரிவித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது . இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் சதம் (140 ரன்கள்) மற்றும் லபுஸ்சேனின் அரைசதத்தின் (64 ரன்கள்) உதவியுடன் 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 19 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார்.
அப்போது டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிராவிஸ் ஹெட், "நான் நன்றாக பந்து வீசினாய் என்றுதான் கூறினேன். ஆனால் சிராஜ் என்னை தவறாக புரிந்துகொண்டார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், டிராவிஸ் ஹெட் பொய் சொல்கிறார் என்று சிராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய சிராஜ், "டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு நான் கொண்டாடினேன். பின்னர் அவர் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். இதை தொலைக்காட்சியிலும் நீங்கள் பார்க்கலாம். அப்போது நன்றாக பந்து வீசினாய் என்று டிராவிஸ் ஹெட் சொல்லவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பொய் சொன்னார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அவர் பேசும் விதம் தவறானது. அது எனக்கு பிடிக்காததால் கோபப்பட்டேன்" என்று தெரிவித்தார்.
- சிராஜ் வீசிய புல்டாஸ் பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் போல்டானார்.
- அதனை மிகவும் ஆக்ரோஷமாக சிராஜ் கொண்டாடினார்.
அடிலெய்டு:
அடிலெய்டு டெஸ்டில் முகமது சிராஜ் வீசிய புல்டாஸ் பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் போல்டானார். அதனை மிகவும் ஆக்ரோஷமாக சிராஜ் கொண்டாடினார். முகமது சிராஜ், அவரை பெவிலியன் செல்லுமாறு ஆக்ரோஷமாக கையால் சைகை செய்தார். இதனையடுத்து ஹெட்டும் பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு பெவிலியன் திரும்பினார்.
முகமது சிராஜ் நன்றாக பந்துவீசியதாக கூறியதாக டிராவிஸ் ஹெட்டும், டிராவிஸ் ஹெட் பொய் கூறுவதாக முகமது சிராஜும் தெரிவித்தனர்.
டிராவிஸ் ஹெட்-முகமது சிராஜ் இடையேயான இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலியா கேப்டன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மா கூறியதாவது:-

ஆக்ரோஷமாக செயல்படுவதற்கும், அதிகப்படியாக ஆக்ரோஷமாக செயல்படுவதற்கும் இடையே மிக மெல்லிய கோடு இருக்கிறது. அணியின் கேப்டனாக யாரும் அந்த கோட்டை கடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எனது வேலை. ஆனால், வீரர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளலாம். அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது முகமது சிராஜுக்கு நன்றாக தெரியும். அணிக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அவர் செய்வார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும்போது இது போன்ற விஷயங்கள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கம்மின்ஸ் கூறியதாவது:- டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன். அவர் மிகுந்த முதிர்ச்சியுடையவர். அவர் தொடர்புடைய விஷயங்களை அவரே பேசுவார். வீரர்கள் அவர்களாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும். அணியின் கேப்டனாக என்னுடைய தலையீடு தேவைப்பட்டால், நான் கண்டிப்பாக தலையிடுவேன். ஆனால், நான் தலையிடுவதற்கான தேவை இருந்ததாக ஒருபோதும் உணரவில்லை என்றார்.
- 2-வது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹேட் தேர்வு செய்யப்பட்டார்.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
அடிலெய்டு:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் டிராவிஸ் ஹெட்டுக்கு எப்படி பீல்டிங் அமைப்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கிண்டலடித்துள்ளார்.
அடிலெய்டு மைதானத்தில் 2 1/2 நாட்களில் போட்டி முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்ள மைதான நிர்வாகம் அனுமதித்தது. அதன் காரணமாக ஏராளமான ரசிகர்கள் அடிலெய்ட் மைதானத்திற்குள் வந்து தங்களுடைய நேரத்தை செலவிட்டனர்.
அந்த புகைப்படத்துடன் "டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியாவுக்கு இந்த பீல்டிங்தான் தேவைப்படுகிறது" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
- அடிலெய்டு டெஸ்டில் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- அப்போது முகமது சிராஜ் வெளியே போ... என்ற வகையில் சைகை காட்டுவார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் 140 ரன்கள் குவித்ததுதான்.
அவர் இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 141 பந்தில் 17 பவுண்டரி, 4 சிக்சருடன் 140 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் முகமது சிராஜ் பந்தில் க்ளீன் போல்டானார். அப்போது டிராவிஸ் ஹெட்டை பார்த்து முகமது சிராஜ் முறைப்பார். அதற்கு டிராவிஸ் ஹெட் ஏதோ கூறுவார். இதனால் முகமது சிராஜ் வெளியே போ... வெளியே போ.. என சைகை காட்டுவார்.
இருவரும் மைதானத்தில் மோதிக்கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. வார்த்தைபோர், ஸ்லெட்ஜிங்கை தாண்டி முகம் சுழிக்க வைத்தது.
இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடுவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து முகமது சிராஜிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இருவருக்கும் தலா ஒரு தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டது.