என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவண்டுகள்"

    • விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேலுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை முற்றிலும் அழித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்பலாப்பட்டு மற்றும் சாத்திப்பட்டுகிராமங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை முற்றிலும் அழித்தனர்.

    • 3 பேரும் ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர்.
    • பனை மரத்தில் இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது.

    திருவாரூர்:

    நன்னிலம் அருகே உள்ள தென்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அலமேலு மங்கை (வயது54), தனலட்சுமி(65), சிவா(32). இவர்கள் 3 பேரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    வயலில் பருத்தி எடுத்து கொண்டிருந்த போது, பனை மரத்தில் கூடுக்கட்டி இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது.

    இதில் மயக்கம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்.
    • பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் சென்ற 6 பேரையும் கடித்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மாவட்டக்குடி, ஆலாத்தூர், விக்கிரபாண்டியம், பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாடம் வேலைக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்

    இந்த நிலையில் நேற்று பெரியகுடியைச் சேர்ந்த காவியா (வயது17) வர்ஷா (19), சேந்தமங்கலத்தை சேர்ந்த சிவகுமார் (40), நெருஞ்சினங்குடியை சேர்ந்த துரையப்பன் உள்பட 6 பேர், நெருஞ்சனக்குடி சாலை வழியாக கோட்டூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சாலையோரத்தில் இருந்த பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் நடந்து சென்ற 6 பேரையும் கடித்தது.

    இதில் படுகாயம் அடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து இருள் நீக்கி ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த தகவலின் பெயரில் கோட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பனை மரங்களில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை அழித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×